♥ உள்ளத்தின்.. கதவுகள் 16 ♥

திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா.. வேறு விதமானவள்.
அவளுக்கு அமைதியாக்ப் பேசவோ… அடக்கமாகச் சிரிக்கவோ.. தெரியாது.
படபடப்பாகத்தான் பேசுவாள். எந்தக்காரியமானாலும் அதை உடனே செய்தாக வேண்டும். அதேபோல அவரவர் காரியங்களை அவரவரேதான் செய்ய வேண்டும் என்கிற கொள்கைவாதி. முணுக்கென்றால் கோபம் வந்து விடும். யாருடனும் சண்டைக்குப் போகத்தயங்க மாட்டாள். பெண்மைக்குண்டான மெண்மை குணங்கள் அவளிடம் அறவே இருக்காது.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஆனால் நன்றாக ஓவியம் வரைவாள். பாட்டு.. நடனமென்றால் மிகவும் பிடிக்கும். பள்ளி. . கல்லூரியில் தவறாமல் போட்டிகளில் கலந்து கொள்வாள். நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.
” சரி.. என்னை பத்தின உன் அபிப்ராயம் என்ன. .?”
புன்னகைத்தான் நந்தா” நீ நெறைய மாறியிருக்கே..”
” எந்த வகைல..?”
” பேச்சு. ..நடைமுறை..பழக்கங்கள்..”
தலையணையை எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
” கல்யாணத்துக்கப்பறம்.. அப்படித்தான். .”
” ஆனா நல்லதுதான்..”

மறுபடி சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள்.
” என்மேல இன்னும் கோபமிருக்கா உனக்கு. .?”
”என்ன கோபம்..?”
”இத்தனை நாள்..அதாவது என் கல்யாணத்துக்கப்பறம் நம்ம பிரெண்ஷிப் விட்டுப்போனது ஏன். .?”
நந்தா சிரித்து ”அதெல்லாம் நாபகமிருக்கா உனக்கு. .?” எனக் கேட்டான்.
” ஏன்னா. . அறைஞ்சவ நானாச்சே..” எனச் சிரித்தாள்.
கன்னத்தைத் தடவிக் கொண்டு. ”ம்..ம்.. செம்ம அறைதான். ” என்க
” அப்பறம் நான் அதை நெனச்சு. பீல் பண்ணேன்..”
” ஐ’ம் ஸாரி. .! ஏதோ வயசுக்கோளாறுல… நானும் அப்படி…”
” உனக்கே தெரியுமே.. அப்ப எனக்கு வேகம் ஜாஸ்தி..! சட்னு கோபம் வந்துரும்.. அதான் உன்ன அறஞ்சிட்டேன்..!”
”இல்ல விழி…! தப்பு என்னோடதுதான். நம்ம பிரெண்ட்ஷிப் விட்டுப் போனதே என்னாலதான்.”
” ஓகே. .. ஓகே.. பட் ஒன் திங்க நந்தா நான் இப்ப பழைய மாதிரி இல்ல. .”
” ம்.. ம்.. கவனிச்சேன்..”
” என்ன கவனிச்சே..?”
” நீ.. முன்னவிட.. இப்ப இன்னும் அழகா இருக்க..! மறுபடி இன்னொரு தடவ அறை வாங்கினாலும் தப்பில்லேன்னு தோணுது…” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
” அடப் பாவி…! நா இப்ப இன்னொருத்தர் வொய்ப்டா..” என அவளும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” ஏய்… சும்மா. . ”
அருகே வந்து அவன் தோளில் அடித்தாள் ”அப்ப நா எதிரே பாக்கல… அப்படி நீ என்ன திடுதிப்புனு கட்டிப்புடிச்சி.. கிஸ்ஸடிப்பேனு..! அப்பறம் உனக்கொரு கேர்ள் பிரெண்டு இருக்கா இல்ல. .?”
”ம்..ம்…”
” அவ பேரென்ன…?”
” பூரணி..”
” எங்கருக்கா…?”
” பக்கத்து வீட்ல…”
”பக்கத்து வீடு. .. யூ..மீன்…?”
” ம்..”
”மை காட்..”
” ஏன் விழி…?”
” எப்பருந்து உன் லவ்..?”
உண்மையைச் சொல்லாமல் அவளைச் சீண்டிப் பார்க்க விரும்பினான்.
” இப்பதான். . கொஞ்ச நாளா..”
”நீயா.. அவள பண்ணியா..?”
” ஆமா. அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. .?”
அமைதியானாள் விழிநயா.
”ஏன் விழி..?” அவள் தோள் தொட்டுக் கேட்டான்.
” இ… இல்ல. . நல்ல பிகர்த்ன் அவ..! நல்லா ஜாலியா கலகலனு பேசுவா..! பழகுவா.. ஆனா. .”
” ஆனா என்ன விழி .?”
அவனை நேராகப் பார்த்தாள் ”அவள கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?”
” ம்.. தெரியல…”
”உன்னுது.. சின்சியர் லவ்வா.?”
” அப்கோர்ஸ்..! ஏன். .?”
” அவ உன்ன மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னாளா.?”
” இன்னும் அதுபத்தியெல்லாம் பேசல..! நீ சொல்ல வந்தத சொல்லு..”
சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
”கல்யாணத்துக்கப்பறம்.. நீ ரொம்ப பீல் பண்ணுவே..”

” என்ன பீல் பண்ணுவேன்.”
” எனக்கு தெரிஞ்சே அவளுக்கு நெறைய பாய்பிரெண்டஸ் இருக்காங்க..”
”நெறையன்னா.?”
”மெனிமோர் பாய்ஸ்…! நா பொய் சொல்லல..”
” ஓ..!” என அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான்.
” எதுக்கும் நீ… கேர் புல்லா இருந்துக்கோ..” என்றுவிட்டு ”சரி வா கீழ போலாம் ” என்றாள்.
அவனும் அவளுடன் சேர்ந்து கீழே போனான்.

அன்றைய இரவு..வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே படுக்கப் போனான் நந்தா. அப்போதே மிருதுளா துங்கத் தொடங்கியிருந்தாள்.
பூரணிக்கு போன் செய்து பார்த்தான்.
ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள்.
தூங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டு அவனும் படுத்தான். சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.
”டொக்… டொக்..” சன்னமாக அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.
”தாழ் போடலே..” என்றான்.
வழிநயா உள்ளே வந்தாள்.
” வா..! என்ன இங்க. .?” எழுந்து உட்கார்ந்தான்.
” சும்மா. .! என்மேல எதும் கோபமில்லையே..?”
”எதுக்கு. .?”
”பூரணி பத்தி சொன்னதுக்கு.?”
” சே… சே..”
” நியாயமா பாத்தா.. என்னை உன்னால நம்பத்தான் முடியாது. ! ஏன்னா உன் லவ்வரைப் பத்தி. . தப்பா சொன்னா அது என் தப்புதான்.”
” இல்ல. . அப்டிலாம் இல்ல. .”
” இல்லல்ல..?”
”நீ எதும் பீல் பண்ணிக்க வேண்டாம் விடு..! உக்காரு..”
” நா போறேன்..! ஆனா ஸாரி சொல்லத்தான் வந்தேன் .”
” பரவால்ல. .”
”உன் மனச நா… ஹர்ட் பண்ணிட்டேன்..”
” சே… சே.. அதெல்லாம் இல்ல”
”இல்ல. . நீ நெனைக்கலாம்.. இவளை லவ் பண்ணப்பதான் இவ ஏத்துக்கல.. இப்ப எவளையோ பண்ணதும் புடிககாம… நா ஏதோ பொறாமைல… பூரணி பத்தி தப்பா சொன்னதா…”
”சத்தியமா நா அப்படி எதும் நெனைக்கல விழி..”
” இப்பதான் எனக்கு நிம்மதி. . சரி நா போறேன்..?”
” ம்..!”
”குட் நைட்…”
” குட்நைட்..”
சிரித்துக்கொண்டே வெளியே போனாள் விழிநயா.!!

அடுத்த நாள். . ஊருக்குப் போய்விட்டாள் விழிநயா.

அன்று மாலை..!
மிருதுளா சமைத்துக் கொண்டிருந்த போது.. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது
எட்டிப் பார்த்தாள்.! அவளது கணவன்.. !
ஒரு கணம் சுர்ரென்று கோபம் வந்தது. கணவனை மதிக்காமல் தனது வேலையில் ஈடுபட்டாள்.
நந்தா அவளது கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்

டிபன் சாப்பிடும்போது… வேறுவழியில்லாமல் கணவனுக்கும் பறிமாற வேண்டிருந்தது. நந்தா முன்பு அவனை அவமதிக்க விரும்பவில்லை.
அவளது கணவன்.. நந்தாவுடன் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது.
அவளது கணவனின் இளம் மனனவி… ஊருக்குப் போய் விட்டாளாம். அவள் வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகுமாம்.. அதனால் இங்கு தங்கப்போகிறார்.!!

இரவு.!
”மிருது.. ” கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அவளைக் கூப்பிட்டான்.

தரையில்.. பாய்விரித்துப் படுத்திருந்த மிருதுளா பேசவில்லை.

”என்மேல இருக்கற கோபம் இன்னும் தீரலையா உனக்கு.?”

அதற்கும் அவள் பேசவில்லை. சிறிது நேரம் அமைதி.!

மறுபடி கணைத்துக் கொண்டு. .
” சந்தோசமாத்தான இருக்க..?” எனக் கேட்டான்.
”அடுத்தவங்கள நம்பி வாழாத வரைக்கும். . என் சந்தோசத்துக்கு எந்தக் கொறைச்சலும் வராது. ” வெடுக்கெனச் சொன்னாள்.
”ரொம்ப சரி.. ரொம்ப சரி..!” சிறிது மௌனம் ”உன் கோபம் நியாயமானதுதான்.. ஆனா. .”
” அந்தப் பேச்சு. . எதுக்கு இப்போ..?” கோபமானாள் ”மனுஷியை நிம்மதியா இருக்க விட்டா தேவலை.. உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்ரவம் இல்லாம இருக்கனும். .”

நீண்ட நேரம் அவள் மனசு நிம்மதியில்லாமல் தவித்தது.
‘ சே.. இந்த மனுசன் ஏன் வந்தான்.?’ என்று வெறுப்பாக இருந்தது. கணவன் மேல் ஆவேசம்.. ஆத்திரமெல்லாம் பொஙகிப் பொங்கி வந்தது. நடந்தவைகளை நினைத்து மனம் குமைந்தாள்.
கணவன் மேல் உண்டான வன்மம் அளவில்லாமல் பெருகி.. நெஞ்சு குமறியது.

” நீ நெனைக்கற மாதிரி. .. அவ ஒன்னும் கெட்டவ இல்ல தெரியுமா..? எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பாதான் பழகுவா..!” என திடிரெனப் பேசினார்.

மனசுள் எரிமலை குமறியது.!!

” உன்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா..? அடிக்கடி உன்னப் பத்தி விசாரிப்பா..”

அப்போதும் அவள் பேசவில்லை.

”ஒரு தடவ அவள .. கூட்டிட்டு வரட்டுமா..?”

” தூத்தெறி…” வெடித்தாள். ”வெககமால்ல இப்படி கேக்கறதுக்கு. .? அவ யாரு எனக்கு. .? கண்ட.. கண்ட சிறுக்கி காலெல்லாம் இந்த வீட்ல பட்டா செருப்பால அடிப்பேன்.!”
” என்னைவா… என்னைவா செருப்பால அடிப்ப..?”
” கண்டவன்லாம் வந்து படுத்துட்டு இப்படி அதிகாரம் பண்றதுக்கு இது ஒன்னும்.. தேவடியா மடம் இல்லை. .”

அதன் பிறகு அவள் கணவன் பேசவில்லை. !
ஆனால் மிருதுளா மனசு… புழுங்கித் தவித்தது…!!!

–தொடரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments