ஆண்மை தவறேல் – பகுதி 1

மீண்டும் ஒரு சிம்பிளான கதையை கையில் எடுத்திருக்கிறேன். கதை சொல்லும் விதத்தையும், இந்தக்கதைக்காக நான் உருவாக்கிய சில கேரக்டர்களையும் நம்பியே இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..? என்பது பற்றி என்னுடைய கருத்தை இந்தக்கதையில் சொல்ல கொஞ்சம் முயற்சிக்கிறேன். கதை சற்று நிதானமாகவே நகரும். உங்களுடைய பொறுமைக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் இதுவரை உற்சாகப்படுத்திய உங்களிடம் இருந்து, இந்த முயற்சிக்கும் அத்தகைய உற்சாகத்தை எதிர்பார்த்து, இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அத்தியாயம் 1

அதிகாலை இருளில் அந்த இடம் தெப்பலாக நனைந்திருந்தது. நேரம் அப்போது 4.30..!! நான்கு புறமும் இரும்புக்கம்பி வேலிகளால் சூழப்பட்ட அந்தக் கட்டிடம், அந்த அதிகாலை இருளுக்குள் அமைதியாக நின்றிருந்தது. நான்கு அடுக்குகள் கொண்ட.. அகலமாய் விரிந்திருந்த.. பிரம்மாண்டமான கட்டிடம்..!! கட்டிடத்தை சுற்றிலும் உயரம் உயரமாய் வளர்ந்திருந்த பச்சை பசேல் மரங்கள், இப்போது கரிய நிறத்தில் காட்சியளித்தன.. காற்றுக்கு மெல்ல தலையசைத்துக் கொண்டிருந்தன..!!

அது ஒரு மாணவர் விடுதி.. கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான மாணவர் விடுதி..!! மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் எல்லாம் இந்த நேரத்தில், விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தன. கேட்டுக்கு இருபுறமும் நின்றிருந்த உயரமான ஸ்டீல் போஸ்டுகளில் மட்டும் இரண்டு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகள் உமிழ்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தின் அடியில், வாட்ச்மேன் வாய் பிளந்தவாறு சேரில் உறைந்திருந்தான்.

கட்டிடத்தின் நான்கு அடுக்குகளிலும் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருண்ட ஜன்னல்களில், ஒன்று மட்டும் இப்போது பளிச்சென வெளிச்சமாய் ஒளிர்ந்தது. விளக்கினை உயிர்ப்பித்த அசோக், உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். திடீர் வெளிச்சத்துக்கு கூசியதால், அவன் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவனுடைய அறையின் சுவர் எங்கிலும் ஆபாச சித்திரங்கள் ஒட்டப் பட்டிருக்கும். அரைகுறை உடைகளோடு.. அளவுக்கு மீறி வளர்ந்திருக்கும் தங்களுடைய அங்கங்களை காட்டியவாறு.. பெண்கள் அந்த சித்திரங்களில் சிரிப்பார்கள். காலையில் எழுந்ததுமே அந்த ஆபாசத்தை காணக் கண்கூசிதான் அசோக் விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான். இது தினமும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

கண்களை மூடிக்கொண்டவன், இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டி.. சுவரையும், சுவரோடு பொருந்தியிருந்த அலமாரியையும் தடவி தடவியே.. அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தான். அதன் மீதிருந்த அவனது பெட்டியை திறந்தான். உள்ளே கைவிட்டு தன் மூக்கு கண்ணாடியை தேடி அணிந்து கொண்டான். அப்புறம் தன் இமைகளை மெல்ல பிரித்தான். பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தான்.

சில வினாடிகள் கடவுளின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் மெல்ல திரும்பி அறையை பார்வையிட்டான். சிறிய அறைதான். அறையின் இரண்டு ஓரங்களிலும், சுவரை ஒட்டி கிடக்கும் இரண்டு ஒற்றைக் கட்டில்கள்தான் பிரதானம். ஒரு கட்டிலில் முழு உடலையும் போர்வையால் போர்த்தியவாறு அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அசோக்கின் அறை நண்பன் புருஷோத்தமன்..!! அவன்தான் சுவற்றில் சிரிக்கும் சிங்காரிகளை வரைந்த ஓவியன். நல்ல ஓவியத்திறமை அவனுக்கு.. அந்த திறமையை இந்த மாதிரி ஓவியங்கள் வரைய பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

அசோக் ஒருமுறை விழிகளை சுழற்றி அந்த ஓவியங்களை பார்த்தான். அவனுடைய மனதினில் ஒரு கெட்ட விதமான காம எண்ணம் சரசரவென ஊற ஆரம்பித்தது. சில விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை உதறிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினான். உடனடியாய் சுறுசுறுப்பானவன், டேபிளுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தான். ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டான். சோப்பு டப்பாவும், டவலும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

அசோக்கின் சொந்த ஊர் சென்னைதான். செல்வ செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தவன். அசோக்கிற்கு அம்மா கிடையாது.. அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போதே இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள்..!! அசோக்குடைய அப்பா ஒரு தொழிலதிபர். மனைவி பிரிந்த பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், இனி மகன்தான் தன் ஒரே சொந்தம் என்று முடிவு செய்து கொண்டவர்.

அசோக் ஒரு அப்பாவி.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு வாய்த்த நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகிவிட மாட்டான். உலக அறிவு என்பது அவனை பொறுத்தவரையில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான்..!! அவனுக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு.. படிப்பு.. படிப்புதான்..!! நீங்களும் தொடர்ந்து படியுங்கள்.. அசோக்கைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்..!!

ஒரு பதினைந்து நிமிடங்களில் அசோக் மீண்டும் அறைக்கு திரும்பினான். இப்போது குளித்து முடித்து மிகவும் புத்துணர்வுடன் இருந்தான். வேறு உடைகளை அணிந்து கொண்டவன், திருநீறு அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். மீண்டும் விநாயகர் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தான். கண்கள் மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் காரிய சித்தி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து

ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மந்திரம் சொன்னவன், அப்புறம் புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து, படிக்க ஆரம்பித்தான். இன்றுதான் கடைசி செமஸ்டரின் கடைசி எக்ஸாம்..!! இன்றோடு இந்த இளநிலை இஞ்சினியரிங் டிக்ரிக்கான உழைப்பு ஒரு முடிவுக்கு வருகிறது..!! நான்காண்டுகளான.. இந்த கல்லூரி, இந்த ஹாஸ்டல் வாழ்க்கைக்கும் இன்றுதான் இறுதி நாள்..!! அசோக் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அப்படியே உலகத்தை மறந்து, புத்தகத்துக்குள் மூழ்கிப் போனான்.

கிழக்கு இப்போது மெல்ல வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஹாஸ்டலிலும் இப்போது நிறைய ஜன்னல்கள் வெளிச்சத்தை வெளியிட ஆரம்பித்திருந்தன. வாட்ச்மேன் கூட விழித்துக்கொண்டு.. சும்மா நின்றிருந்த நாய்கள் மீது கல்லெறிந்து விரட்டியவாறு.. சுறுசுறுப்பாக காணப்பட்டான். ஹாஸ்டலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் டீக்கடை ஒன்றில், குத்துப்பாட்டு ஒன்று சத்தமாக ஒலித்தது. காலையிலேயே கண்விழித்துக் கொண்ட காகங்களும் குருவிகளும், கத்திக்கொண்டு அங்கும் இங்கும் இலக்கில்லாமல் பறந்தன.

படிப்பில் மூழ்கியிருந்த அசோக்கிற்கு திடீரென்றுதான் அது நினைவுக்கு வந்தது. புருஷோத்தமன் நேற்று இரவு எங்கோ சென்று ஊர் சுற்றிவிட்டு, நள்ளிரவுக்கு மேல்தான் அறைக்கு திரும்பினான். தூங்கிக்கொண்டிருந்த அசோக்கை எழுப்பி..

“அசோக்.. கா..காலைல ஒரு ஆறு மணிக்குலாம் என்னை எழுப்பி விட்ரு.. சரியா..?”

என்று ஆல்கஹால் ஸ்மெல்லுடன் வாய்குழற சொன்னான். அசோக்கோ தூக்கக் கலக்கத்துடன் முனகினான்.

“ம்ம்ம்…”

“த்தா.. மறந்துடாதடா..!! நா..நாளைக்கு எக்சாமுக்கு ஒரு மசுரும் படிக்கலை.. காலைல நீ எழுப்பி விடலைன்னா.. கப்புதான்..!!”

“ம்ம்ம்.. சரிடா..!!”

புருஷோத்தமனின் நினைவு வந்ததும், அசோக் உடனே டேபிள் மீதிருந்த கடிகாரத்தை பார்த்தான். ஆறு மணியாகி இப்போது ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. சேரில் இருந்து எழுந்துகொண்ட அசோக், புருஷோத்தமனின் அருகில் சென்று அவனுடைய தோள்பட்டையை பற்றி உலுக்கினான்.

“டேய்.. புருசு.. டேய்..”

அவ்வளவுதான்..!! புருஷோத்தமன் படக்கென்று உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான். போர்வைக்குள் இருந்து வெளிப்பட்ட அவனது வலது கால், அசோக்கின் வயிற்றிலேயே ஓங்கி ஒரு உதை விட்டது. நல்ல வலுவான உதை..!! அசோக் அப்படியே பொறி கலங்கிப் போய் நான்கைந்து அடிகள் பின்வாங்கினான். கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“அம்மாஆஆஆஹ்ஹ்..!!!”

என்று வலியில் முக்கியவாறு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தான். உடலின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. கொஞ்ச நேரத்திற்கு மூச்சு விடவே அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்பு மூச்சு சீரானதும், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவ்வாறு அமர்ந்த நிலையிலேயே மீண்டும் புருஷோத்தமனை அழைத்தான்.

“டேய்.. புருசு.. எந்திரிடா..!!” அசோக்கின் பரிதாப அழைப்புக்கு,

“ம்ம்ம்…” என்று ஒரு உறுமல் மட்டுமே புருஷோத்தமனிடம் இருந்து வெளிப்பட்டது.

அசோக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து மீண்டும் புருஷோத்தமனை நெருங்கினான். இந்த முறை அவனுடைய தோளைப் பற்றி பலமாக உலுக்கிவிட்டு, அவன் உதை விடுவதற்குள், ஓடிப்போய் தூரமாக நின்றுகொண்டான். உதைத்துப் பார்த்து ஏமாந்த புருஷோத்தமன், கடுப்புடன் எழுந்து அமர்ந்தான். அறையின் ஓரமாக பம்மிக் கொண்டு நிண்டிருந்த அசோக்கை பார்த்து கை நீட்டி, கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான்.

“த்தா.. நாறக்…, முட்டாப்……, ……, ……, ……, அறிவிருக்காடா..??”

“ஏய்.. நீதானடா எழுப்பி விட சொன்ன..?”

“அதுக்காக..???” அவனுக்கு இன்னும் கோவம் குறையவில்லை.

“எந்திரிச்சு படிடா புருசு.. ஒன்னும் படிக்கலைன்னு சொன்னில..? இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கு.. கொஞ்சமாவது படிடா..!! ப்ளீஸ்..!!” அசோக் கெஞ்சலாக சொல்ல, அவன் இப்போது சற்று சாந்தமானான்.

“ம்ம்.. ம்ம்.. எல்லா மசுரும் எங்களுக்கு தெரியும்..!! நீ மூடிட்டு போய் படி.. போ..!!”

அசோக் உதை வாங்கிய வயிற்றைப் பிடித்தவாறே நடந்து சென்று சேரில் அமர்ந்து கொண்டான். விட்ட இடத்தில் இருந்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான். புருஷோத்தமன் கொஞ்ச நேரம் எதையோ பறிகொடுத்த மாதிரி, படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் ஒருவழியாக மனம் வந்தவனாய் எழுந்து குளிக்க சென்றான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பிய புருஷோத்தமன், இப்போது சற்று தெளிவாக இருந்தான். ‘த்தா.. ஆறு மணிக்குலாம் அத்தனை பயலும் எந்திரிச்சு கியூல நிக்கிறாங்கையா.. ச்சே..’ என்று சலித்துக் கொண்டே வந்தான். ஈர ஜட்டியை கொடியில் காயப்போட்டவன், அதே கையுடன் அசோக்கின் கன்னத்தை பிடித்து திருகி, ‘ஹாய்.. அசோக் பேபி..!!’ என்று குழைவான குரலில் கொஞ்சினான். அசோக்கோ முகத்தை சுளித்துக் கொண்டான். உடனே புருஷோத்தமன்,

“என்னடி செல்லம்.. மூஞ்சை திருப்பிக்கிட்ட..? மாமன் மேல கோவமா..?” என்று நக்கலாக குழைந்தான்.

“அ..அதுலாம் ஒண்ணுல்ல..”

“அப்புறம் என்ன..? நான் உன்னை தொடுறது புடிக்கலையா.?”

“ப்ச்.. அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல.. விடு..”

“சரி சரி கோவிச்சுக்காத.. சும்மா.. வெளையாட்டுக்கு..!!”

“ம்ம்.. கோவம்லாம் ஒன்னும் இல்ல..”

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அசோக்.. சும்மா சொல்லக் கூடாது.. நச்சு பீஸ்டா நீ..!! பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்..!! த்தா.. ஜஸ்ட் மிஸ்ல பையனா போயிட்ட..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ மட்டும் பொண்ணாருந்திருந்தா எனக்கு எவ்வளவு வசதியா இருந்திருக்கும் தெரியுமா..??” புருஷோத்தமன் ஏக்கமாக சொல்ல,

“ம்ம்ம்..” அசோக் அவஸ்தையாக நெளிந்தான்.

“நீ பொண்ணா பொறந்திருந்தேன்னு வச்சுக்கோ.. காலேஜ்ல வேற எவளுக்கும் மார்க்கெட் இருந்திருக்காது.. எல்லாரையும் அடிச்சு காலி பண்ணிருக்கலாம்.. பசங்கல்லாம் உன் பின்னாடிதான் திரிஞ்சிருப்பானுக.. நாய் மாதிரி ஜொள்ளு வுட்டுக்கிட்டு..!!”

சொல்லிக்கொண்டே புருஷோத்தமன் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு, அசோக்கிற்கு எதிரே அமர்ந்தான். சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, புகையை கவலை இல்லாமல் அசோக்கின் முகத்தில் ஊதினான். அசோக் சிகரெட் நெடிக்கு முகத்தை சுளிக்க, புருஷோத்தமனோ அதை கண்டுகொள்ளாமல் கேட்டான்.
“எத்தனை மணிக்குடா எந்திரிச்ச..?”

“நா..நாலரைக்கு..”

“த்தா.. வாங்குன மார்க்குலாம் பத்தாதாடா உனக்கு..? நாலரை மணிக்கு வேற எந்திரிச்சு.. அப்படி படிச்சு மார்க்கு வாங்கனுமா..? ஏண்டா இப்படி மார்க்கு மார்க்குன்னு வெறி புடிச்சு அலையுற..?”

“லாஸ்ட் எக்ஸாம்டா.. நல்லா பண்ணனும்..!!”

“ஓஹோ..? பண்ணு பண்ணு.. நல்லா பண்ணு..!!”

“நீ படிக்கலையா..?”

“ஹாஹா.. படிக்கவா..? போடாங்..!!”

“அப்புறம் எதுக்கு எழுப்பி விட சொன்ன..?”

“எழுப்பி விட சொன்னது படிக்கிறதுக்கு இல்ல டியர்..”

“அப்புறம்..?”

“பிட் பிரிப்பேர் பண்றதுக்கு..!!”

கண்சிமிட்டியவாறே சொன்ன புருஷோத்தமன், வாயில் சிகரெட்டை வைத்து புகை விட்டுக்கொண்டே, பாடப்புத்தகத்தை எடுத்தான். புரட்டினான். எந்தெந்த கொஸ்டின் எல்லாம் எக்ஸாமுக்கு வரும் என்று தலையை சொரிய ஆரம்பித்தான்.

அப்புறம் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே அவரவர் வேலையில் மூழ்கிப் போயினர். எட்டு மணி ஆனதும் அசோக் மெஸ்சுக்கு சென்று இட்லி தின்று திரும்ப வந்தான். புருஷோத்தமன் சாப்பிடவே செல்லவில்லை. பிட் கிழிப்பதில் பிஸியாக இருந்தான்.

ஒன்பதரை மணி வாக்கில் அசோக் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான். புத்தகத்தை விட்டு நிமிர்ந்து பார்த்த புருஷோத்தமன், அசோக்கிடம் கேட்டான்.

“என்னடா கெளம்பிட்டியா..?”

“ம்ம்.. ஆமாம்..!! நீ கெளம்பலையா புருசு..?”

“போ போ.. பின்னாலேயே வர்றேன்..”

அசோக் வேறு சட்டை மாட்டிக் கொண்டான். பேன்ட் அணிந்துகொண்டான். அதை அணிந்ததுமே அவனுடைய வலது தொடையை ஏதோ கீறியது. என்னவென்று அறிந்து கொள்ள, பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுப் பார்த்தான். பார்த்தவன் உடனே பதறிப் போனான். உள்ளே இருந்து இரண்டு காண்டம் பாக்கெட்டுகள் கையோடு வந்தன..!!

“ஐயே.. ச்சீய்…!!!”

என்று முகத்தை சுளித்து கத்தியவாறு, அசோக் கையிலிருந்தவைகளை தரையில் வீசி எறிந்தான். புகை வழியும் வாயோடு திரும்பிப் பார்த்த புருஷோத்தமனுக்கு ஓரிரு வினாடிகள் கழித்துத்தான் என்ன நடந்ததென்று புரிந்தது. உடனே அசோக்கைப் பார்த்து கிண்டலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

“ஹஹா.. காண்டந்தானடா..? ஏதோ கருந்தேளை கைல புடிச்ச மாதிரி கத்துற..?”

“ப்ச்.. எத்தனை தடவை சொல்லிருக்கேன் புருசு.. என் ட்ரெஸ் எடுத்து போடாதன்னு..?” அசோக் இப்போது சற்றே எரிச்சலாக சொன்னான்.

“விட்றா.. நேத்து நைட்டு ஏதோ அவசரத்துல.. உன் பேன்ட்னு தெரியாம போட்டுட்டு போயிட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..?”

“சரி.. போட்டதுதான் போட்டுட்டு போன.. இதெல்லாம் எதுக்கு என் பாக்கெட்டுல வைக்கிற..?”

“அவினாசி ரோட்டுல அம்சமா ஒரு ஐட்டம் இருக்குது.. வாடா மச்சி..’ன்னு.. நம்மாளு நேத்து கால் பண்ணுனான் அசோக்..!! நானும் ரொம்ப ஆர்வமா நாலு பாக்கெட்டு வாங்கிட்டு போனேன்.. போய்ப்பாத்தா.. அது சரியான சப்பை பீஸ்..!! வாங்குனதுல ரெண்டு பாக்கெட் எச்சா போயிடுச்சு..!!”

“எச்சா போனா என்ன..? அந்த அசிங்கத்தை அங்கேயே விட்டெறிஞ்சுட்டு வர்றதுதான..?”

“என்னது.. அசிங்கமா..? இன்னைக்கு நம்ம நாடு இருக்குற நெலமைக்கு ஒவ்வொருத்தனுக்கும் இதுதாண்டா ரொம்ப ரொம்ப அவசியம்..!! அவன் அவன் இதை மாட்டிக்கிறதுக்கு நமக்கு ஒரு சான்ஸ் கெடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்கானுக.. அசிங்கமாம்ல அசிங்கம்..??”

கிண்டலாக சொன்ன புருஷோத்தமன் எழுந்து வந்து, கீழே கிடந்த இரண்டையும் பொறுக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மீண்டும் சென்று சேரில் அமர்ந்து கொண்டு பிட் கிழிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த அசோக், சற்றே அருவருப்புடன் கேட்டான்.

“ஏண்டா எப்போ பார்த்தாலும் அதை பாக்கெட்லயே வச்சுட்டு சுத்துற..?”

“ஆப்பர்ச்சூனிட்டி எப்போ வேணாலும் வரும் மச்சி.. நாமதான் அதை கபால்னு புடிச்சுக்க ரெடியா இருக்கணும்.. என்ன.. புரியுதா..?”

“கருமம்..” அசோக் வாய்க்குள் முனக,

“என்னது..??” என்றான் புருஷோத்தமன் சத்தமாக.

“ஒண்ணுல்ல..”

சலிப்பாக சொன்ன அசோக் அந்த பேன்ட்டை அவிழ்த்து வீசி விட்டு, வேறு பேன்ட் எடுத்து அணிந்து கொண்டான். டக்-இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டான். திருநீறு பூசிக்கொண்டான். கிளம்புவதற்கு முன் ஒரு முறை கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தான்.

அப்பழுக்கற்ற அழகான வட்ட முகம் அசோக்கிற்கு. எப்போதுமே மீசை, தாடியை சுத்தமாக மழித்து மழுமழுவென்று வைத்திருப்பான். நடுவகிடு எடுத்து படிய வாரியிருந்த தலையில், சற்று எக்ஸ்ட்ராவாகவே எண்ணெய் மினுக்கும். கண்ணுக்கு கொடுத்திருந்த கண்ணாடியும், நெற்றியில் விபூதி கீற்றும், கழுத்தை சுற்றி நெருக்கமாக இருந்த ருத்ராட்சையும் அவன் ஒரு பழம் என்பதை பார்ப்பவர்களுக்கு பறை சாற்றும். உருண்டையாகவும், கூர்மையாகவும் மூக்கு.. ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த அதரங்கள்.. அமுல் பேபியைப்போல புசுபுசுவென கன்னங்கள்..!! அவனை நீங்கள் பார்த்தால்.. ‘பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவன்’ என்று புருஷோத்தமன் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றும்..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments