♥ நீ -43♥

சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்த நேரம்..! கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது.. ஜன்னலில் நிழலாடியது.

ஜன்னலைப் பார்த்தேன்..! மூர்த்தி..!! மேகலாவின் கணவன்..!!
”என்ன பண்றீங்க..?” என்று கேட்டார்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”சும்மாதான்..” சிரித்தேன்.

”ப்ரீயாத்தான இருக்கீங்க..?”

”ம். ப்ரீதான்…”

”இருங்க.. வரேன்..” என்றவர் அடுத்த நிமிடம் சந்துக்குள் புகுந்து..என் வீட்டுக்கு வந்தார்.

”வாங்க..” எழுந்து.. சேரை எடுத்து போட்டேன் ”உக்காருங்க..”

”வீட்ல பயங்கர போர்ப்பா..” என்றுவிட்டு உட்கார்ந்தார். அவர் கண்கள் லேசான போதையில் மிதந்து கொண்டிருந்தது.

”சினிமா.. கினிமா.. போலாமே..” என்றேன்.

” அது.. அதவிட போர்..” என்று சிரித்தார் ”அப்றம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு..?”

”ம்..ம்..! போகுதுங்க…! எனக்கு அலைச்சல் இல்ல..”

”எல்லாருக்கும் இப்படி அமையாது..! இதான் நேரம்ங்கறது..!!”

”ம்..ம்..!!”

”இந்த… நகை..பணம்… இதெல்லாம்..?” என்று ஆர்வமாகப் பார்த்தார்.

” இல்ல… அதெல்லாம் பேசலைங்க..”

” அவங்களும் சொல்லலையா..?”

” ம்.. அவங்களே பண்ணுவாங்க..! ஒரே பொண்ணு..!”

”வசதி.. இருக்கில்ல…?”

”ம்..ம் .! ஓரளவு வசதிதான்..”

பின்னர் மெல்லக் கேட்டார்.
”வரீங்களா.. வெளில போலாம்.?”

”எங்க…?”

” லைட்டா… ஒரு.. கட்டிங்.. போட்டுட்டு.. வரலாம்..”

எனக்கும் போகலாமென்றே தோண்றியது.
”ம்.. போலாம்..” என்றேன்.

உடனே எழுந்து விட்டார்.
”ஒரு நிமிசம்..வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தர்றேன்..” என்று வெளியே போனார்.

என் மனதில் லேசான ஒரு கவலை வந்தது..! என்னுடன் என்றால்.. மேகலா என்ன நினைப்பாள்..??
என்ன நினைத்தால்தான் என்ன… என்று எண்ணியபடி.. எழுந்து டிவியை அணைத்து விட்டு புறப்பட ஆயத்தமானேன்..!
நான் உடைமாற்றி.. கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது.. மூர்த்தி வந்து விட்டார்.
”போலாம்..!!” என்று சிரித்தார்.

” ஆ..! ஒரு நிமிசம்..” என்று ஜன்னலைச் சாத்தினேன்.

நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற.. கஸ்தூரி ஓடிவந்தாள்.
”அப்பா… உன்ன அம்மா கூப்பிடுது..”

”எதுக்கு…?”

”தெரியலே.. உன்ன கூப்பிட சொல்லுச்சு.. அவ்வளவுதான்..”

”உங்கோத்தாக்காரி.. இருக்காளே..” என்று சலித்துக் கொண்டவர் ”ஒரு நிமிசம் இருங்க.. வந்தர்றேன்..” என்று அவர் வீட்டுக்குப் போனார்.

அங்கேயே நின்றுவிட்ட கஸ்தூரி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”அண்ணா.. எங்க போறீங்க..?”

”நா.. ஸ்டேண்டுக்கு.. கஸ்தூ..”

”எங்கப்பா…?”

” சும்மா… வரேன்னாரு..”

”ஆ.. பொய் சொல்றீங்க…” என்று சிரித்தாள்.

”அட.. இல்ல..! நீ வேனா.. உங்கப்பாவையே கேட்டுப்பாரு..”

”க்கும்…”

போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார் மூர்த்தி. கஸ்தூரியிடம்..
”நீ.. போ தங்கம்மா..!!” என்றுவிட்டு.. என்னிடம் ”நடங்க போலாம்..” என்றார்.

கஸ்தூரி.. ஓடிவிட்டாள். நாங்கள் இருவரும் தெருவுக்கு போக..
”இந்த பொம்பளைங்களே.. ஆகாதுப்பா..!” என்றார்.

”ஏங்க… என்னாச்சு..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.

”பின்ன என்னப்பா.. ஒரு மனுஷன் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்க முடியுமா..? அங்க போகாத… இங்க எதுக்கு போறேனு.. எதையாவது கேட்டு.. வம்பிழுத்து… மனுஷன் நிம்மதியவே கெடுக்கற புத்தி.. அவளுகளுக்கு ” என்றார்.

இந்த நிலை கூடிய விரைவில் எனக்கும் வரலாம் என்றுதான் தோண்றியது.!!

☉ ☉ ☉

காலை..!!
நான் தூஙகி எழுந்த சமயம்… பின்பக்கம் துணி துவைக்கும்.. ”தப்.. தப்..” சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்தச் சத்தம் என் தூக்கத்துக்கு இடைஞ்சலாகக்கூட இருந்தது.
பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து ஜன்னலைத் திறந்தேன்.

மேகலா..!!
என்னைப் பார்த்தவுடன்.. ஒழுங்கற்று இருந்த…ஈர உடைகளை சரி செய்தாள்..!
நான் எதுவும் பேசாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றேன்..!

சில நிமிடங்கள் கழித்து…நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
”எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

”ம்..” என்றேன் ”நீங்க..?”

”இருக்கேன்..” என்று விட்டு.. இடுப்புச் சேலையை இழுத்துச் சொருகிக்கொண்டு.. பக்கெட்டில் முக்கி… துவைத்த துணிகளை அலசினாள்.
அவளின் கணத்த தனங்களை முடிந்தவரை… மூடி மறைத்திருந்தாள். அபபடியும்.. அவளது அங்கம்… என் பார்வையில் படத்தான் செய்தது.!! அதுவும் குனிந்த வாக்கில் தெரிந்த.. அவளது பருத்த மார்புகள்.. என்னை தொந்தரவு செய்தது..!

துணிகளை அலசிப் பிழிந்து விட்டு நிமிர்ந்து நின்று.. என்னை சைடில் பார்த்துக் கேட்டாள்.
”ஏற்பாடெல்லாம் பலமா.. இருக்குது போலருக்கு..?”

”ஏற்பாடா…?” புரியாமல் கேட்டேன்.

”ம்..ம்..”

”என்ன.. ஏற்பாடு…?”

”கல்யாண.. ஏற்பாடு..”

புன்னகைத்தேன்..! ”ஓ…!!”

மெல்ல. ”என்னையெல்லாம் மறந்துட்டிங்க…” என்றாள்.

”நானா…?”

” வேற.. யாராம்..? இவள்ளாம் நமக்கு யாரு… இவள்ட்ட எதுக்கு சொல்லனும்னு நெனச்சிட்டிங்க..? அந்தளவு நான் ஆகாதவளா போயிட்டேன்..?” என்றாள்.

”சே.. சே..! என்னங்க… உங்களப்போயி….”

”தெரியும்…” ஒரு மாதிரி கலங்கிய குரலில் சொன்னாள் ”அன்னிக்கு நான்.. உங்கள திட்டிட்டேன்.. அந்த கோபம்தான்..! அதனாலதான் ஒரு வார்த்தை கூட.. சொல்லாம…” என்றாள்.

” இ.. இல்ல… அ..அது…”

”பரவால்ல… நல்லாருங்க…” எனறு விட்டு அலசிய துணிகளை எடுத்து காலி பாக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு உடனே அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டாள்..!

எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வது போல… அவளை நான் கோபிக்கவில்லை. அவள்தான் என்னிடம் கோபம் கொண்டிருந்தாள்..!
மேலும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன்.
அவள் வரவே இல்லை.
நான் குளித்து விட்டு வந்து பார்த்தபோதும் அவள் என் கண்ணில் தெண்படவே இல்லை..!!

திருமண வேலையாக வெளியே போய்விட்டு… மதியத்திற்கு மேல்தான் வீடு திரும்பினேன்.
நான் ஓய்வாகக் கட்டிலில் படுத்திருந்த போது.. ஜன்னல் அருகே.. வளையல் ஓசை கேட்டது.
ஜன்னலைப் பார்த்தேன்.

மேகலா ”ரெஸ்ட் போலருக்கு..?” என்று கேட்டாள்.

”ம்..” சிரித்து ” வெளில போய்ட்டு.. இப்பத்தான் வந்தேன்..”

ஜன்னல் பக்கத்தில் வந்து நின்றாள். தலைவாரி.. புடவை மாற்றி.. எங்கோ வெளியில் கிளம்பியிருந்தாள்.!
அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை இருந்தது.

எழுந்தேன் ”கெளம்பிட்டாப்ல இருக்கு..?”

”ம்.. மார்க்கெட்…”

”தனியாவா..?” ஜன்னல் அருகே போய் நின்றேன்.

என்னை முறைத்துப் பார்த்தாள்.

நான் சிரித்து ”ஓ… ஸாரி..! நா.. வேற எந்த அர்த்தத்துலயும் கேக்கல…” என்றேன்.

”ஏன்… பேசமாட்டிங்க…? பேசுங்க.. பேசுங்க..!!” என்றாள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு.

”ஸாரி… ஸாரி…!!”

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

நான் மெல்ல.. ” என்மேல நெறைய கோபமிருக்கும்..?” என்றேன்.

உடனே ”உங்க மேல கோபப்பட.. எனக்கென்ன உரிமை இருக்கு..?” என்றாள்.

”சே..சே..! அப்படி பேசாதிங்க .! தபபெல்லாம் என்னோடதுதான்..!”

என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களைப் பார்த்து.. அவளது உணர்ச்சி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக்கண்களில் என்மீது அவளுக்கு ஏதோ இருக்கிறது.. என்பது தெரிந்தது.
சட்டென.. மார்பகம் விம்ம. . பெருமூச்சு விட்டாள்..!

நான் மெல்லச் சொன்னேன்.
” நீங்க நெனைக்கற மாதிரி.. எனக்கெல்லாம் உங்க மேல ஒரு கோபமும் இல்ல..! நீங்கதான் என்கூட பேசாம இருந்தீங்க.. அதான் என் கல்யாண விசயத்த உங்ககிட்ட.. சொல்ல முடியல..! அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா நீங்க நெனக்கற மாதிரி… நான் நெனைக்கல..”

என்ன நினைத்தாளோ… சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டன..!
உடனே.. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு…
”வேண்டாம்..! அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம்..!” என்றாள்.

”சரி.. பேசல..! ஆனா.. என்னையும் புரிஞ்சுக்கோங்க.. மேகலா..! அன்னிக்கு.. நான்.. அப்படி… வேனும்னே திட்டம் போட்டெல்லாம் எதும் பண்ணல..! எதிர் பாக்காம..திடிர்னு…”

” பரவால்ல…” முனகினாள் ”ஆனா.. என்கிட்ட நீங்க என்ன மாதிரி எண்ணத்துல பழகுனீங்கனு.. எனக்கு தெரியாது..! ஆனா நான் சத்தியமா.. அந்த மாதிரி ஒரு எண்ணத்துல பழகவே இல்ல..! உங்கள ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..!! ஆனா… அது…இப்படி.. தப்பா போகும்னு நான் நெனைக்கவே இல்ல…” மேலும் ஏதோ பேச விரும்பியது போலத் தெரிந்தது.. ஆனால் பேசவில்லை..!

நானும் பேசாமல் அவளை வெறித்தேன்..!!

சிறிது பொருத்து..ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
அவளது பெண்மை.. இப்பதோதும் என்னை வசீகரித்தது.
‘சே.. ! இதுதான் சபல புத்தியோ..? எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’

என்னை ஆழமான ஒரு பார்வை பார்த்துவிட்டு…
”நான்.. போய்ட்டு வந்து.. சமையல் பண்ணனும்..” என்றாள்.

நான் ”ம்..” என்று மட்டும் சொன்னேன்.

அங்கிருந்து நகர்ந்த மேகலா.. சட்டென நின்றாள். என்னைப் பார்த்து..
”சாப்டிங்களா..?” என்று கேட்டாள்.

”ம்..ம்..!”

” ஓட்டல் சாப்பாடா…?”

”இல்ல… அக்கா வீட்ல…”

” உங்க…கல்யாணத்துக்கு.. என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”

”குத்தி காட்டாதிங்க…”

” ஏன்.. வலிக்குதோ..?”

”ஆமா..ரொம்ப வலிக்குது..”

”எனக்கு கூட கேள்விப்பட்டப்ப.. இப்படித்தான் வலிச்சிது..”

”அதுக்காக…ஸாரி…”

”எனக்கு எதையும் மனசுக்குள்ள வெச்சிக்க தெரியாது. பட்னு பேசிருவேன்.. அது என் பழக்கம்..” என்றாள்.

நான் புன்னகையுடன் அவளையே பார்க்க…

”என்னமாவது வேனுமா..?” என்று கேட்டாள்.

”இல்ல.. ஒன்னும் வேண்டாம்..”

”அதானே.. நாங்கள்ளாம் வாங்கித்தந்தா புடிக்குமா.. என்ன…? இதே வேற யாராவதா இருந்தா.. அப்ப. . புடிச்சிருக்கும்…”

”அலோ.. நா.. அப்படி சொல்லல..!! சரி.. என்ன வாங்கறீங்க… எனக்கு..?”

”ஒன்னும் வாங்கல…” என்று விட்டுப் போய்விட்டாள்.

என்னதான் சொல்லவருகிறாள் என்று குழம்பினேன்.
இந்தப் பெண்களே.. இப்படித்தானோ..? ஆண்களின் மனதைக் குழப்பமடையச் செய்யும்… பெரும்.. குழப்பவாதிகளாக…????

– சொல்லுவேன்….????

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments