அன்புள்ள ராட்சசி – பகுதி 43

மீரா இறுக்கமான குரலில் அமைதியாக சொல்ல.. இப்போது மனோகரின் முகத்தில் ஒருவித ஏமாற்றம்..!! அவன் ஏதோ எதிர்பார்த்திருந்தது போலவும்.. அதற்கு எதிர்ப்பதமான ரியாக்ஷனை மீரா வெளிப்படுத்தியது போலவும்.. அவனது முகபாவனை இருந்தது..!! ஒரு சில வினாடிகள் மீராவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தவன்.. பிறகு திடீரென மென்மையான குரலில் கேட்டான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இந்த வீடு உனக்கு ரொம்ப பிடிக்குமா..??”

“ஏன் கேக்குறீங்க..??”

“சொல்லேன்.. ப்ளீஸ்..!!”

“நான் பொறந்து வளர்ந்த வீடு.. என் அம்மா வாழ்ந்த வீடு.. பிடிக்குமான்னு கேட்டா என்ன அர்த்தம்..??”

“ஹ்ம்ம்..!! என்ன ப்ளான் வச்சிருக்குற..??”

“புரியல..!!”

“இல்ல.. வீட்டை காலி பண்ணினப்புறம்.. எங்க போற மாதிரி ப்ளான் வச்சிருக்குற..??”

“ஹ்ஹ.. அதைப்பத்திலாம் உங்களுக்கு என்ன அக்கறை..??”

“ஏன்.. எனக்கு அக்கறை இருக்க கூடாதா..??”

“ம்ம்.. உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்..!!”

“கேட்டதுக்கு பதில் சொல்லு..!!”

“இப்போதைக்கு எந்த ப்ளானும் இல்ல..!!”

“ஹ்ம்ம்..!! இந்த வீட்டை விட்டு போறது.. உனக்கு கஷ்டமா இல்லையா..??”

“கஷ்டமாத்தான் இருக்குது.. என்ன பண்றது..??”

“நான் வேணா ஒரு யோசனை சொல்லட்டுமா..??”

“என்ன..??” மீரா கேட்டுக்கொண்டிருந்தபோதே,

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…” என்று அழைப்புமணி மீண்டும் அலறியது.

அழைப்புமணி ஓசை கேட்டு.. மனோகர் சுருங்கிய புருவத்துடன் கதவை திரும்பி பார்க்க.. மீரா மிரட்சியான விழிகளுடன் அதே கதவை வெறித்தாள்..!! ஓரிரு வினாடிகள் தயங்கிய மனோகர்.. பிறகு கதவை நோக்கி நடந்தான்..!! அசோக்தான் வந்திருகிறான் என்பதை அனுமானித்திருந்த மீரா.. ‘இப்போது என்ன செய்வது’ என்று ஒருகணம் திகைத்தாள்..!! அப்புறம் அவசரமாய் யோசித்து.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. கதவை நோக்கி ஓடினாள்..!!

கதவை திறக்கும் குமிழின் மீது மனோகர் கைவைக்க.. அடுத்தநொடியே அவனுடைய கையை மீராவின் கை வந்து பற்றி.. திறக்கவிடாமல் தடுத்தது..!! மீராவுடைய முகத்தை ஏறிட்ட மனோகர்.. நெற்றியை சுருக்கி, ‘என்ன..?’ என்பது மாதிரி கேள்வியாக பார்த்தான்..!! மீரா உதட்டின் மீது கைவைத்து.. ‘பேசாதீங்க’ என்பது மாதிரி சைகை செய்தாள்.. பிறகு.. பற்றிய கையை பிடித்து இழுத்து.. மனோகரை அடுத்த அறைக்கு அழைத்து சென்றாள்..!!

“ஹேய்.. என்னாச்சு..??”

“வாங்க.. சொல்றேன்..!!”

அடுத்த அறைக்குள் நுழைந்ததும்.. அங்கிருந்தே வாசற்கதவை ஒருமுறை எட்டிப்பார்த்துக்கொண்ட மீரா.. அப்புறம்.. தன்னையே குழப்பமாக பார்த்துக்கொண்டிருந்த மனோகரிடம் திரும்பி.. கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்..!!

“இங்க பாருங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! வெளில ரெண்டு பேர் வந்திருக்காங்க..”

“யா..யார் அவங்க..?? எதுக்கு வந்திருக்காங்க..??”

“ஹையோ.. என்னை கொஞ்சம் பேச விடுங்க..!!”

“சரி சொல்லு..!!”

“என்னைத்தான் தேடி வந்திருக்காங்க.. அவங்களுக்கு என் பேர் தெரியாது.. மீரான்னு சொல்வாங்க.. ஆனா.. அவங்க தேடி வந்திருக்குறது என்னைத்தான்..!! என்னைப் பத்தி விசாரிப்பாங்க.. ஐ மீன்.. என்னோட அடையாளம்லாம் சொல்லி விசாரிப்பாங்க.. அந்த மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்டுல இருக்காளான்னு கேட்பாங்க..!! தயவுசெஞ்சு அவங்கட்ட.. ‘அந்த மாதிரி யாரும் இங்க இல்ல’ன்னு சொல்லிடுங்க.. ப்ளீஸ்..!! சொல்லிடுறீங்களா.. ம்ம்..??”

“எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“உங்களுக்கு ஒன்னும் புரியவேணாம்.. ஜஸ்ட்.. நான் சொன்னதை மட்டும் செய்ங்க போதும்.. ப்ளீஸ்..!!”

“ம்ம்..!!”

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…”

மறுபடியும் அழைப்புமணி சப்தம் எழுப்பி.. அவர்களை அவசரப்படுத்தியது..!! ஓரிரு வினாடிகள் குழப்பமாகவும், அவஸ்தையாகவும் பார்த்துக்கொண்டிருந்த மனோகர்.. அப்புறம் ஒரு பெருமூச்சுடன் திரும்பி.. ஹாலுக்கு நடந்தான்..!! மீரா அந்த அறைக்குள்ளேயே.. சுவற்றுடன் சேர்ந்து ஒன்றிக்கொண்டாள்.. அடுத்த அறையில் நடக்கப்போகிற சம்பாஷணைகளை கேட்பதற்காக.. காதுகளை இப்போதே கூர் தீட்டிக்கொண்டாள்..!!

மனோகர் சென்று கதவை திறக்க.. வெளியே நின்றிருந்த அசோக்கும், சாலமனும் அவனது பார்வைக்கு வந்தனர்..!!

“எஸ்..!! யார் வேணும்..??” மனோகர் இயல்பாக கேட்டான். சாலமன் ஒருவித இளிப்புடன் அவனுக்கு பதில் சொன்னான்.

“ஹலோ ஸார்..!! நாங்க ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல இருந்து வர்றோம்..!!”

“ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்டா..??” மனோகர் முகத்தை சுளித்தான்.

“இ..இந்த.. மக்கள்தொகைலாம் கணக்கு எடுக்குறவங்க ஸார்..!!”

“அது ஸென்ஸஸ்ல..??”

“ஓ.. ஆமால்ல..?? ஸாரி ஸார்.. நான் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்கு..!!”

“ம்ம்..!! என்ன விஷயம்னு சொல்லுங்க..!!”

“அ..அது ஒன்னும் இல்ல ஸார்.. சப்பை மேட்டரு..!! ம்ம்ம்.. உங்க வீட்டுல யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க கொஞ்சம் பாக்கலாமா..??”

“என்னது..????”

“அஅஅ.. ஐ மீன்.. யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..??”

சற்றுமுன் அலுவலகத்தில் பிரின்டவுட் எடுத்து வைத்திருந்த சில காகிதங்களையும்.. ஒரு பதிவேட்டினையும்.. ஒரு மூடி திறக்கப்பட்ட பேனாவையும்.. கையில் வைத்துக்கொண்டிருந்த சாலமன்.. முகத்தையும் இப்போது மிக சீரியஸாக மாற்றிக்கொண்டிருந்தான்..!! அசோக் எதுவும் பேசமால்.. முகத்திலும் எந்த சலனமும் காட்டாமல்.. அவனுக்கு அருகே அமைதியாக நின்றிருந்தான்..!! அவர்கள் இருவரையும் ஓரிரு வினாடிகள் ஏற இறங்க பார்த்த மனோகர்.. பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு பட்டென சொன்னான்..!!

“நான் மட்டுந்தான்..!!”

“என்ன ஸார்.. இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டுந்தானா..??”

“வொய்ஃப் ஊருக்கு போயிருக்கா..!!”

“ஓ..!!”

பெயர், வயது விவரங்களை மனோகர் சொல்ல.. சாலமன் அதை பதிவேட்டில் குறித்துக்கொண்டான்.. அல்லது.. பதிவேட்டில் குறித்துக் கொள்வதுமாதிரி பாவ்லா செய்தான்..!! குறித்து முடித்து நிமிர்ந்தவன்..

“அப்புறம்..??” என்றான் மனோகரிடம்.

“அப்புறம் என்ன..??”

“வே..வேற யாரும் இல்லைங்களா..??”

“வேற யாரும்னா..??” மனோகரின் கேள்விக்கு இப்போது அசோக் பதில் சொன்னான்.

“ஒரு.. இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுக்குள்ள.. செவப்பா, ஸ்லிம்மா, அழகா.. ஃப்ரீயா லூஸ் ஹேர்லாம் விட்டுக்கிட்டு.. அப்டிலாம் யாரும் உங்க வீட்ல இல்லைங்களா..??” அசோக் கூலாக கேட்க, மனோகர் அவனை முறைத்தான்.

“இதுலாம் கணக்கெடுக்க சொல்லிருக்காங்களா.. உங்க ஸென்ஸ்…ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல..??” என்று கிண்டலாக கேட்டான். இப்போது சாலமன் இடையில் புகுந்து..

“அ..அது.. அது ஆக்சுவலா.. இது நாங்களா..” என்று உளறலாக ஆரம்பித்து,

“ப்ளீஸ் ஸார்.. சொல்லுங்க.. அப்படி யாராவது இருக்காங்களா..??” என்று கெஞ்சலாக முடித்தான். மனோகர் இப்போது மீண்டும் ஒருமுறை இருவரையும் முறைத்துப் பார்த்துவிட்டு,

“இல்ல.. அப்படி யாரும் இங்க இல்ல..!!” என்றான்.

“அப்படின்னா ஒருவேளை..” என்று அசோக் மீண்டும் ஆரம்பிக்க, இப்போது பொறுமையிழந்து போன மனோகர்,

“ஹலோ.. ரெண்டு பேரும் கொஞ்சம் எடத்தை காலி பண்றீங்களா.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!” என்று எரிச்சலாக சொன்னான்.

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த அசோக்.. ஒருசில வினாடிகள் மனோகரின் முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! அப்புறம் ‘ஹ்ம்ம்ம்ம்..’ என்று ஒரு சலிப்பு பெருமூச்சுடன் முகத்தை திருப்ப.. அவனுடைய பார்வையில் எதேச்சையாக அந்த ஆளுயரக்கண்ணாடி பட்டது..!! அந்த வீட்டு ஹாலின் ஒரு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி.. அவனுக்கெதிரே தூரத்தில் இருந்த கண்ணாடி.. சற்றுமுன்பாக குளித்து முடித்து வந்த மீரா, அசோக்கின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாளே.. அதே ஆளுயரக்கண்ணாடி..!! அந்த கண்ணாடியில் இப்போது.. அடுத்த அறையில் பதுங்கியிருந்த மீராவின் பிம்பம் விழுந்திருந்தது.. அந்த பிம்பம் அசோக்கின் கண்களில் விழுந்திருந்தது..!!!!

மீராவின் பிம்பம் என்றால்.. அவளுடைய முழு பிம்பமும் அல்ல.. சுவற்றோடு ஒடுங்கியிருந்த அவளது பக்கவாட்டு பிம்பம்..!! அவளுடைய முகம் தெரியவில்லை..!! சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு இளம்பெண் ஒருத்தி.. பக்கத்து அறையில் பதுங்கியிருக்கிறாள் என்கிற அளவில்தான்.. அந்த பிம்பத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிந்தது..!! அதை கவனிக்க நேர்ந்த அசோக்கின் முகத்தில் ஒருவித திகைப்பு..!!

“ஸ்..ஸார்.. வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னீங்க..??”

“ஆ..ஆமாம்..!!”

“உ..உள்ள யாரோ இருக்காங்க ஸார்..!!” அசோக் அவ்வாறு திணறலாக சொல்ல, இப்போது மனோகரிடம் ஒரு பதற்றம்.

“இ..இல்லையே.. யாரும் இல்ல..!!”

“இருக்காங்க ஸார்.. பக்கத்து ரூம்ல யாரோ இருக்காங்க..!!”

“ஹலோ.. நான்தான் யாரும் இல்லைன்னு சொல்றேன்ல.??” மனோகர் இப்போது டென்ஷனானான்.

“இல்ல ஸார்.. இருக்காங்க..!!”

அசோக் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைவது மாதிரி முன்னே நகர.. மனோகர் அவனது மார்பில் கைவைத்து அவனை பின்பக்கமாக தள்ளிவிட்டான்..!!

“ப்ச்.. சொன்னா கேட்கமாட்டீங்களா..?? பிரச்னை பண்றதுக்குனே வந்திருக்கீங்களா.. இப்போ போறீங்களா, இல்ல போலீசை கூப்பிடவா..??”

மனோகர் அந்தமாதிரி எகிறவும்.. இப்போது சாலமன் இடையில் புகுந்தான்..!! தடுமாறிய அசோக்கை தாங்கிப் பிடித்துக்கொண்டவன்.. மனோகரை ஏறிட்டு சற்றே சாந்தமான குரலில் சொன்னான்..!!

“ஸார் ஸார்.. விடுங்க ஸார்.. அவன் ஏதோ தெரியாம..!! ஒன்னும் ப்ராப்ளம் இல்ல ஸார்.. நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க.. நாங்க கெளம்புறோம்.. ஓகேவா..?? ஏய்.. வாடா..!!”

அசோக்கின் கையைப்பற்றி அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சாலமன் கிளம்ப.. மனோகர் ‘படார்ர்…’ என கதவை அறைந்து சாத்தினான்..!! அவசரமாய் திரும்பி நடந்து அடுத்த அறைக்கு சென்றான்..!! கவலையும், பரபரப்பும் தொற்றிக்கொண்டவளாய் எதிரே வந்த மீராவிடம்.. சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்..!!

“யார் அவனுக.. சரியான லூசுப்பசங்களா இருக்கானுக..??”

மீரா அவனையும் அவனது கேள்வியையும் மதியாமல்.. அவனை கடந்து எதிர்ப்புறம் சென்றாள்.. அவளுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தாள்..!! ஜன்னலை நெருங்கியவள்.. சற்றே பதுங்கிக்கொண்டு.. திரைச்சீலையை விலக்கி வெளிப்புறம் பார்வையை வீசினாள்..!! அந்த வீட்டின் நுழைவாயிலை திறந்து கொண்டு வெளியேறுகிற.. சாலமன் மற்றும் அசோக்கின் முதுகுப்புறம் தெரிந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது கூட மீராவின் காதில் தெளிவாக விழுந்தது..!!

“ஏண்டா இப்படி பண்ற..??” சாலமன் சலிப்பாக கேட்டான்.

“ப்ச்.. உள்ள ஒரு பொண்ணு இருக்கா மச்சி.. நான் பாத்தேன்.. கண்ணாடில நல்லா தெரிஞ்சது.. கன்ஃபார்ம்ட்..!!”

“ஐயே.. அது ஏதாவது ஐட்டமா இருக்கும் மச்சி..!!”

“என்னது.. ஐட்டமா..??”

“ஆமாண்டா..!! பொண்டாட்டி ஊர்ல இல்லைன்றான்.. ஜாலியா ஜல்ஸா பண்ணலாம்னு ஏதாவது ஐட்டத்தை கூட்டிட்டு வந்திருப்பான்..!! சிவ பூஜைல கரடி மாதிரி உள்ள நொழைஞ்சதும் இல்லாம.. நோண்டி நோண்டி கேள்வி வேற கேட்டுட்டு இருக்குற நீ..!! அந்த ஆளை பாத்தியா.. எப்படி டென்ஷன் ஆயிட்டான்னு..?? நல்லவேளை.. அவன்பாட்டுக்கு கோவத்துல கையை நீட்டிருந்தான்னா என்ன பண்றது..??”

“ம்ம்..?? பதிலுக்கு நாமளும் நீட்ட வேண்டியதுதான்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments