♥ நீ -58♥

காரில் உட்கார்ந்த.. தீபா..முகத்தில் விழுந்து கண்ணை மறைத்த.. உதிரி முடியை ஒதுக்கிக்கொண்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள்.
” எங்க போறோம்.. இப்போ..?”

” பேல்பூரி சாப்பிட..ஏன். .?” காரை உசுப்பிக்கொண்டே கேட்டேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”நடந்தே போலாமே..?”

” இங்க வேண்டாம்..”

”அப்றம்.. வேற எங்க..”

”அன்னூர் ரோட்ல.. ஓரமா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு..! அங்க போனா.. கொஞ்ச நேரம் ஜாலியா உக்காந்து பேசிட்டு வல்லாம்..”

”ம்ம்..” என்று சிரித்தாள்.

ட்ராபிக் இல்லாத பகுதியில் காரை ஓட்டினேன்..!

மெல்லிய வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த..ரெஸ்டாரண்டின் உள்ளே போய் ஒரு ஓரமாக எதிரெதிரே உட்கார்ந்தோம்..!!
”என்ன சாப்பிடற..தீபா..?”

”மொதல்ல பேல்…” என்றாள் சுற்றிலும் பார்த்துக்கொண்டு.

”வேற ஏதாவது சாப்பிடறியா..?”

”ம்கூம்..! மத்ததெல்லாம் ஒன்னும் வேண்டாம். .!”

ஆர்டர் செய்து விட்டு அவளைப் பார்த்துக் கேட்டேன்.
”அப்றம்.. வேலையெல்லாம் ஓகேதானே..?”

”டபுள்..ஓகே.. மச்சான்..!!” என்றாள்.

”என்னது மச்சானா..?”

”ம்ம்..! அப்றம் என்னவாம்..?” என்று சிரித்தாள்.

”அப்படியா…?”

”தேங்க்ஸ் மச்சான்..”

” வெறும் தேங்க்ஸ் பத்தாது மச்சினி..”

”வேற என்ன.. ட்ரீட் தரனுமா..?”

” ம்..! ஆமா..!!”

”என்ன ட்ரீட்..?”

”என்ன தருவ..?”

” நீங்களே கேளுங்க..! ஒரு..ஃபுல்லு..?” என்றாள்.

”ஏய்..! சரக்கு யாருக்கு வேனும..?” என்ற போது.. பேல் பூரி வந்தது. அவள் பக்கம் ஒன்றை நகர்த்தி வைத்தேன்.
ஸ்பூனால் சாப்பிட்டோம்.

”நான் கேட்டது தருவியா.. கருவாச்சி..?” என்று மெதுவாகக் கேடடேன்.

அவளும் மெதுவான குரலில் கேட்டாள்.
”என்ன..மச்சான்.. கிஸ் கேப்பிங்களா..?”

லேசாக வியந்தேன் ”அட.. எப்படி சட்னு புரிஞ்சிட்ட..?”

”ஹா.. நாங்க.. எவ்வளவு படம் பாத்துருப்போம்..?” என்று மென்றுகொண்டே சிரித்தாள்.

”சரி.. கிஸ் தருவியா..?” அவளைச் சீண்டினேன்.

”இப்பவா..?”

” இது பொது எடம்டி…”

சிரித்தாள் ”அது தெரிஞ்சுதான கேக்கறது..?”

மங்கலான வேளிச்சத்தில் அவளது பருவச் செழிப்பு என் உடம்பில்.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தது. அவள் கொஞ்சமாக கீழே குனிந்து சாப்பிடும்போது.. நான் அவள் சுடிதாரின் கழுத்து வளைவைப் பார்த்தேன். சுருசுருவென.. மண்டைக்குள் சூடேறுவது போலிருந்தது.

”தீபா..?”

” ம்ம்..?” திண்று கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

”நீ.. ஆளு சூப்பரா இருக்கடி..” என்க..
உடனே சிரித்தாள்.
”உங்க வீட்டுக்கு வரனுமே..?”

”எதுக்கு..?”

” உங்க வொய்ப் கிட்ட சொல்றதுக்கு…” எனச் சிரித்தாள்.
பேல் பூரி சாப்பிட்டு விட்டு.. மூக்கை உறிஞ்சியவாறு சொன்னாள்.
”காளான்..”

” ரொம்ப பசியா இருந்தா.. வேற ஏதாவது சாப்பிட்டுக்கடி..”

”ம்கூம்..!! வேறெல்லாம் வேண்டாம்..!! ஆமா என்ன.. சும்மா.. சும்மா டீ போடறீங்க..?”

” என். மச்சினிய… நான் எப்படி வேனா கூப்பிடுவேன்..!!” என்று டேபிளுக்கடியில் காலை நீட்டி.. அவள் காலை உரசினேன்.

”இப்படியுமா..?” என்று காலைக் குனிந்து பார்த்தாள்.

அவளுக்கு காளான் ஆர்டர் செய்தேன். காளான் வந்தது.

”அப்றம்.. எந்த செக்ஷன்ல.. உனக்கு வேலை..?” என்று கேட்டேன்.

”ரெடிமேடு.. செக்ஷன்..”

”புடிச்சிதா..?”

” ரொம்ப.. புடிச்சிது..! பெருசா எந்த வேலையும் இல்ல..! சுபானு ஒரு அக்கா இருக்காங்க… பயங்கர ரௌஸ் பண்றாங்க..! எல்லாருகிட்டயும் நெக்கலாதான் பேசுவாங்க..! வாயத்தொரந்தா..ஒரே டபுள் மீனிங்தான்..!!” என்றாள்.

”உங்க செக்ஷன்ல மொத்தம் எத்தனை பேரு..?”

”என்னோட சேத்தி.. ஆறு பேரு..! ஜாலியா சிரிச்சுப்பேசிட்டே வேலை செஞ்சிட்டிருப்போம்..!! நோம்பி டைம் வந்தாத்தான் வேலை பெண்டு கழன்டுரும்னு சொன்னாங்க..!!” என்றாள்.

” கூட இருக்கற எல்லாரு கூடயும்.. நல்லா சிரிச்சுப்பேசி பழகு..! அப்பதான்.. எப்பவுமே ஜாலியா இருக்கும்..!!”

” ம்..ம்.! எல்லாருமே அப்படித்தான் பழகறாங்க..! பேசாம செங்காவையும் என்கூடவே கூப்டுக்கட்டுமா..?”

”ஏய்..! அதெல்லாம் வேண்டாம்..!!”

”ஏங்க..?”

”அவள அங்கயே விட்று..! அவளுக்கு அந்த கடைதான் கரெக்ட்..! எந்த தொந்தரவும் இல்லாம.. அவ அங்கயே செட்டாகிட்டா..! அவளா நிக்கறவரை… நீ எதுவும் சொல்லாத.. விட்று..”

”ரொமப.. அக்கறை..” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அவள் சாப்பிட்டு முடித்து.. மூக்கை உறிஞ்சி விட்டு.. தண்ணீர் குடித்தாள்.

”இன்னும் வேனும்னா சொல்லட்டுமா..?” என கேட்டேன்.

”ஐயோ..! போதும்..! தேங்க்ஸ்… மச்சான். .!!”

” தேங்க்ஸ்லாம் எனக்கு வேண்டாம்..!!”

”அதுக்காக கிஸ்ஸெல்லாம் தர முடியாது..” என்று துப்பட்டாவால் வாயைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

”ஏன்டி கருவாச்சி..?”

”பாவம் செங்கா…” என்றாள்.

உனக்கும் பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.!
காரில் உட்கார்ந்து.. தீபாவைப் பார்த்தேன்.
”வேற ஏதாவது.. வேனுமா..?”

”ஐயோ..ஒன்னும் வேண்டாங்க… போலாம்..”

”அப்றம்… கிஸ்ஸூ..?” என்று சீண்டினேன்.

உதட்டை மூடிக்கொண்டு சிரித்தாள்.
”ம்கூம்..!”

”இப்படியே.. எங்காவது.. போலாமா..?”

பதறிவிட்டாள் ”ஐயோ… வேண்டாங்க ப்ளீஸ்..! போலாம்.! நான் வேனா.. மொத மாச சம்பளம் வாங்கி.. பூரா பணத்தையும் உங்ககிட்டயே தந்துடறேன்..! நீங்களே வெச்சுக்குங்க..! ஆனாக்கா இந்த கிஸ் மட்டும் கேக்காதிங்க..! நான் ஒத்துக்க மாட்டேன்..!!”

” ஏய்.. ஏன்டி… இதுக்குப் போய்.. இப்படி பயந்து சாகற..?”

” அய்ய்யோ..!! உங்க வெளைய்ட்டெல்லாம் செங்காவோட நிறுத்திக்குங்க..! என்கிட்ட வெளையாண்டிங்கன்னா.. அப்றம் என் கழுத்துல நீங்க தாலி கட்ட வேண்டியது வந்துரும் பாத்துக்கோங்க..!!” என்றாள்.

காரை உசுப்பினேன் ”தாலிதான.. கட்டிட்டா போச்சு..”

”ஆ..! கட்டுவீங்க… கட்டுவீங்க..!! சும்மா விட்றுவாங்களா.. உங்கள..?”

”என்னை யாருடி கேக்கறது..?” மெதுவாக காரைத் திருப்பி.. சாலையில் கலந்தேன்.

”யாரு கேக்கறதா..? கல்யாணம் பண்ணி வீட்ல இருக்காங்க இல்ல..? அவங்க கேப்பாங்க..!! கேக்கறது மட்டுமா..?”

”ம்…வேற என்ன பண்ணுவாங்க…?”

” அவ்வளவுதான்..!!”

”எவ்வளவுதான்..?”

” பேசாம..ஓட்டுங்க…!!”

” அப்ப கிஸ் தரமாட்ட…?”

ரோட்டைப் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.
”ம்கூம். .”

அவளோடு வம்பிழுத்துக் கொண்டே.. உன்னிடம் வந்தபோது… நீ புறப்பட்டுத் தயாராக நின்றிருந்தாய்.

”உங்க முதலாளி வந்துட்டாரா..?” என்று கேட்டேன்.

” வந்துட்டாருங்க…” என்றாய்.

அவரை எட்டிப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு.. உன்னிடம் கேட்டேன்.
”முடிஞ்சுதா..?”

” ஆமாங்க. ..”

” சரி.. வா.. உங்க ரெண்டு பேரையும் பஸ் ஸ்டாண்டுல கொண்டு போய்விடறேன்..” என்று கூப்பிட…

”பரவால்லீங்க.. நாங்க போய்க்கறோம்..”என்றாய்.

” ஏய்.. வாடி..”என்றதும் சிரித்துக் கொண்டே வந்து காரில் ஏறினாய்.
உங்கள் இருவரையும் காரில் அழைத்துப் போய் பஸ் ஸ்டாண்டில் விட்டு.. விட்டு நான் விடைபெற்றுக் கிளம்பினேன்…!!

அடுத்த நாள் காலை..!!
நான் குளித்து முடித்து.. டிபன் சாப்பிட்டு.. உடைமாற்றி..புறப்பட்டுக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது..!
என் மனைவி போய் கதவைத் திறந்தாள்.
” வாங்க…” என்றாள்.

நான் எட்டிப் பார்த்தேன். என் கண்களுக்கு யாரும் தெண்படவில்லை. ஆனால் பேச்சுக்குரல் கேட்டது.

”நல்லாருக்கியாம்மா..?” என் அப்பாவின் குரல்.
அதைக்கேட்டதும்.. எனக்குள் சுர்ரென ஒரு கோபக்கணல் மூண்டது..! அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டேன்.
என் மனைவிதான் அவனை உள்ளே அழைத்து வந்தாள்.
என்னிடம் வந்து…
”உங்கப்பா வந்துருக்காரு..” என்று சன்னக்குரலில் சொன்னாள்.

நான் அவளை முறைக்க…சிரித்து விட்டு சேரை எடுத்துப்போட்டாள்.
”உக்காருங்க..”

நான் அந்தப் பக்கம் திரும்பக்கூட இல்லை.
என் மனைவி..
” பொண்ணு நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாள்.

”ஓ.! நல்லாருக்காம்மா..! நான் இந்த பக்கம் ஒரு ஜோலியா வந்தேன்..! நேத்து.. நங்கையா வீட்லயே படுத்துட்டேன்..! இப்ப ஊருக்கு கெளம்பறேன்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அதற்குமேல் அவர்கள் பேச்சை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
என் மனைவிதான் காபியெல்லாம் வைத்துக் கொடுத்து.. அவனோடு ஏதேதோ… விசாரித்துக்கொண்டிருந்தாள்.

நான் கிளம்பியாகிவிட்டது. போய்விடலாம் என்றுதான் இருந்தேன்..!
ஆனால் என் மனைவியின் கெஞ்சல் பார்வைக்கு கட்டுப்பட்டு.. உள்ளுக்குள் குமுறும் எரிமலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!

காபி குடித்தபின்.. அவனும் அதிக நேரம் இருக்கவில்லை. நான் ஏற்காவிட்டாலும் என்னிடமும் சொல்லிக் கொண்டுதான் போனான்.
அவன் போனதும்.. என்னிடம் வந்த என் மனைவி…
”இது கொஞசம்கூட நல்லால்ல…” என்றாள்.

”பேசாத…!!”என்றேன் அவளை முறைத்து.

”யாரு..நானா..?”

” பின்ன.. நானா..?”என்க..

என் கண்களில் தெரிந்த கோபம் கண்டு.. உடனே தணிந்து போனாள்.
சட்டென வந்து என் மடியில் உட்கார்ந்து.. என் தாடையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
”என்மேல… ஏன்ப்பா கோபப்படறீங்க…?”

உடனே நான் கண்களை மூடிக்கொண்டேன்..! என் மனதில் என்னென்னவோ.. உணர்ச்சிகளின் தாக்கங்கள்.. குமுறிக்கொண்டு வந்தன..!!
இது.. பல நாள் வெறுப்பு…!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

சில நாள் வேதணை…!!

-சொல்லுவேன்…!!!!! !

Comments