மாங்கல்யம் தந்துனானே – பகுதி 15

“சீக்கிரம் இதை ஏறக்கட்டிட்டு.. வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போகலாமான்னு பாக்குறேன்..!! அதுக்கும் சைடுல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்குறேன்.. ஒரு கோர்ஸ் வேற முடிச்சேன்..!!” நான் கேள்வியே படாத ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் பற்றி சொன்னாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“அப்டித்தான் சொன்னாங்க.. அதை நம்பித்தான் படிச்சேன்..!! அந்த ஆளை நம்பி நல்ல வேலையை உதறிட்டு வந்தேன்.. இப்டி என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரு.. மறுபடியும் நல்ல வேலை கெடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குது..!!”

“ம்ம்ம்..”

“ஹேய் பவி.. நான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாமா..?”

“கேளுடி..!!”

“உன் ஹஸ்பன்ட் கம்பெனில அந்த கோர்ஸ் படிச்சவங்களுக்கு ஓப்பனிங் இருக்கான்னு கேக்குறியா..?”

“கண்டிப்பா கேக்குறேன்.. உனக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு அவருக்கு பவர் இருக்கான்னு தெரியலை.. ஆனா கண்டிப்பா அவரால முடிஞ்ச உதவியை பண்ணுவாரு..!!”

“ம்ம்.. கோர்ஸ் பேர் சொல்லி கேளு.. ப்ராஜக்ட்லாம் பண்ணிருக்கேன்னு சொல்லு.. சர்ட்டிபிகேஷன் கூட முடிச்சிருக்கேன்..”

“ஹேய்.. இரு.. ஒன்னு பண்ணலாமா..?”

“என்ன..?”

“அவருக்கு கால் பண்ணி தர்றேன்.. நீயே அவர்கிட்ட பேசுறியா..?”

“ஐயோ அதெல்லாம் வேணாண்டி..”

“இல்ல.. நானா சொன்னான்னா ஏதாவது மறந்துடுவேன்.. வேற ஏதாவது டீடெயில் கேட்டா கூட எனக்கு சொல்ல தெரியாது.. நீங்க ரெண்டு பேருமே பேசிட்டா ஒன்னும் பிரச்னை இல்ல.. அதான் சொல்றேன்..!!”

“அவர் ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறாரு..”

“பேசு பேசு.. அதுலாம் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரு.. பொண்ணுக கிட்ட பேசுறதுனா.. அவர் சந்தோஷந்தான் பாடுவாரு..!!” – இதில் ‘பொண்ணுக கிட்ட பேசுறதுனா..’ மட்டும் நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

என் செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். என்கேஜ்டாக இருந்தது. சலித்துக் கொண்டு மேலும் இரண்டு முறைகள் முயற்சி செய்தேன். மீண்டும் என்கேஜ்ட்..!! இப்போது நான் ஒரு மாதிரி அசட்டுப் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து சொன்னேன்.

“என்கேஜ்டா இருக்குடி.. யார்கிட்டயோ பேசிட்டு இருக்காரு..”

“சரிடி.. ஒன்னும் அவசரமில்ல.. நீ அப்புறமா அவர் வந்ததும் சொல்லு.. என் நம்பர்தான் உன்கிட்ட இருக்குல..? கால் பண்ணு.. நான் பேசுறேன்..”

“ஓகேடி..!!”

“சரி.. அப்போ நான் கெளம்புறேன் பவி..!! கொஞ்சம் வேலை இருக்கு..!!”

“என்னது கெளம்புறியா..? உதை வாங்கப் போற.. மொதமொதலா வீட்டுக்கு வந்துட்டு.. தண்ணியோட எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா..? தண்டனையும் அனுபவிச்சுட்டு போ..!!”

“தண்டனையா..?”

“ஆமாம்..!! என் சமையல்..!! நாங்கலாம் இப்போ சமைக்க ஆரம்பிச்சுட்டோம்ல..?” நான் பெருமையாகவும், ஜாலியாகவும் சொல்ல, அவள் சிரித்தாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா… கஷ்டகாலம்..!!” அவளும் இப்போது முகத்தில் புன்சிரிப்புடன் இலகுவானாள்.

“ஹேய்.. என்ன நக்கலா..? ஒரு தடவை நான் சமைச்சதை சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லும்மா..!!”

“ம்ம்.. சரி.. சாப்பிட்டுட்டு சொல்றேன்..!! ஆமாம்.. எப்போடி கத்துக்கிட்ட இதெல்லாம்..?”

“எல்லாம் என்கேஜ்மன்ட் ஆனப்புறந்தான்..!!”

“உன் புருஷனுக்கு புடிச்சிருக்கா.. நீ சமைக்கிறது..?”

“புடிக்கும்.. புடிக்கும்..!! மேரேஜ் ஆன சமயத்துல.. ஒரு பத்து நாள்.. இவர் சென்னை வந்துட்டாரு.. நான் மட்டும் தனியா மதுரைலதான் இருந்தேன்..!! அப்போத்தான்.. இவருக்கு என்ன புடிக்கும்னு என் மாமியார்கிட்ட இருந்து நெறைய கத்துக்கிட்டேன்..!! அவங்களும் இவதான் இனிமே புள்ளையை பாத்துக்கப் போறான்னு.. அவருக்கு புடிச்ச ஐட்டம்லாம்.. எந்த பக்குவத்துல பண்ணனும்னு நல்லா சொல்லித்தந்தாங்க..!! அதை வச்சுத்தான் சமாளிச்சுக்கிட்டு இருக்குறேன்..!! சாப்பிட்டுப் பாரு.. உனக்கும் புடிக்கும்..!!”

“எனக்கு புடிக்கிறது இருக்கட்டும்.. அவருக்கு புடிச்சிருந்தா சரிதான்..!!”

“புடிக்காமலா சாப்பிட்டுட்டு அப்டி பாராட்டுறாரு..?”

“ஓஹோ..? அப்படி என்ன பாராட்டுனாரு..?”

அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். அன்றொருநாள் அவர் பாராட்டியதை நினைவு கூர்ந்து, அந்த நினைப்பு தந்த மகிழ்ச்சியில் மிதப்பவளாய், சிலாகித்து சொன்னேன்.

“அவருக்கு நெத்திலி மீன்னா ரொம்ப பிடிக்கும் அன்பு.. ஒரு நாள் பண்ணிருந்தேன்.. சாப்பிட்டுட்டு.. ‘என் அம்மாவை விட நல்லா சமைக்கிறடி..’ன்னு மனசார சொன்னாரு.. அன்னைக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..? எந்தப் பொண்டாட்டியுமே புருஷன் வாயில இருந்து அந்த வார்த்தையை கேட்க கொடுத்து வச்சிருக்கணும்..!!”

“ம்ம்.. நெத்திலி மீன் வறுத்துக் கொடுத்து வீட்டுக்காரரை மயக்கிட்ட போல..? எனக்கு என்ன சமைச்சு போட போற..?”

“ஹ்ஹ்ஹா.. உனக்காக ஸ்பெஷலாலாம் ஒன்னும் கெடயாது.. ஏற்கனவே சமைச்சு வச்சிருக்குறேன் அதுதான்..!! வத்தக்கொழம்பு.. அப்பளம்..!!”

“அதுவும் எனக்கு புடிச்ச ஐட்டந்தான்.. அது போதும் என்னை மயக்குறதுக்கு..”

“ஹ்ஹ்ஹா.. சரி.. சாப்பிடலாமா..?”

“ம்ம்.. சாப்பிடலாம்..!!”

அப்பளம் மட்டும் சட்டியில் போட்டு எடுக்க வேண்டி இருந்தது. அன்பரசியும் கிச்சனுக்குள் வந்துவிட, பழைய கதைகளை பேசி சிரித்துக்கொண்டே, அப்பளமும் வடகமும் சுட்டு எடுத்தோம். டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அன்பரசி நிஜமாகவே என் சமையலில் அசந்து போனாள். நன்றாயிருக்கிறது என பாராட்டினாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.

“சாப்பிட்டுட்டு கொஞ்சம் வேலை வேற இருக்கு அன்பு.. அவருக்கு டிரஸ்லாம் எடுத்து வைக்கணும்..”

“எதுக்கு..?”

“அவர் நாளைக்கு ஊருக்கு கெளம்புறாரு..?”

“அவரா..? அவர் மட்டுமா போறாரு..? நீ போகலையா..?”

“இல்ல.. அவர் ஆபீஸ் விஷயமா போறாரு..”

“அடிக்கடி இந்த மாதிரி உன்னை தனியா விட்டுட்டு போயிடுவாரா..?”

“அடிக்கடி இல்ல.. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை.. ஒரு ரெண்டு நாள் இல்ல மூணு நாள்..”

“உனக்கு வீட்ல தனியா இருக்குறது பயமா இருக்காதா..?”

“எனக்கு என்ன பயம்..? சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க..? அதுலாம் ஒண்ணுல்ல..!!”

“ம்ம்ம்.. எந்த ஊருக்கு போறாரு..?”

“புனே..!!”

நான் சொன்னதும், புன்னகையுடன் சோற்றை விழுங்கிக் கொண்டிருந்த அன்பரசியின் முகம் பட்டென மாறியது. அதிர்ச்சியில் சுருங்கி கருத்துப் போனது. கையில் அள்ளிய சோற்றை அப்படியே தட்டில் போட்டாள். பிரம்மை பிடித்த மாதிரியான ஒரு பார்வை பார்த்தாள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. குழப்பமான குரலில் கேட்டேன்.

“ஏய்.. அன்பு.. என்னாச்சுடி உனக்கு திடீர்னு..?”

“அவங்க ரெண்டு பேரும் இப்போ புனேலதான் இருக்காங்க பவி..” அவள் மிகவும் இறுக்கமான குரலில் சொன்னாள்.

“யாரு..?” நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்டேன்.

“அவங்கதான்.. எனக்கு தாலி கட்டுனவனும்.. என் கூட பொறந்தவளும்..!!”

“ஓ….!!!”

“போனவாரம் அவளோட ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்லிருக்கா..!! அவ ஃப்ரண்டு எங்கிட்ட வந்து சொன்னா..!! ‘கன்னாபின்னான்னு திட்டி காலை கட் பண்ணிட்டன்க்கா’ன்னு..!!”

“ம்ம்ம்ம்.. அவங்களை அப்படியே விட்றப் போறியா அன்பு..?”

“வேற என்ன பண்ண சொல்ற..? எப்டியோ போய் தொலையுதுக..!!”

விரக்தியாக சொன்னவள், கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. நானும் அமைதியாக அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தபடி, சோற்றை பிசைந்தவாறு அமர்ந்திருந்தாள். பின்பு திடீரென உடைந்து போன குரலில் பேச ஆரம்பித்தாள்.

“கால் நொறுங்கிப் போய் கெடந்தா பவி.. எந்திரிச்சு நிக்க கூட முடியாம.. ரெண்டு மாசம் படுத்த படுக்கையா கெடந்தா..!! அள்ளிப்போடுறது, மேல் தொடைச்சு விடுறதுன்னு.. அம்மா மாதிரி பாத்துக்கிட்டேன் அவளை..!! கூடப் பொறந்தவன்னுதான அதெல்லாம் பண்ணினேன்..? கூட்டிட்டு ஓடிப்போவான்னு கனவுல கூட நெனைக்கலை பவி..!!”

“ம்ம்ம்ம்..”

“சின்ன வயசுல இருந்து.. நான் ஆசையா எது வாங்கினாலும் அவ எடுத்துப்பா.. பொம்மை, பென்சில், சுடிதார், ஜிமிக்கி..!! இப்டி என் புருஷனையும் தூக்கிட்டு போவான்னு நான் நெனச்சே பாக்கலைடி..!! அவள்லாம் நல்லாவே இருக்க மாட்டா..!!”

“வி..விடு அன்பு..”

“அந்தாள் மேலயும் எனக்கு கோவம் இருக்கு.. ஆனா இவ பண்ணினதை நெனச்சா..” சொல்லும்போதே அவளுடைய விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன.

“போ..போதும் அன்பு.. அதையே நெனச்சுக்கிட்டு இருக்காம… சாப்பிடு..!!”

“என்னவோ போடி..!! மனுஷங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு..!!”

சலிப்பாக சொன்னவள் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சகஜமாகிவிட்டதை உறுதி செய்து கொண்டு, நானும் நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் அவள் கிளம்பினாள். அப்போதுதான் எனக்கு இன்னொருமுறை அசோக்குடைய செல்லுக்கு முயன்றால் என்ன என்று தோன்றியது. இருவரும் பேசிவிட்டால் ஒரு வேலை முடிந்தது..!! மீண்டும் அவருக்கு கால் செய்தவள், நொந்து போனேன்..!! என்கேஜ்ட்..!!

“அய்யோ.. மறுபடியும் என்கேஜ்டா இருக்குடி..!!”

நான் சலிப்பாக சொல்ல, அன்பு இப்போது அப்படியே முகம் மாறினாள். நெற்றியை சுருக்கி ஒருமாதிரி கூர்மையாய் என்னை பார்த்தாள். சற்றே குறுகுறுப்பான குரலில் கேட்டாள்.

“இவ்ளோ நேரமா அப்டி யார்கூடடி பேசுறாரு..?”

“எனக்கு எப்படி தெரியும்..?” நான் புன்னகையுடன் சொல்ல,

“அதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் பவி.. ஆபீஸ் விஷயமா இருந்தா ஆபீஸ் போன் யூஸ் பண்ணுவாங்க.. ஃப்ரன்ட்ஸா இருந்தாலும் லஞ்ச் டயத்துல இவ்ளோ நேரமா அரட்டை அடிப்பாங்க..?” அவள் மிக சீரியசாக பேச ஆரம்பித்தாள்.

“ஒ..ஒருவேளை வே..வேற வேற காலா இருக்கலாம்ல..?” நான் தயங்கி தயங்கி சொல்ல,

“ஒருவேளை ஒரே காலா கூட இருக்கலாம்ல..?” அவள் பட்டென கேட்டாள்.

“அ..அன்பு..” நான் திகைத்தேன்.

“நீ கால் பண்றப்போ.. அடிக்கடி இந்த மாதிரி என்கேஜ்டா இருக்குமா..?”

“அ..அடிக்கடி இல்ல.. எப்போவாவது..”

“வீட்டுக்கு வந்ததும் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு கேட்டிருக்கியா..?”

“இ..இல்லை..!!”

“அதெல்லாம் கேட்டு வச்சுக்கோ.. அவர் மேல ஒருகண் எப்போவும் வச்சுக்கோ.. அசால்ட்டா இருந்துடாத..!!”

“சேச்சே.. நீ நெனைக்கிற மாதிரி அவர்..”

“பவி.. எனக்கு உன் புருஷனைப் பத்தி எதுவும் தெரியாது.. அவரை நான் தப்பா சொல்றேன்னு நெனைக்காத.. இப்போ இருக்குற பொண்ணுகளை அவ்ளோ லேசா எடை போட்டுடாதன்னு சொல்ல வர்றேன்.. உஷாரா இருன்னு சொல்றேன்..!! அவ்ளோதான்..!!”

“ச..சரிடி.. நான் பாத்துக்குறேன்..”

“ம்ம்ம்.. கட்டுன புருஷன் விஷயத்துல.. கூடப் பொறந்த தங்கச்சியே நம்பக்கூடாதுன்றது.. என் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம்..!! பாத்துக்கோ.. நான் வர்றேன்..!!”

அவள் சொல்லிவிட்டு கிளம்ப, நான் அப்படியே பொத்தென சோபாவில் அமர்ந்தேன். இருதயம் இப்போது பலமடங்கு வேகத்தில் படபடத்தது. பதறியது..!! மூளையை தாக்கிய சந்தேக வைரஸ் ஒவ்வொரு நரம்பிலும் பரபரவென பரவியது..!! சில நாட்களாய் காணாமல் போயிருந்த அந்த பொசஸிவ் உணர்வு, மனமெங்கும் பொங்கி வழிந்தது. யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்..??? விரல்கள் நடுநடுங்க நான் திரும்பவும் அவருக்கு கால் செய்தேன். காதில் வைத்தேன். என்கேஜ்ட்..!! செல்போனை தூக்கி எறிந்து விட்டு, கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன்.

இரவு அவர் வந்து சேரும்வரை நான் அதே நினைப்பில்தான் ஆழ்ந்திருந்தேன். வழக்கமாக செய்துகொள்ளும் அலங்காரம் கூட அன்று செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர் வழக்கத்தை விட நல்ல மூடில் வந்திருந்தார். உள்ளே நுழைந்த வேகத்தில் என் உதட்டை கவ்வி உறிஞ்சிய வேகத்திலேயே அது நன்றாக தெரிந்தது. என்னுடைய மூட் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும் அல்லவா..? அவரிடம் இருந்து அரும்பாடுபட்டு விலகிக் கொண்டேன்.

“அப்போ கால் பண்ணினேன்.. என்கேஜ்டாவே இருந்தது..?”

“எப்போ..?”

“மதியம்.. ஒரு மணி இருக்கும்..”

“அது.. நாளைக்கு புனே போறேன்ல..? அங்க இருக்குற சீனியர் மேனேஜர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன்..”

“ஆபீஸ் விஷயத்துக்கு ஏன் உங்க செல்போன்ல பேசுறீங்க..?”

“ஏன்..? அதனால என்ன..? இதுக்குலாம் நான் கணக்கு பாக்குறது இல்ல..”

“ஓ..!! சரி.. காபி போடவா..?” நான் அவருடைய பதிலில் திருப்தியுறாமலே கேட்டேன்.

“ம்ம்.. போடு..!!”

காபி கொண்டு வந்து கொடுத்தேன். அவர் சோபாவில் அமர்ந்து, டிவி பார்த்துக் கொண்டே காபி உறிஞ்சினார். நான் அவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவருடைய மார்பில் போட்டுக் கொண்டேன். அவருடைய கவனம் டிவியில் இருக்க, எனது கவனம் அவரது செல்போனில் இருந்தது. உடனடியாய் அதை கைப்பற்ற வேண்டும் போல் இருந்தது. மதியம் யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்று அறிந்து கொள்ளவேண்டும் என ஆர்வம் அரித்தது. அவருடைய உடம்பை இதமாக தடவிக் கொடுப்பது போல செல்போன் தேட ஆரம்பித்தேன்.

மேல் பாக்கெட்டில்தான் எப்போதும் இருக்கும்.. இன்று காணோம்..!! கையை மெல்ல கீழே இறக்கினேன். இடுப்பை மெல்ல பிசைந்து கொடுத்தேன். அப்புறம் பேன்ட் பாக்கெட்டை தடவினேன். இன்னொரு பேன்ட் பாக்கெட்..!! செல்போனை காணோம்..!!!! எங்கே வைத்திருப்பார்..? அவரிடமே கேட்டு விடலாமா..? சந்தேகப்படுவாரோ..? சரி.. சந்தேகப்படாதவாறு கேட்கலாம்..!!

“உங்க மொபைல் கொடுங்களேன்.. ஒரு கால் பண்ணனும்..!!”

“ஏன்.. உன் மொபைல் என்னாச்சு..?”

“பேலன்ஸ் இல்லை..”

“என் மொபைல்ல சார்ஜ் இல்லை..”

“குடுங்க சார்ஜ் போடலாம்.. எங்க இருக்கு..?”

“என் பேக்குக்குள்ள போட்டிருப்பேன் பாரு..!!”

“சார்ஜர்..?”

“பெட்ரூம்ல இருக்கும்..!!”

அவருடைய பேகை திறந்து செல்போனை கைப்பற்றினேன். அவசரமாக எடுத்துக்கொண்டு பெட்ரூம் ஓடினேன். படபடக்கும் கைகளால் சார்ஜர் எடுத்து சார்ஜ் போட்டேன். போனை ஆன் செய்தேன். ஸ்டார்ட் ஆகியது.. ஐகான்கள் லோட் ஆகின..!! கால் ஹிஸ்டரி ஐகானை அழுத்த என் விரல் சென்றபோது, என் கணவரின் கரம் ஒன்று எனக்கு பின்பக்கம் இருந்து வந்தது..!! என் இடுப்பை முரட்டுத்தனமாய் வளைத்து இழுத்தது.. மெத்தையில் தள்ளியது..!!

“ஐயோ.. என்னப்பா இது.. விடுங்க..”

“ம்ஹூம்..!!” மறுத்தவர் என் மீது படர்ந்தார்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments