♥ உள்ளத்தின்.. கதவுகள் 8 ♥

விடுமுறை நாள்..! ஆனாலும் வழக்கம் போல எழுந்து. .. நடை பயிற்சி.. உடற்பயிற்சி.. எல்லாம் முடித்துக்கொண்டு. . சமையல் கட்டுக்குப்போய்… மிருதுளாவுக்கு உதவி செய்தான் நந்தா.
” என்ன புரோகிராம் நந்தா.. இன்னிக்கு. .?” என அவனிடம் கேட்டாள்.
” சொல்லிக்கற மாதிரி ஒன்னுல்ல ஆண்ட்டி. .” என மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.
” அப்ப. . வேற என்னதான் பண்ணப்போற…?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

யோசித்துப் பார்த்தான். உருப்படியாக ஒன்றும் தோண்றவில்லை.
” என்ன பண்றது..? புல் ரெஸ்ட்தான் ஆண்ட்டி. .” என்றான்.
” ஒரு நாள் முழுசுமா..?”
” ம்..ம்…! ”தோள்களைக் குலுக்கினான் ”ஒரு நாள் என்ன ஒரு நாள். . ? ஏன் நீங்க இல்லை. .?”
” ஸாரி நந்தா. .” என்றாள்.
” ஏன் ஆண்ட்டி. .?”
” எனக்கு.. இன்னிக்கு வேறொரு புரோகிராம் இருக்கு”
” இட்ஸ் ஆல் ரைட் ஆண்ட்டி. .! நா வீட்லதான இருக்கப் போறேன்..! நீங்க போய்ட்டு வாங்க..”
அருகில் வந்து. .அவன் கையை எடுத்து. . அவள் கைக்குள் வைத்துக்கொண்டாள்.
” ஒன்னு பண்ணேன்..”
” என்ன ஆண்ட்டி. .?”
” சினிமா போயேன்..! போரடிக்காம இருக்கும்..”
சிரித்தான் ”தேங்கஸ் ஆண்ட்டி”
” போறதான..?”
” ம்..!” தலையாட்டினான்.
” உன்னை தனியா விட்டுட்டு போக மனசில்ல.. அதான். .! எப்படியும். . நான் வரதுக்கு… சாயந்திரம் ஆகிறும். .”
” பரவால்ல ஆண்ட்டி. .! நீங்க மெதுவாவே வாங்க…”
” எல்லாம் சமைச்சு வெச்சிட்டு போறேன்.! மறக்காம சாப்பிடனும் என்ன. .? நான் வந்து பாக்கறப்ப.. எதுவும் மிச்சம் இருக்கக்கூடாது..” என்றாள்.
ஆனால் அவள் எங்கே போகிறாள் என்று அவளும் சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. !

பத்து மணிக்குப் புறப்பட்டுப் போனாள் மிருதுளா. அதிக மேக்கப் இல்லாத.. அவளது எளிய தோற்றம்.. அவளது அழகின் கம்பீரத்தை வெளிக்காட்டியது.!

மதியக்காட்சி.. சினிமாவுக்குப் போனான் நந்தா.
விடுமுறை நாள் என்பதால் நனாறாகவே கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாகப் படம் பார்த்துவிட்டு.. அப்படியே ஷாப்பிங் பண்ணினான்.
அவனுக்கு ஜீன்ஸ் பேண்டும். . டீ சர்ட்டும் எடுத்தான்.! ஆண்ட்டிக்கும் நல்லதாக ஒரு புடவை வாங்கினான்.!!

அவன் வீடு போனபோது.. மிருதுளா வந்திருந்தாள்.
கதவைத் திறந்த மிருதுளா.. அவனைச் சிரித்த முகமாக வரவேற்றாள். அவன் கையிலிருந்த.. பேகைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” என்ன இது..?”
” ஷாப்பிங் பண்ணேன் ஆண்ட்டி. .”
” அப்படியா…? குட்.” கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டாள்.”என்னெல்லாம் வாங்கினே..?”
” ட்ரஸ்ஸஸ் மட்டும்தான் ஆண்ட்டி. .”
” எடேன் பாப்போம்..”

வெளியே எடுத்துப் புடவையை அவளிடம் கொடுத்தான்.
”நல்லாருக்கா பாருங்க..”
” அட… புடவையா..?” என வியப்புடன் வாங்கினாள். விரித்துப் பார்த்து.. ”வாவ்.. வெரி நைஸ்..! யாருக்கு இது.. உன் அம்மாக்கா..?” எனக் கேட்டாள்.

புன்னகையுடன் சொன்னான் ”உங்களுக்குத்தான் ஆண்ட்டி..”
சந்தோசத்தில் பூரித்தாள். கண்களில் பரவசம் பொங்கியது. ”ஓ..! தேங்கஸ் நந்தா. .”
” புடவை புடிச்சிருக்கா ஆண்ட்டி. .?”
” இது மாதிரி. . புடவை ஒன்னு நானே எடுக்கனும்னு நெனச்சிட்டிருந்தேன்..! பட் நீ எடுத்துக் குடுத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம்..”
அவனது பேண்ட்.. சர்ட்டையும் எடுத்து. . அவன் நெஞ்சில் வைத்துப் பார்த்து..நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.

” சரி போய் முகம் கழுவிட்டு. . துணி மாத்திட்டு வா.. சூடா காபி குடிக்கலாம்..” எனச் சொன்னாள்.
” நீங்க எப்ப வந்தீங்க ஆண்ட்டி?”
” இப்பதான்.. கால்மணிநேரம் ஆகிருக்கும்..”

மாடியறைக்குப் போனான். அறைக்குள் நுழைந்து. . ஜன்னல் கதவைத்திறக்க…
அப்போதுதான் அவளைப் பார்த்தான்.
எதிர் வீட்டு மாடி ஜன்னலில்.. அழகான ஒரு இளம்பெண் முகம்.. தெரிந்தது. ! பார்த்தவுடன் பச்சக் என மனதில் ஒட்டிக்கொள்ளும் முகம்.! அவளது கருவண்டு விழிள் அவனைக் கண்டதும்… உடனே சினேகித்தது.!

”ஹலோ ”சொன்னான்.
அவளும் தயங்காமல்.. உடனே
”ஹலோ. .” சொல்லிச் சிரித்தபோது இன்னும் அழகாகத் தோண்றினாள்.
”நான் நந்தா. .” என்றான்.
கண்களைச் சிமிட்டி.. ”பூரணி.” என்றாள். குரல் இனிமையாகவே இருந்தது.
” ஸ்வீட் நேம்..! அதைவிட.. உங்க வாய்ஸ்…ஸ்வீட்டா இருக்கு..” எனக் கொஞ்சமாகக் கத்திச் சொன்னான்.
” ஆ..! எங்கூட பேச ஆசப்படறீங்கன்னு தெரியுது.. அதுக்காக இப்படி ஐஸ் வெக்கனுமா என்ன. ?” எனக்கேட்டுச் சிரித்தாள்.
”ஐயோ நெஜமாதாங்க தாரிணி. ப்ராமிஸ்..”
” பாத்திங்களா… அதுக்குள்ள ஆள மாத்திட்டிங்க .?”
”ஆள மாத்திட்டனா… ? என்ன சொல்றீங்க..?”
” என் பேரு என்ன. .? மறுபடி சொல்லுங்க பாப்பம்..?”
” தாரிணி. .தானே..?”
” பூரணி..! அன்னபூரணி..! தாரிணி இல்ல. .!”
” ஓ..! எக்ஸ்ட்ரீம்லி…”
”ஸாரியா..?”
” ம். ம்..! ஒரு சின்ன தவறு நடந்துருச்சு..! உங்க. . அழகும். .குரலும். . என் கவனத்த.. மிஸ் பண்ண வெச்சிருச்சு..! பூரணி. . சரிதானே..? அன்னபூரணி. .?”
” கரெக்ட்..” என்றாள் ”என்ன ஆண்ட்டியோட கெஸ்ட்டா நீங்க. .?”
” ஆ.. ஆமா. .”
” படிக்கறீங்களா…?”
” வேலைல இருக்கேன்..”
” என்ன வேலை. .?”
” ஈ பீ ல..” என விபரம் சொன்னான். ”நீங்க. .?”
” வொர்க்கிங்..?”
” எங்க. .?”
ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள்.

அதேநேரம் அவனைத்தேடி வந்த மிருதுளா.. அறைக்குள் நுழைந்தாள்.
அப்பெண். . அவளைப் பார்த்து.. ”ஹலோ ஆண்ட்டி. . குட் ஈவினிங்..” என்றாள்.
” குட் ஈவினிங்..! என்ன பண்ணிட்டிருக்கே நீ..?” என மிருதுளா ஜன்னல் ஓரமாகப் போய் நின்றாள்.
” உங்க நந்தா வோட டாக் பண்ணிட்டிருக்கேன். நந்தா உங்க கஸினா..?”
” ஆமா. .” என்றவள் உடனே நந்தாவிடம் திரும்பிச் சொன்னாள் ” நந்தா இந்த பொண்ணு இருக்கே… பூரணி. சரியான வாயாடி..! இது வாயாடி மட்டுமில்ல.. வாலும் கூட..! அவகிட்ட கவனமா இரு இல்லேன்னா உன்ன ஒரு வழி பண்ணிருவா..”
” ஹலோ. .. ஹலோ. .. ஆண்ட்டி.! அனியாயமா என்னை கெட்டவளா மாத்திடாதிங்க..! ” என்றுவிட்டு உடனே அவனிடம் சொன்னாள் ”நந்தா… ஆண்ட்டி சொல்றத நம்பாதிங்க..! நான் ரொம்ப. . ரொம்ப நல்ல பொண்ணு..! யாரோட வம்பு தும்புக்கும் போக மாட்டேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு.. இருக்கற.. ‘ காம் ‘ டைப் நானு”

நந்தா சிரித்து ”அதாவது என்னை மாதிரி..” என்றான்
” அப்கோர்ஸ்..” என்றவள் உடனே ”யூ.. மீன்..?”
”நானும் உங்கள மாதிரிதான் காம் டைப்..”
” என்ன ஒற்றுமை பாத்திங்களா நமக்குள்ள..? இதான் நந்தா கடவுள் செயல்ன்றது..! ஒரே மாதிரியான நம்ம ரெண்டு பேரை மீட் பண்ண வெச்சு. ..”
” அம்மா பூரணி. ..” ஆண்ட்டி இடைபுகுந்தாள் ”போதும்மா.. நீ ரொம்ப தங்கமான பொண்ணுன்னு.. இந்த ஊருக்கே… இல்லல்ல.. நாட்டுக்கே தெரியுமே..! அத நீ வேற தனியா சொல்லனுமா என்ன. .?”
” ஹ்ஹா. .! தேங்க்ஸ் ஆண்ட்டி. .பட் ஒன் திங்க்.. என் பேரு அம்மா பூரணி இல்ல. . அன்ன பூரணி..!! உங்க நந்தா என்னடான்னா.. தாரிணின்றாரு..! நீங்க அம்மா பூரணின்றீங்க…! என் பேரு எனக்கே மறந்துரும் போலிருக்கு..” என்றாள்.

” அதெப்படி.. உன்னால மட்டும் முடியுது. ..?” எனக் கேட்டாள் மிருதுளா.
” என்ன ஆண்ட்டி. .?”

” மூச்சு விடாம படபடனு பேசறியே…! வாய் வலிக்காது?”

சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல் ”அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி. .” என்றாள்.
நந்தா ” ஆனா. . உங்க பேச்சும் உங்கள மாதிரியே.. அழகா இருக்கு..” என்றான்.
மிருதுளா ”இந்தப் பொண்ணுகிட்ட இப்படி பேசாத நந்தா. . மாட்டிப்ப..” என்றாள்.

பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.

நந்தா ”என்ன தப்பு. .? உண்மையத்தானே சொன்னேன்.”
அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” நீ பேசல.. உன் வயசு பேசுது..”
” ஹா..! என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”

நகைத்தாள் மிருதுளா.
நந்தா ” நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது.! அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து ”பாட்டு கத்துக்கறீங்களா.. பூரணி. .?” எனக் கேட்டான்.

” நானா.. இல்லையே..! நீங்க கத்துதர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றாள் குரலை சரி பண்ணிக்கொண்டு. . ஹம் பண்ண. .
மிருதுளா அவசரமாக” சரி.. சரி. போதும் விடு..” என்றாள்.

”அதெப்படி..? பட்… ஆண்ட்டி ஒரு விசயம் கவனிச்சீங்களா?”
” இல்லம்மா.. நீயே சொல்லிறேன். ”
”நந்தா எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு..! அப்படித்தான நந்தா. .?”
” நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
” நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. .! நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
”நிச்சயமா நீங்க வருவீங்க..ட்ரை பண்ணா..! அவ்ளோ இனிமையானது உங்க குரல். ”
”தேங்க்ஸ்..! பட் நந்தா. . உங்கள எனக்கு புடிச்சிருக்கு..” என்றாள்.
அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
தொடர்ந்து. .” கொஞ்ச நஞ்சமில்ல.. எவ்ளோ புடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டிங்க..” என்றுவிட்டு. . குழந்தைபோல.. அவள் கைகளை விரித்துக்காட்ட.. குபீரெனச் சிரித்தான் நந்தா.

”ச்சோ.. ஸ்வீட். .!!” மனம்விட்டுச் சிரித்தான்.
அப்தப்பெண்ணின் பால் கனிந்த நட்பு.. காதலாகக்கூடத் தோண்றிற்று. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப்பையன்தான் விரும்ப மாட்டான்.? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். !

” பூரணி.. யூ ஆர் வெரி க்யூட்..! ரொம்ப ஜாலியா.. கலகலப்பா பேசறீங்க..! ”எனப் பாராட்டினான்.
அவளது முகம் பிரகாசமானது. ”அப்ப என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
”புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு. .!” அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான்.
அப்போது அவள் கை பேசி சிணுங்கியது.
”எக்ஸ்க்யூஸ் மீ..” சொல்லி.. செல்லில் பேசினாள்.

மிருதுளாவைப் பார்த்தான் நந்தா.
மிருதுளா ” சரியான வாயாடி பொண்ணு..! எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..” என்றாள்.

கைபேசியில் உரையாடின பூரணி. . இவர்களைப் பார்த்து..
” ஓகே பிரெண்ட் நந்தா. ! மறுபடி இன்னொரு நாள் பேசலாம்.! எனக்கு அழைப்பு வந்தாச்சு.. பை.. பை..! ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து.. டாடா காட்டிவிட்டு. . அவசரமாகக் காணாமல் போனாள்.!!!

– தொடரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments