ஆண்மை தவறேல் – பகுதி 29

அசோக்கிற்கும் கவ்விய உதடுகளை விட்டுவிட எண்ணமில்லை. அந்த உதடுகளில் ஒட்டியிருந்த கடைசி சொட்டு ஈரத்தையும் உறிஞ்சிவிட துடித்தவன் போல செயல்பட்டுக் கொண்டிருந்தான். நந்தினியின் அமைதி அவனுக்கு வசதியாயிருந்தது..!! தனது இடுப்பை அவள் வளைத்துக்கொண்டது.. தான் சுவைப்பதற்கு அவள் உதடுகளை பிளந்து கொடுத்தது.. தனது நாக்கை அவளது நாக்கால் அவள் தீண்ட முனைந்தது.. என.. நந்தினியின் செய்கைகள் அவனுக்கு தைரியத்தை அளித்தன..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அவனையும் அறியாமல் நந்தினியின் இடுப்பை பிசைந்து கொண்டிருந்த தனது வலது கையை மெல்ல உயர்த்தினான். அந்தக்கையை அகலமாக விரித்து, மூச்சு விடாமல் ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டு நின்ற நந்தினியின் இடது பக்க மார்பை கொத்தாக பற்றினான். மலர்களை கூழாக்கி உருட்டி வைத்திருந்த மாதிரியான அவளது இளமைக்கனியை அழுத்தி பிசைந்தான்..!!

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அவனது செயல்களுக்கு அனுமதி அளித்து, அசையாமல் நின்றிருந்த நந்தினியின் உடல் இப்போது வெடுக்கென சிலிர்த்துக் கொண்டது. தனது உதடுகளை அசோக்கின் பிடியில் இருந்து படக்கென பறித்துக் கொண்டாள். அதிர்ச்சியில் விரிந்த விழிகளுடன் அசோக்கை மிரட்சியாக பார்த்தாள். அவளுடைய வாய் ‘ஓ’ வென பிளந்துகொள்ள, ஒருமாதிரி நம்ப முடியாத பார்வை..!! சிலவினாடிகள் அவனுடைய முகத்தையே அதிர்ச்சியாக பார்த்த நந்தினி, அப்புறம் தன் பார்வையை தாழ்த்தினாள். தனது மார்பை வலுவாக பற்றியிருந்த அசோக்கின் இரும்புக்கரத்தை பார்த்தாள்.

அவள் அப்படி பார்த்ததும்தான், அசோக் அத்தனை நேரம் மூழ்கியிருந்த மோக உலகை விட்டுவிட்டு, இந்த உலகுக்கு வந்தான். அவளுடைய பார்வை சென்ற இடம்தான்.. ‘என்ன நடந்திருக்கிறது..’ என்பதை அவனுக்கு பலமாக உணரவைத்தது. உடனே படக்கென்று அவனுடைய கையை அங்கிருந்து எடுத்துக் கொண்டான். அவனுடைய கை அகன்றதும்தான் நந்தினி இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள். ஆனால் அவனுடைய ஸ்பரிசம் நின்று போனது, எதையோ இழந்தது போல அவளுக்கு தோன்றியது. நிமிர்ந்து அசோக்கையே ஏக்கமாக பார்த்தாள்.

அசோக் இப்போது உடலெல்லாம் பதற்றம் ஏறிப்போய் நின்றிருந்தான். விரல்கள் எல்லாம் நடுக்கம் கொள்ள.. உதடுகள் எல்லாம் படபடக்க.. முகமெல்லாம் வியர்த்து வழிய..!! ‘என்ன காரியம் செய்து விட்டாய் நீ..??’ என்று அவனுடைய மனசாட்சி சவுக்கு சுழற்ற, சுளீர் சுளீர் என அதனிடம் அடிவாங்கியவனாய்.. நந்தினியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தபடி நின்றிருந்தான். ஒரு ஐந்தாறு விநாடிகள்தான்..!! அப்புறம் அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தான்.. படிக்கட்டு நோக்கி வேகமாக நடந்தான்.. படிக்கட்டுகளில் தபதபவென இறங்கி கீழே ஓடினான்..!!

நந்தினிக்கு எதுவும் புரியவில்லை. என்னவாயிற்று இவனுக்கு..?? பேசிக்கொண்டிருக்கையிலேயே திடீரென முத்தமிட்டான். அதுவும் நெடுநாள் ஆசையை அடக்கி வைத்திருப்பவன் மாதிரியான ஆவேச முத்தம்..!! முத்தமிட்டுக் கொண்டிருக்கையிலேயே மார்பை பற்றி பிசைந்தான். அதுவும் பிய்த்து எடுத்துவிடுபவன் மாதிரியான உடும்புப்பிடி..!! இப்போது நான் அவனை ஏதோ செய்ய வந்தது போல மிரண்டு போய் ஓடுகிறான்..??

நான் என்ன செய்தேன்..?? எதுவுமே செய்யவில்லையே..?? அவனுக்கு அனுமதி அளித்து அமைதியாகத்தானே இருந்தேன்..?? அப்புறமும் ஏன் ஓடுகிறான்..?? அவன்தானே எல்லாம் செய்தான்.. இப்போது ஏதோ நான் செய்த மாதிரி..?? ஆமாம்.. ஏன் இப்படி செய்தான்..?? திடீரென எங்கிருந்து வந்தது அவனுக்கு இந்த ஆசை..?? ஒருவேளை.. ஒருவேளை.. அவன் உள்ளுக்குள் அடக்கி வைத்த காதல்.. இன்று உடைத்துக்கொண்டு வெளி வந்துவிட்டதோ..?? உடைப்பெடுத்துக்கொண்ட காதல் பிறகு உருமாறி.. காமமாய் தடம் மாறிப் போனதா..?? காதல் என்பது முற்றிப்போய், ஒரு நிலையில் இந்தமாதிரி காமமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதா..?? வாய்ப்புள்ளது என்றே நந்தினிக்கு தோன்றியது..!! ஆமாம்.. இது காதல்தான்.. அப்படித்தான் இருக்க வேண்டும்..!! நிஜமாகவா..?? உண்மைதானா..?? நம்பலாமா..??

நந்தினி உள்ளமெல்லாம் பூரித்து போனவளாய்.. உதட்டில் இன்னும் உறைந்திருந்த முத்தச்சுவையின் மயக்கம் தீராதவளாய்.. அங்கேயே கொஞ்சநேரம் நின்றிருந்தாள். அப்புறம் மெல்ல நடந்து படியிறங்கினாள். நெஞ்செல்லாம் படபடக்க.. உடலெல்லாம் மதமதக்க.. கால்கள் தரையை விட்டு மேலேழும்பியிருக்க.. தங்கள் அறைக்கு மிதந்தே சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவள் லேசாக அதிர்ந்து போனாள். உள்ளே அசோக் இழுத்துப் போர்த்தியவாறு படுத்திருந்தான். ‘என்ன இது..?? தூங்கிவிட்டானா..?? இப்போதுதானே கீழே வந்தான்.. அதற்குள் என்ன தூக்கம்..?? ஏதேதோ கேட்கவேண்டும் என்று வந்தேனே..?? இப்போது என்ன செய்வது..??’ கொஞ்ச நேரம் குழம்பிய நந்தினி அப்புறம்..

“என்னங்க.. என்னங்க..”

என்று அசோக்கை அழைத்து பார்த்தாள். அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. நந்தினிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில வினாடிகள் தேமே என்று நின்றிருந்தவள், அப்புறம் ‘நாளைக்கு பார்த்துக்கலாம்..’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, தனது பெட்ஷீட்டையும் பில்லோவையும் எடுத்து தரையில் போட்டாள். விளக்கை அணைத்தாள்.

அவள் விளக்கை அணைக்கவும் அசோக்கின் விழிகள் படக்கென திறந்து கொண்டன. ‘என்ன காரியம் செய்து விட்டாய் நீ..?? என்ன காரியம் செய்து விட்டாய் நீ..??’ என்று அவனுடைய உள்மனம் திரும்ப திரும்ப கேட்டு அவனை துளைத்தெடுக்க, அவனுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது. கண்களை மீண்டும் இறுக்கமாக மூடிக் கொண்டான்.

‘ஏன் இப்படி செய்தேன்’ என்று தன்னைத்தானே அவன் ஒரு சுய பரிசோதனை செய்துகொண்டான். ‘இத்தனை நாட்களில் அவள் தன்னை எத்தனையோ முறை நெருங்கியிருக்கிறாள்.. இன்று மட்டும் ஏன்..?? மஞ்சுவிடம் தீராத காமப்பசியை இவளிடம் தீர்த்துக்கொள்ள முனைந்தேனா..? அதனால்தான் இவ்வாறு அறிவு கெட்ட தனமாய் நடந்தேனா..?? இல்லை இல்லை..!! வீட்டுக்குள் நுழைந்ததும் அவ்வாறு ஒரு காமக்கண்ணோட்டத்தில் அவளை நான் பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் மொட்டை மாடியை அடைந்த சிறிது நேரத்தில் எல்லாம் என் மனம் அமைதியடைந்து விட்டதே..?? எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் தைரியமாக அவள் முகத்தை ஏறிட்டேனே..?? அப்படியானால்.. அவளை முத்தமிட்டதன் காரணம்.. என் மனதுக்குள் புதைந்திருக்கும் அவள் மீதான காதலா..?? அந்த காதல்தான்.. அவளுடைய அழகை அருகில் இருந்து பார்த்ததும்.. கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டு விட்டதா..?? ஹாஹா.. காதலில் இருப்பவன் மென்மையாக முத்தமிடுவான்.. இப்படியா கடித்து குதறி வைப்பான்..?? ஏன் கூடாது..?? அடக்கி வைத்த காதலின் வெளிப்பாடு வேறென்னவாக இருக்க முடியும்..?? இட்ஸ் நான்சென்ஸ்..!! நீ அவள் மீது பாய்ந்தது காமப்பித்தை அடக்க முடியாமல்.. அதற்கு சப்பைக்கட்டு கட்ட நினைக்கிறாய்..!! காதலும் இல்லை.. மண்ணும் இல்லை.. காலையில் அவளிடம் தெளிவு படுத்திவிடு..!! யெஸ்..!! இது காமம்தான்.. காதல் இல்லை.. காதல் இல்லை..!!’ அசோக் தனது அலைபாயும் மனதுக்கு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டான்.

அத்தியாயம் 22

அதற்கு அடுத்த நாள் முழுவதும் அசோக்கிற்கு பெரும் சோதனை காத்திருந்தது. முதல்நாள் அசோக் தந்த முத்தத்தினால், நந்தினி மிகவும் தைரியம் பெற்றவள் ஆனாள். தன் மனதில் இருந்த சின்ன சின்ன ஆசைகளை அடுத்த நாளே நிறைவேற்றிக்கொள்ள முனைந்தாள். அசோக்தான் பாவம்..!! செய்வதறியாது.. திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி திகைத்தான்..!!

காலையில் அசோக்கை தூக்கத்தில் இருந்து எழுப்புகையிலேயே, அவனுடைய மீசை மயிர்களை பற்றி வெடுக்கென இழுத்துத்தான் நந்தினி எழுப்பினாள். திடுக்கிட்டு விழித்தெழுந்த அசோக்கை பார்த்து குறும்பாக சிரித்தாள். தூக்கத்தில் இருந்து எழுந்த அசோக் தன் அருகே நெருக்கமாக, வாசனையாக அமர்ந்திருந்த நந்தினியை பார்த்து திகைத்தான்.

“எ..என்ன..??” என்றான் மிரட்சியாக.

“எவ்வளவு நேரம் தூங்குவீங்க..?? எந்திரிங்க..” என்றாள் அவள் போதையாக.

“ம்ம்.. எந்திரிக்கிறேன்.. நீ போய் குளி போ..” அசோக் எரிச்சலாக சொல்ல,

“குளிச்சாச்சு.. பாத்தா தெரியலை..??” என்று அவள் குறும்பாக உடம்பை அசைத்து காட்டினாள்.

அவனுடன் பால்கனியில் நின்று காபி அருந்துகையில்… திடீரென சொன்னாள்.

“மொரடன்..!!”

“யா..யாரை சொல்ற..?” அசோக் உதறலாய் கேட்டான்.

“ஆங்.. பக்கத்து வீட்டுக்காரனை..!! நேத்து எங்கிட்ட எந்தப்பய மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டானோ.. அந்தப்பயலை சொல்றேன்..!!”

“நா..நானா..??”

“பின்ன.. வேற யாரு..??”

“நா..நான் என்ன பண்ணுனேன்..?”

“அப்பா.. பச்சப்புள்ள.. ஒண்ணுமே பண்ணல..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என்னா புடி.. இன்னும் வலிக்குது தெரியுமா..?? மொரடன்..!!”

சிணுங்கலாக சொன்ன நந்தினி அசோக்கின் பக்கமாக திரும்பி நின்றாள். அவளுடைய புடவைத்தலைப்பு ஒருபுறமாக ஒதுங்கியிருக்க, நேற்று அவன் இறுகப்பற்றிய மார்பு இப்போது தனியாக ப்ளவுசுக்குள் பளிச்சிட்டது. நந்தினி அசோக்கை குறும்பாக பார்க்க, அவன் அவளை பரிதாபமாக பார்த்தான்.

அப்புறம் அசோக் குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்புகையில்.. அயர்ன் செய்துவைத்த ஆடைகளை அணிந்து கொண்டிருக்கையில்.. பனியனை உடுத்திவிட்டு மேல்ச்சட்டை அணிந்துகொள்வதற்கு இடையிலான இடைவெளியில்.. நந்தினி அவனை பின்புறமாக வந்து அணைத்துக் கொண்டாள்.

“ம்ம்ம்ம்ம்ம்… நைட்டு நீங்க பண்ணுனதுதான் ஃபுல்லா மைன்ட்ல ஓடிட்டு இருக்கு.. அப்படியே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு அசோக்..”

என்று சிணுங்கினாள். அவளுடைய முகத்தை அவனுடைய விரிந்த தோள்ப்பட்டையில் வைத்து தேய்த்தாள். நொந்துபோன அசோக் உடும்பாக பிடித்திருந்த அவளது பிடியில் இருந்து விலகிக்கொண்டே,

“ஆ..ஆபீசுக்கு லேட் ஆயிடுச்சு நந்தினி.. கெளம்பனும்..!!” என்று அவளிடம் இருந்து தப்பிக்க வேண்டியதாயிருந்தது.

மதியம் அடையாறு ஆபீசுக்கு சென்று அவனுக்கு உணவு பரிமாறுகையில்.. மோர்க்குழம்பை பிசைந்து அவன் வாய்க்குள் அனுப்பிக்கொண்டிருக்கிற வேளையில்..

“முருங்கைக்கா சாம்பார்தான் வைக்கலாம்னு இருந்தேன்.. அப்புறம் எதுக்குடா வம்புன்னு தோணுச்சு.. வேணாம்னு விட்டுட்டேன்..!! ஏடாகூடமா ஏதாவது சமைச்சுப்போட்டு.. அப்புறம் நாந்தான அனுபவிக்கனும்..?” அவள் குறும்பாக சொல்லிவிட்டு கண்சிமிட்ட,

“ப்ளீஸ் நந்தினி.. இப்படிலாம் பேசாத..!!” என்று எரிச்சலானான் அசோக்.

“ஓஹோ.. ஸாருக்கு பேசுறது பிடிக்காதா.. பண்றது மட்டுந்தான் பிடிக்குமோ..??”

அவள் போதையாக கேட்ட தோரணையில் அசோக்கிற்கு அப்புறம் சாப்பாடே இறங்கவில்லை. அன்று இரவு உணவு பரிமாறுகையில் வேறுவிதமான தாக்குதல்…!! கரண்டியில் ரசத்தை அள்ளி சாதத்தில் ஊற்றிக்கொண்டே..

“நேத்து வச்ச குலோப் ஜாமூன் இன்னும் கொஞ்சம் இருக்கு.. சாப்பிடுறீங்களா..??” என்று உதட்டை நாவால் தடவிக்கொண்டே கேட்டாள் நந்தினி.

“இ..இல்ல.. வேணாம்.. நீயே சாப்பிடு..” என்றான் அசோக் நடுக்கமாய்.

‘ஒருநாள் சாப்பிட்டதே ஜென்மத்துக்கும் போதும்..’ என்று சொல்லிக்கொண்டான் மனதுக்குள்.

அன்று இரவு படுக்கையறையில் அவனுக்கு பெரும் சோதனை காத்துக்கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்து.. மாடிக்கு சென்று புகை பிடித்து திரும்பி வந்த அசோக்.. தனது அறைக்குள் நுழைந்தான். அதற்குள்ளாக சாப்பிட்டு முடித்திருந்த நந்தினி.. இப்போது கட்டிலில் மிக ஒய்யாரமாக படுத்திருந்தாள். அவளுடைய கூந்தல் புதிதாய் மல்லிகைப்பூ சூடியிருந்தது. உதட்டில் ஒரு புன்னகை.. கண்களில் கொள்ளை கொள்ளையாய் குறும்பு..!!

“ஹேய்.. எ..என்ன இது..??” அசோக்குக்கு வாய் குழறியது.

“என்ன என்ன இது..??”

“மே..மேல படுத்திருக்க..?”

“ஏன் படுக்க கூடாதா..?? இனி நான் இங்கதான் படுத்துக்க போறேன்..”

“ஏன்.. கீழ படுத்தா கொசு கடிக்குதா..?”

“இல்ல.. எதுவும் கடிக்க மாட்டேன்னுது..!!” சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்டினாள்.

“வெ..வெளையாடாத நந்தினி..”

“யாரு.. நான் வெளையாடுறனா..?? நேத்து நைட்டு நீங்க வெளையாண்டதை விடவா..?? வெளையாண்டது பத்தாதுன்னு இப்போ நடிப்பு வேற..?”

“ந..நடிப்பா..?? நான் என்ன நடிக்கிறேன்..??”

“பின்ன என்ன..?? மனசுக்குள்ள அவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில ஒண்ணுமே இல்லாத மாதிரி நடிக்கிறீங்கள்ல..?”

“அ..அதுலாம் ஒண்ணுல்ல..” அசோக் தடுமாற்றமாய் சொல்ல, நந்தினி இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள்.

“ஐயோ..!!! ஏன் இப்படி பண்றீங்க..?? இன்னுமா உங்களுக்கு புரியலை..?? நீங்க எதுக்கு இப்படி தயங்குறீங்கன்னு எனக்கு புரியுது..!! ‘என்னடா.. அக்ரீமன்ட் போட்டு மேரேஜ் பண்ணிக்கிட்டு.. இப்படிலாம் நடந்துக்கிட்டோமே.. அவ என்ன நெனைப்பாளோ’ன்னுதான..?? இங்க பாருங்க.. நேத்து நீங்க பண்ணுன எதையும் நான் தப்பா எடுத்துக்கலை..!! இன்னும்.. வெக்கத்தை விட்டு உண்மையை சொல்லப்போனா..” என்றுவிட்டு ஓரிரு வினாடிகள் நிறுத்திய நந்தினி, அப்புறம் தலையை குனிந்தவாறே வெட்கத்துடன் சொன்னாள்.

“நீங்க திரும்ப அந்த மாதிரி நடந்துக்க மாட்டீங்களான்னு எனக்கு ஏக்கமாத்தான் இருக்கு..!! எனக்கு சம்மதங்க.. அந்த அக்ரீமன்ட்லாம் உடைச்சு எறிஞ்சுட்டு.. ஒரு உண்மையான பொண்டாட்டியா உங்க கூட வாழ எனக்கு சம்மதம்..!! நீங்களும் இனிமே எனக்கு ஒரு உண்மையான புருஷனா நடந்துக்குவீங்களா..?? ம்ம்..?? இனிமேயும் உங்க காதலை மூடி மூடி வைக்காம.. எங்கிட்ட தைரியமா காட்டுவீங்களா..??”

நந்தினி அந்தமாதிரி ஏக்கமாய் கேட்க, அசோக் இப்போது தலையை பிடித்துக் கொண்டான். ‘ச்சே.. அவசரத்தில், ஒரு ஆசையில் நான் செய்த காரியம் எங்கெல்லாம் சென்று நிற்கிறது..?? இல்லை.. இதை இப்படியே வளர விடக்கூடாது..!! வளரவிட்டால்.. அது இதைவிட பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்பு உள்ளது..!! உண்மையை சொல்லி விட வேண்டியதுதான்..!!’ ஒரு முடிவுக்கு வந்த அசோக், தடுமாற்றமான குரலிலேயே ஆரம்பித்தான்.

“இ..இங்க பாரு நந்தினி.. நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!”

“என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..??”

“நான் நேத்து உன்னை கிஸ் பண்ணினது..”

“ம்ம்ம்..??”

“உன் மேல இருக்குற லவ்னால இல்ல..”

“அ..அப்புறம்..??” நந்தினி இப்போது தன் நெற்றியை சுருக்கினாள்.

“இட்ஸ் ஜஸ்ட் லஸ்ட்.. ஒரு அட்ராக்ஷன்..!!”

அசோக்கின் வார்த்தைகளை நந்தினியால் நம்பமுடியவில்லை. அவனையே திகைப்பாக பார்த்தாள்.

“பொ..பொய்தான சொல்றீங்க..?”

“இல்ல நந்தினி.. உண்மைதான்..!!”

“இல்ல.. நான் நம்பமாட்டேன்.. உங்க முத்தத்துல நான் ஃபீல் பண்ணினது லவ்தான்..!!” நந்தினி நம்பமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

“ப்ளீஸ் நந்தினி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..”

“சொல்லுங்க..”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments