அன்புள்ள ராட்சசி – பகுதி 54

ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!

“என்னாச்சு அசோக்..??” மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!” என்றான்.

மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!

“என்ன ஸார் சொல்றாங்க..??”

“அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!”

“ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??”

“ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!”

“அ..அப்போ வாங்க ஸார் இப்போவே கெளம்பலாம்..!!” அசோக் அவசரப்பட்டான். ஸ்ரீனிவாச பிரசாத் நிதானமாகத்தான் இருந்தார்.

“டேய்.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத..!! உன் சந்தேகம் சரிதான்னு உனக்கு தோணுதா..??”

“ஹையோ.. நான் ஸ்ட்ராங்கா நம்புறேன் ஸார்..!! இந்த விஜயசாரதிதான் மீராவுக்காக அந்த ஸிம் வாங்கி தந்திருக்கணும்.. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திருக்கணும்.. அதனாலதான்.. நீங்க மீராவோட அடையாளம்லாம் சொல்லி அவளை தெரியுமான்னு கேட்டப்போ.. அவன் தெரியாதுன்னு சொல்லி மழுப்பிருக்கனும்..!! அவன்தான் ஸார்.. அவனேதான்.. சந்தேகமே இல்ல..!! அவனை விசாரிச்சா என் மீரா எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும் ஸார்..!!”

“ஹ்ம்ம்..!! சரி நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! இப்போ மட்டும் அவன் வாயை திறப்பான்னு என்ன நிச்சயம்..?? இப்போவும்.. அவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அவன் அடம்பிடிச்சா..??”

“விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மையை சொல்லுவான் ஸார்..!!”

“டேய்.. அவங்கள்லாம் பெரிய ஆளுங்கடா.. அந்த மாதிரிலாம் அடிச்சு விசாரிக்க முடியாது..!!”

“ஹையோ நானும் அந்த அர்த்ததுல சொல்லல ஸார்..!! அவன்கிட்ட எப்படியாவது, கெஞ்சி கூத்தாடியாவது மீரா பத்தி தெரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ் ஸார்..!!”

அசோக் கெஞ்சலாக சொல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் அவனுடைய முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! ‘காதல் மனிதனை என்னன்ன பாடெல்லாம் படுத்துகிறது?’ என்பது மாதிரி இருந்தது அவரது பார்வை..!! பிறகு ஒரு பெருமூச்சுடனே எழுந்து கொண்டவர்..

“சரி வா.. கெளம்பலாம்..!!” என்றார்.

வடபழனி காவல் நிலையத்தில் இருந்து.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்..!! நூறு அடி சாலையை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பின் வேகத்தை அதிகரித்தார்..!! அரை மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் கழிந்த போது.. அந்த மாதவரம் வீட்டை அவர்கள் அடைந்திருந்தனர்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு முன்பே அறிமுகமாகியிருந்த.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை சந்தித்து பேசினர்..!!

“என்ன ஸார்.. தம்பியை தேடிக்கிட்டு அடிக்கடி வர்றீங்க.. எதுவும் பிரச்சினை இல்லையே..??”

“இல்ல ஸார்.. ஆக்சுவலா இது வேற பிரச்சினை.. மிஸ்டர் விஜயசாரதி மூலமா யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ஏதாவது கெடைக்குமான்னு பாக்குறோம்.. வேற ஒன்னுல்ல..!!”

“ஹ்ம்ம்.. தம்பி ரெண்டு நாளு முன்னாடிதான் இந்தியாவுக்கே வந்தாப்ல..!!”

“தெரியும் ஸார்.. நீங்க தந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டுத்தான் இங்க வர்றேன்..!!”

“ஓ.. அப்படியா.. சரி சரி..!! ம்ம்ம்.. அவர் இப்போ வீட்ல இல்லிங்களே.. வெளில போயிருக்காரு..!!”

“எங்க போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“எங்க போயிருப்பாரு.. சனிக்கிழமை சாயந்திரம்.. ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு ரெட்ஹில்ஸ்ல இருக்குற கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருப்பாரு..!!”

“ம்ம்.. அவரை காண்டாக்ட் பண்றதுக்கு எதுவும் நம்பர் இருக்கா..??”

“ஓ எஸ்.. இருக்கே..!!”

அவர் நம்பரை சொல்ல.. அசோக் தனது செல்போனில் சேகரித்துக் கொண்டான்..!! சேகரித்துக் கொண்ட வேகத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தான்.. என்கேஜ்டாக இருந்தது..!! சிறிது நேரம் காத்திருந்துவிட்டு.. மீண்டும் கால் செய்து பார்க்க.. மீண்டும் என்கேஜ்ட்..!! திரும்பவும் அந்த எண்ணை முயற்சி செய்ய நினைத்த அசோக்கை.. இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் தடுத்தார்..!!

“வேணாம் அசோக்.. விடு..!!”

“ஏன் ஸார்..??”

“இந்த மேட்டரை ஃபோன்ல பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது.. நேர்லயே போய் பேசிடலாம்..!!” அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், எதிரே இருந்த பி.ஏவிடம் திரும்பி,

“ஸார்.. அந்த ரெட்ஹில்ஸ் கெஸ்ட் ஹவுஸோட அட்ரஸ் கொஞ்சம் சொல்றீங்களா..??” என்று கேட்டார்.

அதே நேரம்..

“No 37, தேவன்பு ஸ்ட்ரீட், off G.N.T ரோட், ரெட்ஹில்ஸ்..!!”

கார் ஓட்டிக்கொண்டிருந்த விஜயசாரதி.. காதில் வைத்திருந்த செல்ஃபோனில் அந்த கெஸ்ட் ஹவுஸின் முகவரியை சொல்லிக்கொண்டிருந்தான்..!! அடுத்த முனையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.. சாட்சாத் நமது மீராவேதான்..!!!!

“நீதான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்திருக்கல..?? உடம்புல ஒட்டுத்துணி இல்லாம.. நாலு மணி நேரம் அந்த வீட்ல படுத்திருந்த.. ஞாபகம் இல்ல..??” விஜயசாரதியின் குரலில் எள்ளல் தொனித்தது.

“ஏன் இப்படிலாம் பண்ற..??” கேட்ட மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஆத்திரமும், ஆதங்கமும் வெடித்து சிதறியது.

“ஹாஹா.. அப்படி என்ன பண்ணிட்டேன்..??”

“ஏற்கனவே என் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கிட்ட.. இன்னும் உனக்கு வெறி அடங்கலையா..??”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!” பெரிதாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்திய விஜயசாரதி தொடர்ந்து பேசினான்.

“என்ன பண்ண சொல்ற டார்லிங்..?? நான் பாட்டுக்கு கம்முனு இருந்தேன்.. உண்மையை சொல்லப்போனா.. என் செல்லத்தை நான் சுத்தமா மறந்தே போயிட்டேன் தெரியுமா..?? ப்ராமிஸ்டா செல்லம்.. என்னை நம்பு..!!”

“………………..”

“ஹ்ம்ம்.. சும்மா இருந்தவன்கிட்ட வந்து.. ‘நான் இருக்கேன், நான் இருக்கேன்’ன்னு உன்னை நீயே ஞாபகப்படுத்தி விட்டுட்டு.. இப்போ என்னை குத்தம் சொன்னா என்ன நியாயம் டார்லிங்..??”

“நான் என்ன பண்ணினேன்..??”

“என்ன பண்ணுனியா..?? உன்னை யார் போலீஸ்க்குலாம் போக சொன்னது..??”

“எத்தனை தடவை சொல்றது.. நான் போலீஸ்க்கு போகல, போலீஸ்க்கு போகலன்னு..!!”

“அப்புறம் எப்படி அவங்களுக்கு என் நம்பர் தெரிஞ்சது.. உன்னை பத்திலாம் தெரிஞ்சது..??”

“அது வேற பிரச்னை.. சொன்னா உனக்கு புரியாது..!!”

“ஹாஹா.. வாட்டெவர்.. ஐ டோன்ட் கேர்..!! சும்மா இருந்தவன் மனசுல.. அந்த ஆள் கால் பண்ணி உன்னை பத்தி விசாரிச்சதும் ஆசை வந்துடுச்சும்மா..!! உன் உடம்பு.. அந்த ஷேப்.. அந்த ஸ்மெல்.. நீ எனக்கு தந்த சுகம்.. வாவ்…!!! நெனச்சு பாத்ததுமே உடம்புல அப்படியே குப்புனு ஒரு சூடு ஏறிடுச்சு செல்லம்..!! அதான் இன்னும் ரெண்டு வாரத்துல இண்டியா போறோமே.. ரெண்டாவது இன்னிங்ஸ் ஆடிப்பாக்கலாமான்னு ஒரு ஆசை வந்துடுச்சு..!! அந்த ஆசையை அடக்க முடியாமத்தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணினேன்..!!”

“ப்ளீஸ் விஜய்.. இது வேணாம்.. என்னை விட்ரு..!!” மீரா திடீரென கெஞ்சினாள்.

“அப்போ அந்த வீடியோ உனக்கு வேணாமா..?? நெட்ல போட்ரலாமா..??”

“நோ..!!!!”

“எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா.. என் மூஞ்சி அதுல சுத்தமா தெரியாது..!! உன்னோட லவ்லி ஃபேஸ்தான் அதுல ஹைலைட்டே..!!”

“ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற.?? ப்ளீஸ்.. அந்த வீடியோவை எங்கிட்ட குடுத்திடு..!!”

“அப்போ ரெட்ஹில்ஸ் வா.. ஜஸ்ட் இன்னைக்கு நைட் மட்டும்.. சித்திரவதை பண்ண கூப்பிடல.. சந்தோஷமா இருக்கலாம்னுதான் கூப்பிடுறேன்..!! இன்னும் என் செல்ஃபோன்லதான் அந்த வீடியோ இருக்குது.. காலைல நீ போறப்போ என் செல்ஃபோனோட சேர்த்து, அதை உனக்கு காதல்பரிசா குடுத்துடுறேன்.. ஓகே வா..??”

“………………..”

“ஹ்ம்ம்.. அன்னைக்கு நீ மயக்கத்துல இருந்ததால.. நெறைய விஷயம் ட்ரை பண்ண முடியலடி செல்லம்.. எனக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா..?? அதெல்லாத்தையும் இன்னைக்கு பண்ணி பாக்குறோம்.. எல்லாம் உன்னோட சுயநினைவோட.. தெகட்ட தெகட்ட..!! You are going to enjoy this chellam.. I promise..!!”

விஜயசாரதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவனது நம்பருக்கு இன்னொரு கால் வருவதை.. ‘கீங் கீங்’ என்று ஒலியெழுப்பி அவனது செல்ஃபோன் அறிவித்தது..!! உடனே..

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன்..!!”

என்றுவிட்டு மீராவுடனான தொடர்பை துண்டித்தான்..!! செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தவன்.. அன்னோன் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தப்பதை தெரிந்துகொண்டான்.. அசோக்கின் நம்பர் அது..!! அன்னோன் நம்பர் என்று தெரிந்ததும்.. திரும்ப கால் செய்யும் எண்ணத்தை கைவிட்டான்.. மீண்டும் மீராவின் எண்ணை அழைக்க நினைத்தான்..!! அதற்குள்ளாகவே அவனது செல்ஃபோனுக்கு வேறொரு நம்பரில் இருந்து கால் வந்தது..!!

“KASI CALLING..!!!”

என்று பளிச்சிட்டது செல்ஃபோன் டிஸ்ப்ளே..!! காசி.. போதைப்பொருள் விநியோகிப்பவன்.. போலீஸாரால் வலைவீசி தேடப்படுகிறவன்..!! விஜயசாரதி அந்த காலை அட்டண்ட் செய்தான்.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் பேசினான்..!!

“சொல்லு மாமு.. எங்க இருக்குற..??”

“அங்கதாண்டா வந்துட்டு இருக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்..!!”

“ஓ.. நானும் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..!! அதுசரி.. சரக்கு ரெடியா..?? அதை சொல்லு மொதல்ல..!!”

“ம்ம்.. ரெடி ரெடி..!! நீ சொன்னதை விட நெறயவே ரெடி..!!”

“வாவ்…!!!!! தேட்ஸ் க்ரேட்..!!!!!” விஜயசாரதி குதுகலிக்க, காசியின் குரலில் ஒரு சீரியஸ்னஸ்.

“மாமு இன்னொரு விஷயம்..!!”

“என்ன..??”

“சொல்றேன்னு தப்பா நினைக்காத.. அமவுன்ட்டு உடனே வேணுண்டா..!!”

“ஏய்.. என்னடா இது.. ஏதோ புது ஆள்ட்ட பேசுற மாதிரி பேசுற..?? நமக்குள்ள பணம்லாம் ஒரு பிரச்சினையா..??”

“அதுக்கு சொல்லல மாமு..!! முன்ன மாதிரி இல்ல.. இப்போலாம் கெடுபுடி ஜாஸ்திடா.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ணிருக்கேன்..!! அதில்லாம.. நானே இப்போ பல பிரச்னைல இருக்கேன்..!! பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது மாமு..!!”

“ப்ச்.. ஒன்னும் கவலைப்படாத.. உடனே வாங்கிக்கலாம்..!! ஆமாம்.. வேற எதோ பிரச்னைன்னு சொன்னியே.. என்னது..??”

“இப்போ வேணாம்.. எல்லாம் அங்க வந்து விவரமா சொல்றேன்..!!”

“வா வா..!! ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம்ல.. உனக்கு பணம் மட்டும் இல்ல.. செம்மையா ஒரு விருந்தே ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாமு..!!”

“விருந்தா.. என்ன விருந்து..??”

“கோழி விருந்து மாமு..!! பொட்டைக் கோழி.. அதுலயும் சக்கையான வெடக்கோழி..!!”

“ஏய்.. என்னடா சொல்ற..??”

“அனுஷ்கா பிடிக்குமா உனக்கு ..??”

“யாரு.. நம்ம அருந்ததி அனுஷ்காவா..??”

“ம்ம்.. அவளேதான்..!!”

“பிடிக்குமே.. ஏன் கேக்குற..??”

“அவள்லாம் இவகிட்ட பிச்சை வாங்கணும்.. அந்த அளவுக்கு இருப்பான்னா பாத்துக்கோ..!!”

“யார்டா அது.. ஐட்டமா..??”

“ஐட்டமா..?? அடப்பாவி.. நானே தேத்துனதுடா..!!”

“நீயே தேத்துனதா.. அப்புறம் என்னையும் கூப்பிடுற.. அந்தபொண்னுக்கு ஓகேவா..??”

“அவகிட்ட பெர்மிஷன்லாம் வேற கேக்கணுமா..?? நாம நில்லுனா நிப்பா.. உக்காருனா உக்காருவா மாமு..!!”

“என்னடா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல..!!”

“அவ மேட்டர் ஒன்னு நம்மகிட்ட மாட்டிருக்குது மாமு.. நாம என்ன சொன்னாலும் அவ கேட்டுத்தான் ஆகணும்..!! என்ன்ன்ன சொன்னாலும்..!!! புரியுதா..??”

“ஓ..!! ஏதாவது பிரச்னையாகிட போகுதுடா..!!”

“ஒரு பிரச்னையும் இல்ல மாமு.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. சரியான தொடை நடுங்கி.. புள்ளப்பூச்சி மாமு அவ..!! அந்த புள்ளப்பூச்சியை இன்னைக்கு பறக்கவிட்டு பறக்கவிட்டு அடிச்சு நசுக்குறோம்.. புரியுதா..?? சீக்கிரம் வா.. ஒரு பொண்ணுகிட்ட இதெல்லாம் பண்ணிப் பாக்கனும்னு உனக்கு அசிங்கமான ஆசைலாம் இருக்கும்ல.. அதெல்லாம் அவகிட்ட இன்னைக்கு பண்ணிப் பாத்துடலாம்.. வா..!!” குரூரமாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான் விஜயசாரதி.

அதேநேரம்..

ரெட்ஹில்ஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மீரா.. விஜயசாரதியிடம் பேசிமுடித்து கையிலேயே வைத்திருந்த செல்ஃபோனை.. (அசோக்குடன் பழகிய காலத்தில் அவன் அறியாமல் பதுக்கி வைத்திருந்த அந்த செல்ஃபோனை..) இப்போது ஹேண்ட் பேக் திறந்து உள்ளே வைத்தாள்..!! அந்த மாதிரி அவள் உள்ளே வைக்கையில்.. பேகுக்குள் இருந்த அந்த வஸ்து பளிச்சென்று வெளியே தெரிந்தது..!!

அரையடிக்கும் சற்று அதிகமான நீளத்தில்.. பளபளவென மினுமினுத்த ஒரு உலோக கத்தி..!!

“இந்த லெஃப்ட் எடுத்துக்கோங்கண்ணா..!!” ஆட்டோ ட்ரைவரிடம் மிக இயல்பான குரலில் சொன்னாள் மீரா.

அதேநேரம்..

அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் ஜீப்பில் ஏறியிருந்தார்கள்.. ரிஸ்வான் ரோட்டில் மிதமான வேகத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தது..!! அசோக்கும் சரி.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.. முகத்தை மிக இறுக்கமாகவே வைத்திருந்தனர்.. அவரவர் மூளைகளில் விழைந்த சிந்தனைகளிலேயே மிக கவனமாக இருந்தனர்..!!

திருமுருகன் நகர் ஜங்கஷனில் எதிர்கொண்ட ட்ராஃபிக்கை சமாளித்து.. ரெட்ஹில்ஸ் வந்து சேர அவர்களுக்கு அரைமணிநேரம் ஆனது..!! பி.ஏவிடம் வாங்கிக்கொண்ட முகவரியை அடைய மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது..!!

இளஞ்சிவப்பு நிறத்தில் மிக பளபளப்பாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. அருகில் வேறேதும் வீடுகள் இன்றி தனித்திருந்தது..!! பத்தடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர்.. பச்சை மரங்கள் அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி வளர்ந்து, நீளநீளமாய் வெளியே தலைநீட்டின..!! இரும்பு பட்டைகளாலும் மரத்தகடுகளாலும் ஆன அகலமான வாயிற்கதவு..!! பறவைகளின் சப்தத்தை தவிர.. சுற்றிலும் நிசப்தம்..!!

வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!

வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!

“தெறந்தேதான் இருக்கு ஸார்..!!”

சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!

உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments