அன்புள்ள ராட்சசி – பகுதி 2

அத்தியாயம் 2

Creative Ad Labs – அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே ‘இது ஒரு விளம்பர கம்பனி’ என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அலுவலகத்தின் மொத்த பரப்பளவே ஆயிரம் சதுர அடிதான்..!! மொத்தம் மூன்றே அறைகள்..!! ஒரு பெரிய சைஸ் அறையில்.. சுவற்றில் அறையப்பட்ட இரண்டு மெகா ஸ்க்ரீன்கள்.. அதன் முன்புறமாக அமைந்திருக்கும் மேஜையில்.. அந்த ஸ்க்ரீன்களுடன் இணைக்கப்பட்ட வீடியோ எடிட்டிங் சிஸ்டம்.. ஆடியோ மிக்சிங், எடிட்டிங் கருவிகள்.. பக்கவாட்டில் இரண்டு ராட்சத ஸ்பீக்கர்கள்.. மேஜை முன்பாக நான்கைந்து நாற்காலிகள்.. அலுவலகத்தில் முக்கியமான அறையே அதுதான்..!! அதில்லாமல் அசோக்கும் அவன் நண்பர்களும் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொள்ள வசதியாக ஒரு அறை..!! அதை ஒட்டி.. கேமரா, கேபிள்கள், லைட்ஸ் போன்ற உபகரணங்களை அடைத்து வைத்துக்கொள்ள ஒரு அறை.. அவ்வளவே..!! கொஞ்சம் உற்றுக் கவனித்தால், சுவற்றின் ஓரமாய் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை காண நேரிடும்.. குப்பைக்கூடையை கிளறினால், காலியான ஓல்ட் மங் பாட்டிலையும், கடலை வறுவல் கவரையும், கண்டுபிடிக்க இயலும்..!!

அசோக்கையும் கிஷோரையும் தவிர, பிசினஸில் பணம் போட்ட இன்னும் இரண்டு நண்பர்கள்.. சாலமனும், வேணுவும்..!! நான்கு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். கல்லூரி படிக்கையிலேதான் நட்பாகி நெருக்கமானார்கள். சாலமனும், வேணுவும் விஷுவல் எஃபக்ட்ஸ், ஆடியோ மிக்சிங் மாதிரியான டெக்னிகல் வேலையில் பிஸ்து காட்டுவார்கள். கிஷோருக்கு ஒளிப்பதிவில் ஆர்வம். அசோக்குக்கு கான்சப்ட் டெவலப் செய்வது மாதிரியான கிரியேட்டிவ் வேலையும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோல் மாதிரியான மேனேஜ்மன்ட் வேலையும்..!!

கிஷோர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவன்.. பிசினஸ் தவிர.. ஒரு முன்னணி திரைப்பட ஒளிப்பாதிவாளரிடம் அசிஸ்டண்டாக பகுதி நேர பணி புரிகிறான்.. சினி இண்டஸ்ட்ரியில் சில காண்டாக்டுகள் அவனுக்கு உண்டு.. அந்த மாதிரி ஒரு காண்டாக்ட்தான் அந்த பரந்தாமன்..!! இவர்கள் நான்கு பேரை தவிர.. இவர்கள் கம்பனி இருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு உதவிக்கென இரண்டு பேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வேறு வைத்திருக்கிறார்கள்..!!

அசோக்கின் நண்பர்கள் மூன்று பேரும், வெவ்வேறு வித குடும்ப சூழல், வெவ்வேறு வித குணநலன்கள் கொண்டவர்கள்.. இருந்தாலும் அவர்கள் மூன்று பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அசோக்கை தனியாக பிரித்துக்காட்டும் வேற்றுமை.. காதல்..!! அசோக்கை தவிர மற்ற மூவருமே காதலில் விழுந்து.. உருண்டு.. புரண்டு கொண்டிருப்பவர்கள்..!!

பரந்தாமனிடம் பிசினஸ் பற்றி அசோக் கூறுகையில், நிறைய விஷயங்கள் மிக நாசுக்காக, நகாசுப்பூச்சொடு சொன்னான். உண்மை நிலை சற்று பரிதாபகரமானது. ‘என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை..’ என்று சொன்னான் அல்லவா..?? அவர்கள் பெரிதாக சாதிப்பதற்கு வாய்ப்பு எதையும் இந்த விளம்பர உலகம் வழங்கவில்லை என்பதுதான் நிஜம்..!! ‘லக்ஸ்.. லிரில்.. கேட்பரிஸ்.. சன்ரைஸ்.. கோல்கேட்.. பெப்சொடன்ட்..’ என்று பெரிய பெரிய கனவுகளுடன்தான் கம்பனியை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் ‘கோபுரம் பூசு மஞ்சள்தூள்.. அரசன் சோப்.. சங்கு மார்க் லுங்கிகள்.. சுடர்மணி பனியன் ஜட்டிகள்..’தான்..!!

பரந்தாமன் குறிப்பிட்ட மாதிரி ‘பாலாஜி அட்வர்டைசிங்’ ஒரு புளியங்கொம்பு..!! விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனம். பல முன்னணி நிறுவனங்களும், மாடல்களும் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு பெரிய அளவு பட்ஜட்டுகளுடனான காண்ட்ராக்ட்கள் வந்து குவிந்தாலும், சில சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளும் வரும். தொழில் நோக்கோடு பார்க்கையில் சில ப்ராஜக்டுகளை அவர்களால் தவிர்க்க இயலாது. ஒத்துக் கொள்வார்கள். ஆனால்.. அந்த மாதிரி ஒப்பந்தங்களுக்கு அசோக்கின் கம்பனியை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அதுவும் முழு வேலையையும் தராமல் ‘பிச்சு பிச்சு’ தருவார்கள்..!!

அசோக்கின் கம்பனி செய்யும் வேலைகள் என்றால்.. வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு சரத்குமாரோ, சாய்குமாரோ.. வாயெல்லாம் பல்லாக குறுக்கும் மறுக்கும் நடப்பதை.. டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்ய வேண்டும்.. ஷூட் செய்ததை தங்கள் லேபுக்கு கொண்டுவந்து, க்ளையன்ட் குறிப்பிட்ட நொடிகளுக்கு மிகாமலும், குறையாமலும் எடிட் செய்ய வேண்டும்.. சரத்குமார், சாய்குமாரின் வேஷ்டி சட்டைகளுக்கும், பளிச்சிடும் பற்களுக்கும்.. விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து.. அதன் வெண்மையை, கண்ணைப்பறிக்கும் வகையில் என்ஹான்ஸ் செய்யவேண்டும்.. ‘சல்யூட்.. ராம்ராஜுக்கு.. சல்யூட்..!!’ என்பது மாதிரியான ஜிங்கில்களை, வீடியோவுடன் பொருத்தமாக மிக்ஸ் செய்யவேண்டும்.. வீடியோவின் இறுதி வடிவத்தை, ஒரு டிஸ்கிலோ, சிப்பிலோ போட்டு.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு டெலிவர் செய்ய வேண்டும்..!!

பரந்தாமனின் BP’யை எகிற வைத்து வேடிக்கை பார்த்த அசோக், மீண்டும் ஆபீசுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது. ஆபீசில் கிஷோர் மட்டும் இல்லை. ‘நாளைக்கு ஷூட்டிங் இருக்கு..’ என்று நேற்றே அசோக்கிடம் சொல்லியிருந்தான். அசோக் உள்ளே நுழைந்தபோது, மீதி நான்கு பேரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்திருந்தார்கள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் ஒன்றில், ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோவும், ஹீரோயினும் கிளிசரின் அப்பிய கண்களுடன் நாதழதழக்க வசனம் பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்து, வாயைப் பிளந்து வைத்தவாறு.. அசோக் வந்ததைக்கூட கவனிக்காமல், திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!!

‘ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!’

‘ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!’

‘இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!’

‘ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!”

‘போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!’

‘என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??’

‘எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!’

‘ஷிவா ப்ளீஸ்.. வார்த்தையால என்னை கொல்லாத..!! நீ இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெஞ்சுறதை நெனச்சா.. எனக்கு இதயமே வெடிச்சிடும் போல இருக்கு..!! அழாத ஷிவா.. ப்ளீஸ்.. அழாத..!!’

‘அப்போ என்னை விட்டு போகாத.. என்கூடவே இருந்துடு..!!’

‘அது என்னால முடியாது..!!’

‘அப்போ நீயே உன் கையால என்னை கொன்னுட்டு போயிடு..!!’

‘ஐயோ கடவுளே..!! என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ற..?? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது..!!’

ஹீரோயின் வானத்தை பார்த்து அலறினாள். அதற்கு மேலும் பொறுமை இல்லாத அசோக்,

“என்ன எழவெடுத்த படம்டா இது..??” என்று சப்தம் எழுப்பினான். உடனே நான்கு பேரும் திரையை விட்டு திரும்பி, இவனை பார்த்தனர். சாலமன் அசோக்குக்கு பதில் சொன்னான்.

“காதல் உல்லாசம்னு ஒரு புதுப்படம் மச்சி..!!” என்று இளிப்புடன் சொன்னான்.

“காதலு..?? உல்லாசமா..?? அப்புறம் ஏன் ‘ஓ’ன்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்குறாய்ங்க..??”

அசோக் கிண்டலாக கேட்க, சாலமன் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் இப்போது பட்டென சிந்தனையில் மூழ்கினர். ‘ஆமாம்ல.. ஏன்..??’ என்பது மாதிரி பரிதாபமாக தலையை சொறிந்து கொண்டனர். சில வினாடிகள் சொறிந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அப்புறம் சாலமன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு,

“அடப்போடா.. ஏடாகூடமா ஏதாவது கேட்டுக்கிட்டு..??” என்று சலிப்பாக சொன்னவாறு திரும்பி திரையை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மற்றவர்களும்..!!

“ஹ்ம்ம்.. பதில் சொல்ல முடியாது.. எனக்கு தெரியும்..!! இப்படித்தான் எல்லாப்பயலும் என்ன எழவுனே தெரியாம, நானும் லவ் பண்றேன்னு, பண்ணிட்டு திரியிறாய்ங்க..!!”

“ஏய்.. போடா போடா.. இவரு பெருசா நாலு லவ்வு, ஏழு மேரேஜ் பண்ணுனவரு.. நமக்கு அட்வைஸ் சொல்றாரு.. போடா டம்மி பீஸு..!!” – இது வேணு

“போங்கடா.. உங்களை மாதிரிலாம் லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலேயே இருக்கலாம்..!!”

“இருந்துக்கோ.. உன்னை யார் இப்போ லவ் பண்ண சொல்லி கெஞ்சுனது..??”

“ம்க்கும்..!! சரி.. அது கெடக்கட்டும்..!! ஆபீஸ் நேரத்துல.. இப்படி மொக்கைப்படம் பாத்துட்டு உக்காந்து இருக்கீங்களே.. வேலை எதுவும் இல்லையா..??”

“ஆமாம்.. பெரிய ஏவிஎம் ஸ்டுடியோ நடத்துறோம்.. வேலைலாம் கரெக்ட் டயத்துக்கு நடந்துடனும்.. போடா.. எல்லாம் நைட்டு பாத்துக்கலாம்..!!”

வேணுவின் பதிலில் அசோக் கடுப்பானான். சில வினாடிகள் அவர்களுடைய முதுகையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் விறுவிறுவென நடந்து சிஸ்டத்தை நோக்கி சென்றான். அதில் செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென பிடுங்க, ஒளிர்ந்து கொண்டிருந்த ஸ்க்ரீன் இப்போது இருட்டானது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டென டென்ஷன் ஆனார்கள்.

“ப்ச்.. டேய்.. மடக்..!! ஏண்டா இப்ப அதை எடுத்த.. பாத்துட்டு இருக்கோம்ல.. போடுடா..!!” – வேணு கோவமாக சொன்னான்.

“மச்சி.. க்ளைமாக்ஸ்டா.. இன்னும் கொஞ்ச நேரந்தான்.. ஸ்டிக்கை குடுடா.. ப்ளீஸ்..!!” – சாலமன் பாவமாக கேட்டான்.

“ஆமாண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!” இரண்டு அல்லக்கை பசங்களும் கோரசாக கெஞ்சினார்கள்.

“போங்கடா.. போய் வேலையை பாருங்க போங்க..!!”

அசோக் கூலாக சொல்லிவிட்டு, மெமரி ஸ்டிக்குடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். சற்றுமுன் கிஷோரை அவன் திட்டியதுபோல, இப்போது எல்லோரும் அவனை கேவலமாக திட்டினார்கள். ஆனால் அந்த திட்டெல்லாம் கண்ணாடி தடுப்பை கடந்து சென்று, அவன் காதில் விழ தவறின.

கிஷோர் ஆபீஸை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவன் வந்தபோது நண்பர்கள் மூவரும் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொண்டிருந்தனர். அவசரமாக கதவை திறந்து உள்ளே நுழைந்த கிஷோர், நுழைந்ததுமே அசோக்கை பார்த்து ஆத்திரமாக கத்தினான்.

“ஏண்டா வெளக்கெண்ணை.. என்னடா பண்ணுன அந்த ஆளை..??”

“எந்த ஆளை..??” அசோக் தாழ்வான குரலில் பம்மினான்.

“நடிக்காத..!! அந்த பரந்தாமனை..??”

“அந்த ஆளை நான் என்ன பண்ணுனேன்.. நான்லாம் ஒன்னும் பண்ணல..!!”

“ப்ச்.. அப்புறம் ஏன் அந்த ஆளு எனக்கு ஃபோன் பண்ணி.. வண்டை வண்டையா திட்டுறான்..??”

“வண்டை வண்டையாவா..??”

“ஆமாம்..!!”

“என்னைய விடவா..??”

“ஆமாண்டா வெண்ணை..!!”

“சரி விடு.. ஏதோ கோவத்துல திட்டிருப்பான்.. சின்னப்பய.. மன்னிச்சு வுட்று..!!”

“மன்னிச்சு வுட்றவா..?? எவ்ளோ கூலா சொல்றான் பாரேன்.. திட்டு வாங்கினது நான்டா..!! சினி ஃபீல்ட்ல ஒரு காண்டாக்ட் புடிக்கிறதுக்கு, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமாடா..?? நீ என்னடான்னா.. காலித்தனமா அந்த காண்டாக்டை காலி பண்ணிட்டு வந்திருக்குற..??”

“விட்ரா.. அந்த ஆளு காண்டாக்ட் இருக்குறது ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்..!! அந்த மசுரு ஒன்லி லவ் சப்ஜக்ட்தான் எடுப்பாராம்.. திரில்லர்லாம் எடுக்க மாட்டாராம்..!! லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுன்னு.. கொஞ்ச நேரம் என் உசுரை வாங்கிட்டான்..!! நல்ல ஆள்ட்ட கதை சொல்ல அனுப்பி விட்டடா என்னை நீ..!!”

“ஏய்.. அந்த ஆளு கேட்டதுல என்ன தப்பு..?? உன்கிட்ட லவ் ஸ்டோரி இருந்தா சொல்லிருக்கணும்.. இல்லனா மூடிட்டு வந்திருக்கணும்..!! எதுக்கு தேவை இல்லாம அந்த ஆள் பொண்ணை பத்திலாம் தப்பா சொன்ன..??”

“ப்ச்.. நான்லாம் அந்த பொண்ணை பத்தி எதுவும் தப்பா சொல்லல.. அந்த ஆளுதான் பெத்த பொண்ணுன்னு கூட நெனைப்பு இல்லாம.. திருட்டு சிறுக்கின்னு கேவலமா திட்டுனான்..!! நான் டீசண்டா ஒரு பொய் சொன்னேன்.. அவ்ளோதான்..!!”

“அதான் ஏன் சொன்னேன்னு கேக்குறேன்..??”

“அந்த ஆள் முகமூடியை கிழிக்கிறதுக்குத்தான்..!! போனதுல இருந்தே லவ்வு லவ்வுன்னு பொலம்பிட்டு இருந்தான்.. ‘சரிய்யா.. நான் உன் பொண்ணை லவ் பண்றேன்.. கட்டிக்குடு..’ன்னு கேட்டா.. என் ஸ்டோரில வர்ற காட்டேரியை விட கர்ணகொடூரமா மாறிட்டான்..!! ஹாஹா.. இப்போ நான் அவனுக்கு வச்சுட்டு வந்திருக்குறேன் பாரு ஊசி.. அது இன்னும் நாலஞ்சு நாளைக்கு அவனை குத்தி குடைஞ்சுட்டு இருக்கும்.. அது போதும் எனக்கு..!!”

அசோக் சொல்லிவிட்டு பெருமையாக புன்னகைத்தான். சாலமனும், வேணுவும் இன்னும் குழப்பம் விலகாமலே காட்சியளித்தனர். கிஷோரோ, அசோக் பதிலுக்கு பதில் பேசியதில், களைத்தும் சலித்தும் போயிருந்தான். அந்த சலிப்பு இப்போது குரலிலும் கலந்து போயிருக்க,

“ஏண்டா இப்படிலாம் பண்ற..??” என்று பரிதாபமாக கேட்டான்.

“நீ ஏண்டா இப்படிலாம் ஃபீல் பண்ற..??” அசோக் அதே டோனில் திருப்பி கேட்டான்.

“பின்ன என்ன..?? அன்னைக்கும் இப்படித்தான்.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’ மோகன்ராஜோட சண்டை போட்டுட்டு வந்த..??”

“அது வேற மேட்டர்.. அந்த ஆள் லூசுத்தனமா ஒரு ஐடியா சொன்னான்.. ‘ஸார்.. இது லூசுத்தனமா இருக்கு ஸார்..’ அப்டினு நான் ரொம்ப மரியாதையாத்தான் சொன்னேன்.. அதுக்கே அந்த ஆளுக்கு கோவம் வந்துடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன லூசுத்தனமா சொன்னான்..??”

“காஞ்சனா ஜுவல்லர்ஸ் வெளம்பரத்துக்கு ஒரு கோட் சொன்னான் மச்சி.. மஹா கேவலமான கோட்..!!”

“என்ன அது..??”

“‘காஞ்சனா ஜ்வல்ஸ் வாங்குங்கள்.. காதலின் ஆழத்தை உங்கள் காதலிக்கு உணர்த்துங்கள்..’ அப்டின்னு..!!”

“நல்லாத்தான இருக்கு..?? இதுல என்ன லூசுத்தனம்..??”

“ஏண்டா.. இவனுக நகையை வாங்கிக் குடுத்துத்தான் காதலோட ஆழத்தை காதலிக்கு உணர்த்தனுமா..?? நாட்ல நகை வாங்க வக்கு இல்லாதவன்லாம் லவ்வே பண்ணக் கூடாதா..?? லவ் பண்றவனுகளை எல்லாம் கேலி பண்ற மாதிரி இல்ல.. அந்த கோட்..?? அதைத்தான் அந்த ஆள்ட்ட சொன்னேன்..!!”

“ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!”

“ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!”

“முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்… போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!”

“ஓ.. அப்படி என்ன டயலாக்..??”

“ம்ம்.. ‘இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..’ன்னு சொல்வாரு..!!”

“ஹாஹா… பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??”

“நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!”

“போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??”

“சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!”

“உங்களுக்காகவா.??”

“ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??” கிஷோர் அந்த மாதிரி கேட்க,

“ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஏண்டா இப்படி சொல்ற..??”

“பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி ‘ஊஊஊ’ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!” – அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட ‘ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..’ அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!” – இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. ‘என் மூஞ்சிலயே முழிக்காத’ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. ‘அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..’ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்..” – நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்.

“உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!” அசோக் முடிவாக சொல்ல,

“ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!” வேணு உணர்சிகரமாக கேட்டான்.

“என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான்.

“மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!”

“ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!”

“அப்புறம்..??”

“வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!” விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான்.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான்.

“சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!”

“என்னடா மச்சி திடீர்னு..??”

“இன்னைக்கு என் பர்த்டேடா..!!” அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி.

“டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!” எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

“ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!”

“ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??” கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க,

“உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!”

“ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??” வேணு சலித்துக் கொண்டான்.

“ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??”

“ம்ம்..!!”

“போ போ.. போய் கேளு போ..!!”

அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க,

“ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??”

“ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!”

இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான்.

“டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??”

“இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!” சாலமன் பாவமாக சொன்னான்.

“அடப்பாவி..!!!!”

“அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!” அழுகிற குரலில் சாலமன் சொல்ல,

“கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர்.

எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??”

“என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??”

“என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??”

என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான்.

“யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!” – அசோக் அந்த ‘நம்பி’க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!” – இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை.

“இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!”

“ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!” என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.

இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான்.

“மச்சி.. ‘All is fair in love and war’..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!”

“போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!”

“அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!”

“ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!”

“சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??”

வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான்.

“நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு ‘Perfect Stranger’-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!”

“ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ ‘Perfect Psycho’-வா இருக்கப்போறா..!!”

வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான்.

“மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது.

“மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே,

“மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!”

சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான்.

அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், ‘உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..’ என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!!

இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!!

அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள்.

அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, ‘Perfect Stranger’ என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments