♥பருவத்திரு மலரே-14♥

அடுத்த ஆறுமாதத்தில்.. மறுபடி காதலிக்கத் தொடங்கினாள் பாக்யா.
பஸ் ஸ்டாப்புக்கும். . வீட்டுக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருந்தது.
பஸ் விட்டு இறங்கி காட்டு வழியில்தான் நடந்து போகவேண்டும்.
அப்படி போனபோது… வழியில் குறுக்கிட்டான் வேலு

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அவர்கள் இருக்கும்.. அதே டெண்ட் வீடு ஒன்றில்தான் அவனும் இருந்தான். வேலையும் அதே காலவாயில்தான்.

வேலு கையில் ஒரு ரோஜா பூ இருந்தது.
அவன் இளிக்க…
” என்ன இது..?” எனக்கேட்டாள்.
”ரோஸ்..” என வழிந்தான் ”உனக்காக வாங்கிட்டு வந்தேன்”
”எனக்காகவா..?” திகைப்பும். . வியப்புமாக அவனைப் பார்த்தாள்.
வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான் வேலு. அவளைவிட.. இரண்டு வயதுதான் பெரியவனாக இருப்பான். மீசை துளிர்விடும் முகம். பாக்குப்போட்டு… காவி படிந்த பற்கள்.
” ம்..ம்.. வெச்சுக்க…”
சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை.
” இதுக்கு என்ன அர்த்தம்..?” எனக்கேட்டாள்.
”உ…உன்ன. . எனக்கு. . புடிச்சிருக்கு..”
பூவை வாங்கவில்லை.
”ஐய….மூஞ்சியப்பாரு..” என்றுவிட்டு விலகி நடந்தாள்.
ஆனாலும். . மனசு படபடத்தது.

வீட்டிற்குப் போனதும்… முத்துவைப் பார்க்கப் போனாள் பாக்யா. அதே டெண்ட் வீட்டில் நான்காவது வீடு முத்துவுடையது.!

{ துரதிருஷ்டவசமாக… இவ்வுலகை விட்டு… விலகிவிட்ட.. முத்துவுக்கு… இக்கதை சமர்ப்பிக்கப் படுகிறது…!!! }

முத்துதான்… பாக்யாவின் இப்போதைய நெருங்கிய தோழி. முத்துவுக்கும்.. அவள் வயதுதான். ஆனால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு… மிகவும் மெலிந்து.. எழும்பும் தோலுமாக இருந்தாள். முன்பற்கள் இரண்டும் துருத்திக்கொண்டிருந்தன.
படிப்பு வாசணை என்பது சுத்தமாகவே இல்லை.

முத்துவைத் தனியாகக் கூட்டிவந்து சொன்னாள் பாக்யா.
” வேலு எனக்கு பூ தந்தான்.”
” பூவா..? என்ன பூ…?”
” ரோஜா…பூ…”
” எதுக்கு. ..?”
” வெச்சிக்கத்தான்…”
”லவ் பண்றானா…?”
” உம்…”

” நீ என்ன சொன்ன. ..?”
” உனக்கு வேனுமா…?”
” எனக்கா…?”
” நீ வேனா வாங்கி வெச்சுக்க..”
” எனக்கெதுக்கு… அப்ப நீ வாங்கலியா…?”
” ம்கூம். ..”
”ஏன். .?”
” பூவ.. அவனையே வெச்சிக்க சொல்லிட்டேன்.. அவனும்.. அவன் மூஞ்சியும்..” என்றாள்.
” ஏன்… அவனுக்கென்ன. ..?”
” நல்லாவே இல்ல. . ரொம்ப வழிவான் எப்ப பாத்தாலும். .” என பாக்யா சொல்ல… முத்துவின் முகம் ஒளியிழந்தது.

வேலுவின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான் கதிர். அவனை அழைத்து வரப்போனாள் பாக்யா.
அவர்கள் இருவரும் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்தாள்.
” உக்காருங்க மேடம். .” எனச் சிரித்தான் வேலு.
அவனுக்கு பதில் சொல்லாமல் கதிரைப் பார்த்து..
” வாடா… உன்ன அம்மா கூப்பிடுது..” என்றாள்.
”எதுக்கு. .?” எனக்கேட்டான் கதிர்.
” மூடிட்டு வாடா…”
” போ… உனக்கு வேற வேலை இல்ல. .”
அவன் தலைமேல் தட்டினாள் ”வாடா…நாயி…”
இடைஞ்சலால் கோபமாகிவிட்ட கதிர் ”போடி பேயீ…” என்றான்.
வேலுவின் முன் அவமானமாகத் தோண்றியது.
‘ படீர் ‘ என அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.
” ஆ..” நெளிந்தான் கதிர்.
வேலு ”இப்படியா…அடிப்ப..?” எனக்கேட்டான்.
”என் தம்பி. .. அவன எப்படி வேனா அடிப்பேன்..” என்றாள்.
வன்மம் கொண்டான் கதிர். சடாரென எழுந்து.. அதே வேகத்தில் அவள் தொடைப்பகுதியில்… ‘ நச் ‘ சென ஒரு உதை விட்டான்.
பலமான உதை..!
இதை எதிர்பாராதா பாக்யா… வலியால் துவண்டு போனாள். வலி பொறுக்க முடியாமல்.. மடங்கிக் கீழே உட்கார்ந்தாள்.
உதைத்ததும் கதிர் வெளியே ஓடிவிட்டான்.

பரிதாபம் பொங்க… ஆனால் சிரித்தவாறு அவளைப் பார்த்தான் வேலு.
”ரொம்ப வலிக்குதா..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.
நெருங்கி வந்தான் ”நல்லா ஒதச்சுட்டானா..?”
” எல்லாம் உன்னாலதான். .” என எரிச்சலோடு சொன்னாள்.
”நானா ஒதச்சேன்…?”
”நீ ஒதச்சிருந்தீன்னா உன் கால ஒடச்சிருப்பேன்..”
சிரித்தான் ” அப்றம் நீதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்..”
”ஆ.. கல்யாணம் பண்ணிட்டு.. உன்ன வெச்சு. . பிச்சையெடுக்கறதா..?”
” உனக்காக உசிரையே தருவேன்… இந்த காலா பெருசு?”
” மசுர குடு..” என்றாள்.”நெனப்ப பாரு. .”
”சே… உசிரவிட.. மசுரு பெருசில்ல தெரியுமா..? உனக்கு அதான் வேனும்னா..” மயிரைப் புடுங்கி..” இந்தா வெச்சுக்கோ..” என நீட்டினான்.
”அட…தூ.. போடா.. மயிரா..” என்றாள்.
”நீ என்ன வேனா திட்டிக்கோ.. நான் கோபப்படவே மாட்டேன். ஆனா நா உன்ன லவ் பண்றேன்றது உன் தம்பிக்குக்கூட தெரியும். .” என்றான் வேலு.
” ஆ…! அவன் பெரிய புடுங்கி..” என எழ முயன்றாள்.
முடியவில்லை.
வலியால் துவண்டு..
”தூக்கிவிடேன்டா…” எனக் கை நீட்டினாள்.
அவள் கையைப் பிடித்தான். ”காலம்பூரா.. இந்தக் கையை விடவே மாட்டேன்..”
”சீ.. இது அந்தக் கை இல்ல…”
”தெரியும்.. வாழ்க்கை…”
”விட்றா… மூடிட்டு. ..” எனக்கையைப் பிடுங்கிக் கொண்டாள்.
சுவற்றைப் பிடித்து.. ‘ தம் ‘ கட்டி எழுந்து. . மெல்ல.. மெல்ல.. நடந்து வீடு போனாள்.
தன் அம்மாவிடம் சொன்னாள்.
” அந்த நாயி… என்னை எட்டி ஒதச்சிட்டான்மா..”
”ஏன். .?”
” கூப்ட்டேன்.. வல்லேன்னான். தலைல தட்னேன்.. அதுக்கு எந்திரிச்சு.. தொடைலயே எட்டி ஒதச்சிட்டான்.. பையனா அவன். .?” என அழுதாள்.
”எங்க ஒதச்சான்..?” அம்மா கேட்டாள்.
இடம் காட்டினாள். அவனைக் கண்டபடி திட்டினாள்.
தடவி விட்ட அம்மா. .
” வரட்டும் அவன். .. கால்ல சூடு போடறேன்..” என்றாள்.

அதன்பிறகு… வேலுவுடன் நன்றாகவே பேசிப்பழகினாள் பாக்யா. அவனது காதலைத் தூண்டும்விதமாகவே நடந்து கொண்டாள்.
மறுமுறை அவன் பூ கொடுத்தபோது அதை மறுக்காமல்.. வாங்கிக் கொண்டாள்.
” ஆனா லவ்வெல்லாம் பண்ண மாட்டேன்..” என்றாள்.

மாலை நேரத்தில். . அவளது தம்பியோடு சேர்ந்து.. அவளே வேலு வீட்டிற்குப் போய்விடுவாள்.
கேரம்போர்டு விளையாடுவார்கள். மற்ற நேரத்தில். . அவன் கதிரோடு சேர்ந்து..அவள் இருக்குமிடம் வந்து விடுவான்.

அன்று…
வேலு வீட்டில் போய் கேரம்போர்டு விளையாடினாள் பாக்யா.
முதலாவதாகத் தோற்றுவிட்ட கதிர் எழுந்து வெளியே போய்விட்டான். நீண்ட நேரமாகியும் காணவில்லை.
ஆட்டம் இறுதிக்கு வந்தது.

”ஜெயிச்சா என்ன தருவ..?” எனக் கேட்டான் வேலு.
” ம்… செருப்படி…” சிரித்தாள்.
” நீ ஜெயிச்சா.. நீ என்ன கேட்டாலும் தரேன்..”
” நீ ஜெயிச்சா. .?”
” நா கேக்கறது நீ தரனும்…”
”மொத ஜெயி… அப்றம் பாப்பம்”
” நீ ஜெயிச்சா என்ன கேப்ப..?”
” என்ன வேனா கேப்பேன்..”
” வேண்டாம். . நீ என்ன கேப்பேனு தெரியும். .”
” நீயும் என்ன வேனா கேக்கலாம்..”
” வேண்டாம் போ..” என எழுந்தாள்.
அவனும் எழுந்தான் ”தோத்துருவேனு பயம் உனக்கு. .” எனக் கிண்டலாகச் சிரித்தான்.
”போடா.. எனக்கென்ன பயம்..?”

சட்டென அவள் கை பிடித்தான் ”அப்ப உக்காரு மோதிப்பாக்கலாம்..”
” ஆ.. சீ.. கைய விடு..”
ஆனால் அவன் விடவில்லை.
”ஓடாத வா..”
” விடறா.. நாயி…”
”நா நாயா…?” என அவள் தோளில் குத்தினான்.
”என்னைவே அடிக்கறியா..?” என அவனை அடித்தாள்.
” நீ என்ன பெரிய இவளா..?” மறுபடி அவன் அடித்தான்.
பதிலுக்கு அவள் அடிக்க… மறுபடி அவன் அடிக்க…
அவள் அடித்தாள்… கிள்ளினாள்.
அவனும் கிள்ளினான்.
விளையாட்டு சண்டை முற்ற.. சட்டென தாவி.. கப்பென அவளைக் கட்டிப்பிடித்தான்.
விலகித் திமிறிப் போனாள்.
ஆனாலும் அவள் மார்பைப் பிடித்து ஒரு அழுத்து. . அழுத்திவிட்டான்.
”சீ… பரதேசி. .நாயி. .” எனத் திட்டினாள்.
அவன் மறுபடி நெருங்க…
வெளியே ஓடிவிட்டாள்.

மறுநாள். . தனியாக இருந்த போது… வேலுவிடம் சொன்னாள் பாக்யா.
”லவ் பண்ணா வெறும் லவ் மட்டும் தான் பண்ணனும். . இப்படி அலையக்கூடாது..”
”சத்தியமா நா உன்ன லவ்தான் பண்றேன்..” என்றான்.
”அப்பறம் ஏன் நேத்து அப்படி பண்ண. .?”
” அ… அ..து.. வந்து. . ஒரு. . இதுல…”
”இனிமே என்னை தொட்ட. .கைய முறிச்சிருவேன்..!”
” தொடாம… எப்படி லவ் பண்றது..?”
” ஆமா இல்ல..? தொடாம லவ்வே பண்ணமுடியாது.. ? சரி அப்ப லவ்வே பண்ண வேண்டாம்.. என்னை மறந்துரு”
” ஐயோ. . என்ன பாக்யா.. உன்ன மறந்துட்டு நா எப்படி உயிரோட இருப்பேன்..?”
” அட..அட.. ! சும்மா அளக்காதடா..”
”அளக்கலே.. உன்மேல சத்தியமா. ..”
” நாயி… அத ஏன்டா என்மேல பண்ற..? உன்மேல பண்றதுதானே..?”
” நீதானே.. என் உயிர். . வாழ்க்கை எல்லாம். .”
” ஆ..! நெஞ்ச நக்கறடா..? இனிமே தொட்ட.. கைய முறிச்சிருவேன்.! என்னை தொடாம லவ் பண்ணபாரு. .”
” ம்… ம்…”
” அது..” என்றாள் பாக்யா.

அப்பறம்.. ஒரு நாள். …
முத்து கேட்டாள்.
”வேலுவ லவ் பண்றியா..?”
”ஐய.. நா இல்லப்பா..” என்றாள் பாக்யா.
” அப்றம் அவன்கூட பேசற.. பழகற…?”
” அது.. சும்மாதான். .”
” என்னமோ…?”
” நம்பலேன்னா போ…”
” காளீஸ் அக்காகூட கேட்டுச்சு.”
” என்ன கேட்டுச்சு..?”
” நீயும் அவன லவ் பண்றியானு..?”
”அந்தக்காக்கு எப்படி தெரியும்.?”
”அவன்தான் சொல்லிருக்கான்”
” ஓ.. அந்தக்கா என்ன சொல்லுச்சு.. உங்கிட்ட..?”
”லட்டு மாதிரி இருக்கற உனக்கு. . வேலு மேட்சாவே இல்லனு சொல்லுச்சு. .” என்றாள் முத்து.
” நெஜமாவே.. அவன எனக்கு புடிக்கவே இல்ல.. ஏதோ டைம்பாஸ்க்கு. . இருக்கட்டுமானுதான்.. அவன்கூட பழகிட்டிருக்கேன்” என்றாள் பாக்யா.

– வரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments