நெஞ்சோடு கலந்திடு – பகுதி 16

ஹாலில் அண்ணனும், தங்கையும் அமர்ந்து டிவியில் ‘கனா காணும் காலங்கள்’ பார்த்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திக்குடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த திவ்யா, அண்ணியை கண்டதும், பார்வையை தொலைக்காட்சியின் பக்கம் திருப்பிக் கொண்டாள். சித்ராவும் அவளை கண்டுகொள்ளாமல், கணவனிடம் கேட்டாள்.

“முந்திரி பருப்பும் வறுத்து வச்சுட்டேங்க..”

“ஓகே.. வெரி குட்..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“சும்மா அப்படியே சாப்ட்டுக்குறீங்களா..? இல்ல.. உப்பு, மொளகாத்தூள் போட்டு வைக்கவா..?”

“நோநோ.. அதெல்லாம் வேணாம்.. அப்புறம் போற வழில வயிறு புடுங்கிக்கப் போவுது..!! ப்ளெயின் முந்திரி பருப்பு மட்டும் போதும்..!!”

“ம்ம்.. சரிங்க..”

சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நுழைய முற்பட்டபோதுதான் அசோக் வீட்டுக்குள் நுழைந்தான். ஆபீசில் இருந்து இப்போதுதான் திரும்புகிறான். தம்பி வந்ததும் அக்கா அங்கேயே நின்றுகொண்டாள். அசோக் திவ்யாவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான். வந்ததுமே சென்னை ட்ராபிக் பற்றி புலம்ப ஆரம்பித்தவனிடம், பேச்சை மாற்றும் விதமாக கார்த்திக் கேட்டான்.

“அப்புறம் அசோக்.. உன் லீவ் அப்ரூவ் ஆயிடுச்சா.. நீ என்னைக்கு ஊருக்கு வர்ற..?”

“ப்ச்.. இல்லைத்தான்.. லீவ் அப்ரூவ் ஆகலை..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“அச்சச்சோ.. அப்போ திருவிழாவுக்கு நீ வரலையா..?”

“ம்ஹூம்..!! ஃபர்ஸ்ட் டைம்.. நம்ம ஊர் திருவிழாவை மிஸ் பண்ண போறேன்..!!”

“ப்ச்.. என்ன அசோக்.. இப்படி சொல்ற..? திருவிழா நேரத்துல நீ இருந்தாத்தான் வீடே களை கட்டும்..!!”

“என்னத்தான் பண்றது..? ப்ராஜக்ட் ரிலீஸ் டைமாகிப் போச்சு..!! நெறைய வேலை.. அதில்லாம.. எங்க டீம்லேயே.. நான்தான் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ்..!!”

அசோக் கேஷுவலாக அதே நேரம் பெருமையாக சொல்ல, திவ்யா ‘ம்க்கும்.. சரியான பெருமை பீத்த களைய பய..’ என்று முனுமுனுத்தவாறு, முகத்தை வேறு அஷ்ட கோணலாக்கியபடி வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

“கண்டிப்பா போயே ஆகணும்னு சொன்னேன் அத்தான்.. ஆனா.. மேனேஜர் என் கால்ல விழாத குறையா கெஞ்சுனாரு.. எனக்கும் பாவமா போச்சு.. ‘சரி போ போ.. போகலை’ன்னு சொல்லிட்டேன்..!!” அசோக் சோகமாக சொல்லி முடிக்க, கார்த்திக் இப்போது சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

“ச்சே.. இப்படி ஆயிடுச்சே.. எல்லாரும் இருக்குறப்போ நீ மட்டும் இல்லைன்னா.. அது அவ்வளவு நல்லா இருக்காதே..!! அட்லீஸ்ட் புதன்கிழமை கெடா வெட்டுக்காவது வந்து.. கறி சோறு சாப்பிட்டு போகலாம்ல அசோக்..?”

கார்த்திக் சீரியசாக சொல்ல, அசோக் இப்போது அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். ‘ங்கொய்யால.. அப்போவாச்சும் புதன்கிழமை திருவிழாவுக்கு வந்து சாமி கும்பிட்டு போகலாம்லன்னு சொல்றானா பாரு..? திங்கிறதுலயே இருக்கான்யா.. ச்சே..!!’ என்று மனதுக்குள் காறி துப்பினான். அப்புறம் அக்கா புருஷனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்று அசோக்கிற்கு தோன்றியது. குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே எள்ளல் தொனிக்க கேட்டான்.

“கெடா வெட்டு செவ்வாக்கிழமைலத்தான்..? புதன்கிழமைன்னு சொல்றீங்க..?”

அசோக் கேட்க, கார்த்திக் இப்போது ‘கெக்கேபிக்கே’வென சிரிக்க ஆரம்பித்தான். தன் பானை வயிறு குலுங்க சிரித்தவன், அப்புறம் அந்த சிரிப்பை அடக்க முடியாமலே சொன்னான்.

“ஹ்ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹ்ஹா.. எந்த உலகத்துல இருக்குற நீ..? இத்தனை வருஷம் திருவிழா பார்த்திருக்குற.. என்னைக்கு கெடா வெட்டுன்னு கூட உனக்கு தெரியலையா..? புதன்கிழமைதான்பா கெடா வெட்டு..!!”

“இல்லைத்தான்..”

“அட ஆமாம்பா.. எனக்கு நல்லா தெரியும்..!!”

“அப்போ செவ்வாய்க்கிழமை..?”

“அன்னைக்கு பொங்கல் வைப்பாங்க..!! சக்கரை பொங்கலும், வெண்பொங்கலும்.. சாமிக்கு உடைச்ச தேங்கா சில்லை எடுத்து.. வாழைப்பழத்தையும் கடிச்சுக்கிட்டே சாப்பிடுவோமே.. மறந்து போச்சா..?”

“அப்போ.. அந்த அதிரசம், முறுக்குலாம் என்னைக்கு..?”

“ப்ச்.. அதுதான் திங்கக்கெழமை நைட்டே சுட்ருவாங்களே அசோக்..? ரெண்டு சட்டி.. ஒரு சட்டில அதிரசம்.. ஒரு சட்டில முறுக்கு..!!”

கார்த்திக் ஆர்வமாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் இப்போது கருவிழிகளை சுழற்றி ஓரக்கண்ணால் தன் அக்காவை பார்த்தான். அவளோ தம்பியின் கேள்விகளுக்கு ‘படார்.. படார்..’ என பதிலளித்துக் கொண்டிருந்த தன் கணவனையே பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்..!! அசோக் இப்போது லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான்.

“கலக்குறீங்கத்தான்.. எல்லாம் என்னைக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!! ம்ம்ம்ம்.. குட் குட்.. அப்படியே இன்னொன்னும் என்னைக்குன்னு சொல்லிருங்களேன்..?”

“எது..?”

“அக்காவோட பர்த்டே..!!”

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் பிரகாசமாக இருந்த கார்த்திக்கின் முகம், இப்போது இன்ஸ்டன்ட்டாய் இஞ்சி தின்ற குரங்குடையது மாதிரி மாறிப்போனது..!! அவ்வளவு நேரம் ஈசியான கொஸ்டின்ஸ் வர வர, ‘பட் பட்’ என ஆன்சர் செய்தவன், இப்போது டஃப் கொஸ்டின் வந்ததும் திணறினான்.. திருதிருவென விழித்தான்..!! தெரியாத ஆன்சரை கெஸ் செய்ய முயன்றான்..!!

“பி..பிப்ரவரி 24-த்..?”

“ப்ச்.. அது நம்ம சீஃப் மினிஸ்டர் பர்த்டே.. நான் கேட்டது சித்ரா அக்காவோட பர்த்டே..!!”

“இல்ல அசோக்..பிப்ரவரி 24-தான்..!! அதானடி..?”

என்றவாறு கார்த்திக் திரும்பி சித்ராவை பார்க்க, அவளுடைய முகம் அகோரமாய் மாறி நெடுநேரமாகியிருந்தது. தன் முட்டைக் கண்களை உருட்டி, எரித்து விடுவது போல அவள் கணவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக்கிற்கு தன் அக்காவை பார்க்க, அவர்கள் ஊர் ஆதி பரமேஸ்வரி ஞாபகத்துக்கு வந்தாள். கார்த்திக்கோ அர்த்த ஜாமத்து ஆவியைப் பார்த்தவன் போல குலைநடுங்கிப் போனான்.

“எ..என்னாச்சுடி.. ஏ..ஏண்டி அப்படி பாக்குற..? அப்போ.. பிப்ரவரி 24 இல்லையா..?”

சித்ரா ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றாள். கையில் வைத்திருந்த கரண்டியாலேயே கணவனின் உச்சந்தலையில் ‘டங்..!!!’ என்று ஒரு போடு போட்டாள். கோபத்துடனே படக்கென்று திரும்பி, அவசரமாய் உள்ளே நடந்தாள்.

“அடப்பாவி.. இப்படி எக்கச்சக்கமா என்னை மாட்டி விட்டுட்டியே.. நீ நல்லாருப்பியா..? உனக்கும் ஒரு அடங்காப்பிடாரிதான் பொண்டாட்டியா வரப்போறா.. அவகிட்ட நீ நல்லா அடிவாங்கப் போற.. இது என் சாபம்..!!”

என்று அசோக்கை கரித்துக் கொட்டிய கார்த்திக், எழுந்து தன் மனைவியின் பின்னால் ஓடினான். அவளை சமாதானம் செய்யும் குரலிலேயே..

“சித்தூ.. சித்தூம்மா.. பிப்ரவரி 24- தானடி..? போத்திஸ்ல போய் உனக்கு பொடவைலாம் வாங்கித்தந்தேனேடி..? அன்னைக்குத்தான..? சித்தூ.. சித்தூம்மா..!!”

என்று பரிதாபமாக கூவிக்கொண்டே சென்றான். இங்கே அசோக்கும், திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா இருந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு சிரித்த திவ்யா, அவள் சென்றபின் தாராளமாக சிரித்தாள்.

“ஹ்ஹாஹ்ஹா… ஹ்ஹாஹ்ஹா… ஐயோ.. அசோக்.. முடியலைடா.. பாவம்டா..!!”

“ஹ்ஹாஹ்ஹா.. சரியான காமடி பீஸ்டி உன் அண்ணன்..!! பொங்கச்சோறு என்னைக்கு ஆக்குவாங்கன்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.. பொண்டாட்டி என்னைக்கு பொறந்தான்னு கேட்டா திருதிருன்னு முழிக்கிறான்..!!”

“ஐயோ நான் அவனை சொல்லலைடா.. நான் பாவம்னு சொன்னது உன் அக்காவை..!! ஹ்ஹாஹ்ஹா… ஹ்ஹாஹ்ஹா…!!” திவ்யா இன்னும் வாயெல்லாம் சிரிப்பாக சொல்ல, அசோக்குடைய சிரிப்பு இப்போது பட்டென்று நின்றது.

“என்னடி சொல்ற..?” என்றான் சற்றே இறுக்கமான குரலில்.

“ஆமாம்.. அவ மூஞ்சி போன போக்கை பார்த்தியா அசோக்..?? ஹ்ஹாஹ்ஹா… ஹ்ஹாஹ்ஹா… வெளக்கெண்ணை குடிச்ச தேவாங்கு மாதிரி..!! ஹ்ஹாஹ்ஹா… ஹ்ஹாஹ்ஹா…!!”

“ஏய்.. ஏஏஏஏய்ய்ய்.. நிறுத்து… நிறுத்துடி..!!” அசோக் சற்றே கடுப்பாக சொன்னான்.

“ஏன்..??” திவ்யா பட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்டாள்.

“ஏனா..?? உங்க ரெண்டு பேரையும் திருத்தவே முடியாதுடி..!!”

“நான் ஒரு ஆளுதான..? அது யாரு இன்னொருத்தரு..?”

“ம்ம்ம்..? என் அக்கா..!!” அசோக் சொல்ல, இப்போது திவ்யா கடுப்பானாள்.

“ப்ச்.. இங்க பாரு.. திட்டுறதா இருந்தா என்னை மட்டும் தனியா திட்டு.. அவ கூட சேர்த்து வச்சு திட்டாத..!! எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமாம்..!!”

“ஐயோ.. ராமா ராமா..!!”

அசோக் தலையை பிடித்துக் கொண்டான். ‘திட்டு வாங்குவது கூட அவளுடன் சேர்ந்து வாங்க மாட்டேன்.. தனியாகத்தான் வாங்குவேன்..’ என்கிறாளே என்று நொந்து போனான். அப்புறம் சில வினாடிகள் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். சில விநாடிகளிலேயே சூழ்நிலையின் இறுக்கம் சற்று தளர்ந்தது. இருவரும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டார்கள். திவ்யாதான் மெல்லிய குரலில் சொன்னாள்.

“ம்ம்ம்ம்… போடா.. நீ இல்லாம.. எனக்குத்தான் திருவிழா ரொம்ப போரடிக்க போகுது..”

“ம்ம்ம்.. அதுலாம் ஒண்ணுல்ல..!! ஆமாம்.. காலைல எத்தனை மணிக்கு பஸ்..?”

“எட்டரைக்கு..!! ஆனா.. நான் நைட்டுதான் போறேன்..!!”

“நைட்டா..? ஏன்..??”

“நாளைக்கு மேட்ச் இருக்கு அசோக்.. இன்டர் காலேஜ் டோர்ணமன்ட்.. ஃபைனல்..!! போன வருஷம் கப் மிஸ் பண்ணிட்டோம்.. இந்த தடவை விட கூடாது..!!”

“ஓ..!! சொல்லிட்டு இருந்தேல..? மறந்துட்டேன்..!! ஆமா.. அந்த மேட்ச்சுக்காக நீ தனியா நைட்-ட்ராவல் பண்ண போறியா..? பேசாம மேட்ச் கேன்சல் பண்ணிட்டு.. நீயும் காலைலயே இவங்க கூட போயிடேன் திவ்யா..??”

“இல்ல அசோக்.. நாளைக்கு நான் கண்டிப்பா விளையாடியே ஆகணும்.. நாளைக்கு மேட்ச் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..!!” சொல்லும்போதே திவ்யாவின் குரலில் ஒருவித சோகம் தொணித்ததை அசோக்கால் உணர முடிந்தது.

“அ..அப்படி என்ன ஸ்பெஷல்..?”

“நாளைக்கு மேட்ச்தான்.. நான் விளையாடப் போற கடைசி மேட்ச்..!!” திவ்யா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

“எ..என்ன சொல்ற திவ்யா..? கடைசி மேட்சா..? ஏன்..?”

“திவாகருக்கு நான் ஸ்போர்ட்ஸ்ல இருக்குறது பிடிக்கலை அசோக்.. ‘அதெல்லாம் எதுக்கு.. விட்டுடேன்..?’னு சொன்னாரு..!! நான்தான் ‘இந்த டோர்ணமன்ட் முடியட்டும்.. எல்லாம் ஸ்டாப் பண்ணிர்றேன் ..’னு சொல்லி வச்சிருக்கேன்..!!” திவ்யா சொல்ல சொல்ல, அசோக் கடும் எரிச்சலுக்கு உள்ளானான்.

“ஓ..!! அப்போ.. இதுக்கப்புறம் நீ விளையாட போறது இல்லையா..?”

“ம்ஹூம்..!! பாலை கைல கூட தொட்டு பார்க்க மாட்டேன்..!!”

“இதெல்லாம் என் மனசுக்கு சரியா படலை திவ்யா..!!”

“எது..?”

“அவருக்காக நீ உன் திறமையை குழி தோண்டி புதைக்கிறது..!! காதல்ன்றது காதலிக்கிறவங்களோட நிலைமையை மேல உயர்த்துறதா இருக்கணும்.. இப்படி கீழ புடிச்சு தள்ளி விடுறதா இருக்க கூடாது..!!”

“ச்சே..!! என்ன பேசுற நீ..? நான் அப்டிலாம் நினைக்கலை..!! எனக்கு புடிச்ச மாதிரி அவர் நடந்துக்குறதும்.. அவருக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்குறதும்.. அதுதான காதல்..? விட்டுக் கொடுக்குறதுதான லவ்வோட பேசிக்ஸ்..?? அதைத்தான் நான் செய்றேன்..!!” திவ்யா அழுத்தமாய் எதிர் வாதம் செய்ய, அசோக் சலிப்பாய் ஒரு பெருமூச்சு விட்டான்.

“சரி விடு.. நான் ஆர்க்யூ பண்ண விரும்பலை..!! ம்ஹ்ஹ்ம்.. இன்னும் அவரை நீ லவ் பண்றேன்னே சொல்லலை.. அதுக்குள்ளே அவருக்கு புடிச்ச மாதிரி உன்னை மாத்த ஆரம்பிச்சுட்டாரா..?”

“அப்டிலாம் இல்ல அசோக்.. அவரும்தான் எனக்காக அவரை மாத்திட்டு இருக்காரு..?”

“ஓ..!! என்ன பண்ணினார்..?”

“எனக்கு யெல்லோ பிடிக்காதுன்னு சொன்னேனா..? இனி யெல்லோ கலர்ல ட்ரெஸ் போட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்காரு..!!” திவ்யா சொல்ல, அசோக் எரிச்சலானான்.

“சுத்தம்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எனிவே.. ஆல் தி பெஸ்ட்..!! நான் சொன்னது நாளைக்கு மேட்சுக்கு..!!” சொல்லிவிட்டு அவன் எழ முயல,

“அசோக்..” திவ்யா அவனை அழைத்தாள்.

“ம்ம்..”

“நாளைக்கு எங்க காலேஜுக்கு மேட்ச் பார்க்க வர்றியா..? நாளைக்கு சாட்டர்டே.. உனக்கு லீவ்தான..?”

“இல்ல திவ்யா.. நான் ஆபீஸ் போகணும்..!! வேலை இருக்கு.. வர முடியாதுன்னு நெனைக்கிறேன்..!!”

“ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ஈவினிங்.. கொஞ்ச நேரம் மட்டும்..!! எனக்காக.. ப்ளீஸ்..!! நீ வந்தா.. கேலரில உக்காந்து நீ பாக்குறேன்னு தெரிஞ்சா.. நான் நல்லா விளையாடுவேன்..!! என்னோட லாஸ்ட் மேட்ச்.. நான் நல்லா விளையாடனும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. எனக்காக.. !!”

திவ்யா குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் உற்ற தோழியையே.. உயிரில் கலந்த காதலியையே.. அன்பும், ஆசையுமாய் பார்த்தான். இதமான குரலில் சொன்னான்..!!

“ம்ம்ம்ம்… நான் மேட்ச் பார்க்க வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்டா..!! போதுமா..??” என்றவாறே திவ்யாவின் முன் நெற்றியில் வந்து விழுந்திருந்த கொத்து மயிர்களை, அழகாக பின்னுக்கு ஒதுக்கி விட்டான்.

“தேங்க்ஸ் அசோக்..!!” திவ்யா உற்சாகமாக துள்ளி குதித்தாள்.

“சரி வா.. இப்போ நம்ம வீட்டு மேட்ச்சை போய் வேடிக்கை பார்க்கலாம்..!!”

“நம்ம வீட்டு மேட்ச்சா..?”

“ம்ம்.. பாக்ஸிங்..!! என் அக்காவுக்கும், உன் அண்ணனுக்கும்..!!” சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட,

“ஹஹாஹாஹஹா..!!!” திவ்யா கலகலவென சிரித்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments