ஆண்மை தவறேல் – பகுதி 14

அசோக்கிற்கு நிச்சயமான நாளில் இருந்தே, நான்கு நாட்களாக நாயர் அவனை தொடர்பு கொள்ளவில்லை. பொறுத்து பார்த்த அசோக் ஐந்தாம் நாள் அவனே நாயருக்கு கால் செய்து பேசினான். நாயர் மறு முனையில் சோகமான குரலில் கேட்டார்.

“உனக்கு கல்யாணமாமே..?”

“ஆமாம்.. அதுக்கு ஏன் நீ அழுகுற..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி அசோக் மனசு வந்தது..?”

“யோவ்.. நிறுத்துயா.. நீ ஏதோ கன்னிப்பொண்ணு மாதிரியும்.. நான் ஏதோ உன்னை காதலிச்ச மாதிரியும்.. கற்பழிச்சுட்டு இப்போ ஏமாத்திட்ட மாதிரியும்ல சொல்ற..”

“வெளையாடாத அசோக்..”

“அப்புறம்.. துரோகம் பண்ணிட்டேன்னா என்ன அர்த்தம்..?”

“பின்ன என்ன..? உன்னை நம்பித்தான நான் இருந்தேன்..? நீ இருக்கேன்ற தைரியத்துல நான் என்னோட எல்லா கஸ்டமர்களையும் இழந்தாச்சு.. எனக்கு இப்போ இருக்குற ஒரே கஸ்டமர் நீதான்.. நீயும் இப்படி கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா.. நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்..? நான் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கணும் போல இருக்கு..!!”

“ஹாஹா..!! கல்யாணம்தான பண்ணிக்க போறேன்.. கஸ்டமரா இருக்க மாட்டேன்னா சொன்னேன்..?”

“அ..அசோக்.. எ..என்ன சொல்ற நீ..?” நாயர் நம்பமுடியாமல் கேட்டார்.

“ஆமாம் நாயர்.. நான் எப்போவும் அதே அசோக்தான்.. நீயும் எப்போவும் போல எனக்கு தேவைப்படுவ.. உன் கமிஷனும் எப்போவும் போல உனக்கு வந்துக்கிட்டே இருக்கும்..”

“நெ..நெஜமாத்தான் சொல்றியா..?”

“நெஜந்தான் நாயர்..”

“அப்போ உன் சம்சாரம்..?”

“அவ இதுல தலையிட மாட்டா.. டாடியோட இம்சை தாங்காமத்தான் அவ கழுத்துல தாலி கட்டப் போறேன்.. மத்தபடி எப்போவும் போல லைஃபை என்ஜாய் பண்ணப்போறேன்..!!”

“ஹையோ.. நீ சொல்றதெல்லாம் கேக்குறப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..?”

“எப்படி இருக்கு..?”

“உன்னை அப்படியே கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு..”

“ஹாஹா.. அந்த முத்தம் கொடுக்குற வேலைக்கு வேற ஏதாவது பொண்ணை கூட்டிட்டு வந்தா.. நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்..!!”

“வேணுமா..?” நாயர் உடனே குரலை தாழ்த்திக்கொண்டு ஆர்வமாக கேட்டார்.

“ஆமாம் நாயர்.. நாலஞ்சு நாளாச்சு.. எவளையாவது கூட்டிட்டு வந்தா தேவலை..”

“புதுசா ஒன்னு வந்திருக்கு.. கன்னடத்து பைங்கிளி.. கைபடாத ரோஜா.. வேணுமா..?”

“ஹாஹா.. கேட்டுட்டு இருக்குற.. கூட்டிட்டு வா நாயர்..!!”

அசோக் சொன்ன விஷயத்தை கேட்டு நாயருக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என தோன்றியது என்றால், அதே விஷயத்தை அறிந்த கற்பகத்துக்கோ வேறு ஒன்று தோன்றியது. கல்யாணம் பற்றி அசோக் சொல்வதற்கு முன்பே அவள் ராமண்ணா மூலம் அறிந்திருந்தாள். அடுத்த நாள் ஆபீசுக்கு அசோக் வந்ததுமே நக்கலாக கேட்டாள்.

“என்னடா.. திருந்திட்ட போல இருக்கு..?”

“திருந்திட்டனா.. என்ன சொல்ற..?”

“கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியாம் ..?”

“ஆமாம் கற்பு..!! சும்மா எல்லாரும் ‘கல்யாணம் பண்ணிக்கோ.. கல்யாணம் பண்ணிக்கோ..’ன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க.. எத்தனை நாள்தான் நானும் அந்த டார்ச்சரை தாங்குறது..? அதான்.. ‘ஒரு கல்யாணம் என்ன.. எத்தனை கல்யாணம் வேணா பண்ணி வைங்க.. பண்ணிக்குறேன்..’னு சொல்லிட்டேன்..!!” அசோக் கிண்டலாக சொல்ல, கற்பகம் சிரித்தாள்.

“ஹாஹா.. கொழுப்புடா உனக்கு..!! அப்படிலாம் வேற ஐயாவுக்கு ஆசை இருக்குதா..?? உனக்குலாம் ஒரு கல்யாணம் நடக்குறதே பெருசு..!! உன்னை மாதிரி தறுதலையை கல்யாணம் பண்ணிக்கவும் ஒருத்தி தலையாட்டிருக்கா பாரு.. பாவம்டா அந்த அப்பாவிப்பொண்ணு..!!”

“யாரு.. அவ அப்பாவியா..?? அவளைப்பத்தி உனக்கு என்ன தெரியும்.. அவ ஒரு கேடி, கேப்மாறி..!! தெரியுமா உனக்கு..??”

“என்னடா சொல்ற.. முன்னாடியே உனக்கு அந்தப்பொண்ணை பத்தி தெரியுமா..?”

“தெரியாம என்ன..? நாலு வருஷம் ஒரே காலேஜ்லதான் படிச்சோம்.. நல்லாவே தெரியும்..!!”

“ஓஹோ..?? அப்படியா சேதி..?? அப்போ.. இது லவ் மேரேஜா..??”

“எனக்கு அவ மேல லவ் இருந்தது உண்மைதான்.. ஆனா இது லவ் மேரேஜ்லாம் இல்ல..!!”

“என்னடா குழப்புற..?”

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது கற்பு விடு..!!”

“ஹ்ஹ்ம்ம்.. எது எப்படியோ.. அந்தப் பொண்ணு வர்ற நேரமாவது.. நீ உன் கெட்ட சகவாசம்லாம் விட்டுட்டு ஒழுக்கமா இருந்தா.. சந்தோஷந்தான்..!!”

“ஹாஹா.. இந்த அசோக்கை பத்தி இவ்வளவு சீப்பா எடை போட்டுட்டியே கற்பு..? எவளோ ஒருத்தி கழுத்துல தாலியை கட்டிட்டு.. எல்லா சந்தோஷத்தையும் விட்டுட்டு இருக்குறதுக்கு நான் என்ன கேனையனா..?” எகத்தாளமாக அசோக் சொன்னதை கேட்க, கற்பகத்துக்கு நிஜமாவாகவே அதிர்ச்சியாக இருந்தது.

“எ..என்னடா சொல்ற..?”

“ஆமாம் கற்பு.. ஊருக்காகவும், என் டாடிக்காகவும்தான் இந்தக்கல்யாணம்.. மத்தபடி எங்கிட்ட எந்த மாற்றமும் இருக்காது..!!”

“ஏய் லூசு.. இத்தனை நாள் நீ பண்ணுனதுலாம் கூட ஏதோ பரவால.. ஒருவகைல ஒத்துக்கலாம்.. ஆனா.. இனிமேலும் அப்டிலாம் பண்ணிட்டு இருந்தா.. அது ஒரு பொண்ணுக்கு நீ பண்ணுற பாவம்டா..!!”

“பாவமும் இல்ல.. கூவமும் இல்ல.. எல்லாம் அவகிட்ட சொல்லியாச்சு.. அவளுக்கும் இதுல ஓகேதான்..!!” அசோக் சொல்ல, கற்பு மலைத்து போனாள். விழிகளை விரித்து அதிர்ந்தாள்.

“அடப்பாவி..!!!!”

“என்னாச்சு.. அப்படியே டொய்ங்னு முழிக்கிற..?”

அசோக் அப்படி நக்கலாக கேட்டதும், கற்பகத்துக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

“உனக்குலாம்..”

“ம்ம்ம்..”

“கல்யாணம் பண்றதுக்கு பதிலா.. வேற ஏதாவது பண்ணிருக்கணும்.. அப்போத்தான் நீலாம் அடங்குவ..!!”

“வேற ஏதாவதுனா..?”

“பொம்பளையா பொறந்துட்டனேன்னு பாக்குறேன்.. இல்லனா அசிங்கமா சொல்லிருப்பேன்..!!”

அசோக் அதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கூலாக சிரித்தான்.

திருமண நாளும் வந்தது. திருவான்மியூரிலேயே ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அசோக்கிற்கும், நந்தினிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. நந்தினியின் உறவினர்கள் என்று அதிகம் பேர் திருமணத்திற்கு வரவில்லை. அசோக்கின் பக்கமிருந்து உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக அறிமுகமானவர்கள் என நிறைய பேர் வந்திருந்தனர். எல்லோர் முன்னிலையிலும் அசோக் நந்தினியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான். அவளுடன் மாலை மாற்றிக் கொண்டான். ‘இன்று வாழ்க்கை துணைவியாக கரம்பிடிக்கும் இவளுடன்.. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு.. ஒழுக்கத்தில் தவறாது.. உண்மையான அன்புடன்.. இறுதிவரை இவளுக்கொரு நல்ல வாழ்க்கைத்துணைவனாக இருப்பேன்..’ என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள சொன்னபோது, உதடசைத்தான்.

அன்று இரவு.. அவர்களுக்கு முதலிரவு..

அமுதாவும், இன்னும் சில உறவினர் பெண்களும் நந்தினியை அலங்கரித்து முடித்திருந்தனர். உடலில் ஓரிரு நகைகளை தவிர மீதி நகைகளை அவளிடம் இருந்து அகற்றியிருந்தார்கள். காலையில் இருந்து கட்டியிருந்த பட்டுப்புடவையை விடுத்து, இப்போது ஒரு மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள். அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல், அளவாய் மேக்கப் போட்டு விட்டிருந்தார்கள். தலை நிறைய சரம் சரமாய் மல்லிகைப்பூ..!! தலை குனிந்த தங்கச்சிலையாய் காட்சியளித்தாள் நந்தினி..!!

கௌரம்மா ஒரு சொம்பில் பால் கொண்டு வந்து நீட்டினாள். நந்தினியின் அழகை பார்த்து வாயெல்லாம் பல்லாக பூரித்தாள். அவளுடைய அழகு முகத்தை ஆசையாக தடவி நெட்டி முறித்தாள். ‘அசோக் தம்பி அப்போருந்து காத்துட்டு இருக்கு.. சீக்கிரம் அனுப்பி வைங்கம்மா..’ கௌரம்மா சொல்லிவிட்டு நகர்ந்தாள். அவள் சென்றபிறகு அமுதா கிசுகிசுப்பான குரலில் மகளுக்கு கடைசி கட்ட அறிவுரைகளை வழங்கினாள். அவள் சொன்னதெற்கெல்லாம் நந்தினி ‘ம்ம்.. சரிம்மா.. ம்ம்.. சரிம்மா.. ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

கையில் பால்சொம்புடன் முதலிரவு அறையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள் நந்தினி. கதவை நெருங்கியவள் சற்றே தயங்கி, தூரத்தில் நின்ற அம்மாவை பார்த்தாள். ‘ம்ம்.. உள்ள போ..’ என்று அமுதா சைகை செய்ய, நந்தினி கண்களை மூடி ஒருகணம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள். கதவை மெல்ல தள்ளி, உள்ளே நுழைந்தாள்.

உள்ளே நுழைந்த நந்தினி சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானாள். மெத்தையில் அசோக் அசந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த கோட் சூட் எல்லாம் காணாமல் போய், இப்போது ஷார்ட்ஸ் பனியனில் இருந்தான். இமைகள் விழிகளை மூடியிருக்க.. வாய் சற்று ‘ஓ’வென திறந்திருக்க.. மார்பு சீராக மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

திரைப்படங்களில் வரும் முதலிரவு அறை போலவே அந்த அறையும் அலங்கரிங்கப் பட்டிருந்தது. பழங்கள், இனிப்புகள், நறுமணம் பரப்பும் ஊதுவத்திகள், கட்டிலில் தொங்கும் மலர் மாலைகள், மெத்தையில் தூவப்பட்டிருந்த மலர் இதழ்கள்.. அதன் மீது மல்லாந்திருந்த அசோக்..!!

நந்தினி அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. ‘இப்படி அசந்து தூங்குகிறானே.. இப்போது என்ன செய்வது..?’ குழம்பினாள். கையிலிருந்த பால் சொம்பை பார்த்தாள். ‘இதுல பாதியை அவர் குடிச்சதும், மீதியை நீ வாங்கி குடி..’ இவ்வளவு பாலையும் இப்போது நான் மட்டும்தான் குடிக்க வேண்டுமா..?? எரிச்சலாக வந்தது. எழுப்பி பார்க்கலாமா..??

அசோக்கை எழுப்புவதற்காக அவன் முகத்துக்கு அருகே குனிந்தவள், உடனே முகத்தை சுளித்தாள். அவனிடம் இருந்து குப்பென்று ஆல்கஹால் ஸ்மெல்..!! உடனே மூக்கை பொத்திக் கொண்டாள். குடித்துவிட்டுத்தான் இப்படி மட்டையாகி கிடக்கிறானா..?? கையிலிருந்த பால் சொம்பை பழத்தட்டுக்கு அருகே வைத்தாள். மெத்தையின் ஓரத்தில் பொத்தென்று அமர்ந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல், பேந்த பேந்த விழித்துக்கொண்டு, அறையை சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

‘போனதும் அவர் காலை தொட்டு கும்பிட்டுக்கோ.. தாலியை கண்ணுல தொட்டு ஒத்திக்கோ..’ அம்மா சொன்னது ஞாபகம் வர மெத்தையில் இருந்து எழுந்தாள். தூங்கிக்கொண்டிருந்த அசோக்கின் கால்களை தொட்டு வணங்கிக் கொண்டாள். ப்ளவுசுக்குள் சிக்கியிருந்த தாலியை வெளியே எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் கொஞ்ச நேரம் கட்டில் மூலையில் தேமே என்று அமர்ந்திருந்தாள். அப்புறம் விளக்கை அணைத்துவிட்டு.. அசோக்கிற்கு அருகே.. அவனுக்கு முதுகு காட்டி.. ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்.

ஒரு இரண்டு நிமிடங்கள் இருக்கும். அப்போதுதான் அது நடந்தது. ஏதேதோ எண்ணத்தில் மூழ்கியிருந்த நந்தினி உடனே பக்கென்று அதிர்ந்து போனாள். அதிர்ச்சியில் அவளுடைய விழிகள் அகலமாய் விரிந்து கொண்டன. அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம், அசோக்குடைய இடது கை அவளுடைய இடுப்பு சதைகளை பற்றியதுதான்..!! பற்றியது மட்டும் இல்லாமல் பட்டுப்போன்ற மென்மையான அந்த சதைகளை அழுத்தி பிசைந்தன அசோக் அவனது இடது காலை நந்தினி மேல் தூக்கி போட அவனுக்குள் சிக்கி நசுங்குவது மாதிரி அவளுக்கொரு உணர்வு. நந்தினியின் இடுப்புக்கு கீழான பின்புறத்தை, அசோக்கின் இடுப்புக்கு கீழான முன்புறம் அழுத்தமாக உரசியது. அவனது முகம் நந்தினியின் பின்னங்கழுத்தில் புதைந்திருக்க, அவன் விட்ட அனல்மூச்சு முன்புறமாய் வந்து அவளுடைய மார்புகளை சுட, நந்தினிக்கு இப்போது கிறக்கமாக இருந்தது.

“எ..என்னங்க..” உதறலான குரலில் அழைத்தாள்.

“ம்ம்ம்..” அசோக் முனகினான்.

“வே..வேணாம்..”

“ம்ஹூம்..”

என்றவன் அவளை இப்போது இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனுடைய கைகள் இப்போது நந்தினியின் மார்புகளை தடவ, அவளுக்கு எதுவும் புரியவில்லை. ‘இவன் ஏன் இப்படி செய்கிறான்..? ஒரு மனைவியாக எதுவும் என்னிடம் எதிர்பார்க்க மாட்டேன் என்றானே..? இப்படி முதல் நாள் அன்றே பாய்கிறான்..? இப்போது நான் என்ன செய்வது..? இவனை அனுமதிப்பதா.. இல்லை தள்ளி விடுவதா..?’

‘தள்ளி விடவா..? முடியுமா என்னால்..? இவன் அணைப்பது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..? இவனுடைய ஸ்பரிசம் ஏன் எனக்கு சுகமாயிருக்கிறது..? இப்படியே.. இந்த அணைப்பிலேயே கிடந்தது விடலாமா என ஏன் எனக்கு தோன்றுகிறது..? இது சரியா.. இல்லை.. தவறா..?? இதில் என்ன தவறு இருக்கிறது..? இவன் என் கணவன்.. என் கழுத்தில் மாங்கல்யம் சூட்டியவன்.. என் உடலை தொட இவனுக்கு இல்லாத உரிமையா.. இவனுடன் உறவுற எனக்குத்தான் இல்லாத உரிமையா..?’

அசோக்கின் கைகள் நந்தினியின் உடலில் ஆங்காங்கே நகர்ந்து அவளை சித்திரவதை செய்ய, அவளால் அதற்கு மேலும் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல அசோக்கின் பக்கமாக புரண்டு படுத்தாள். அவனை அணைத்துக் கொள்ள ஆசையாக தன் கைகளை நகர்த்தினாள். அப்போதுதான் அசோக் அவளுடைய மார்புகளில் முகத்தை வைத்து தேய்த்துக்கொண்டே சொன்னான். இல்லை இல்லை.. உளறினான்..!!

“மா..மாலினி.. மா..மாலினி..”

அவ்வளவுதான்..!! நந்தினிக்கு ஒருகணம் இதயமே நின்றுவிடும் போலிருந்தது. அசோக்கை அணைக்க நகர்ந்த அவளுடைய கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன. காதில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியாதவளாய், அசோக்கின் முகத்தையே வெறித்து பார்த்தாள்.

இப்போது அவளுக்கு எல்லாம் புரிந்தது. ‘இத்தனை நேரம் இவன் என்னை எண்ணி தன்னை அணைக்கவில்லை.. இவனுடன் உறவு கொண்ட இன்னொரு பெண்ணை எண்ணி அணைத்திருக்கிறான்.. குடி போதையில் அந்தப்பெண் என்று கருதி என் மீது படர்ந்திருக்கிறான்.. இப்போது அந்த பெண்ணின் பெயரை உளறுகிறான்..’

தாம்பத்ய பந்தத்தின் முதல் நாள் இரவு.. தாலி கட்டியவனின் முதன் முதல் தொடுகை.. ஆனால் அவனுடைய உதடுகள் உச்சரிப்பது என்னவோ இன்னொரு பெண்ணின் பெயரை..!! என்ன கொடுமை இது என்று நந்தினிக்கு நெஞ்சு குமுறியது. நெஞ்சில் இருந்து கிளம்பிய துக்கம் தொண்டையை அடைக்க, அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது.

தன் இடுப்பு மீது படர்ந்திருந்த அசோக்கின் கையை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுத்தாள். கோபத்துடன் அவனுடைய கையை அந்தப்புறமாக வீசி எறிந்தாள். கை வீசி எறியப்பட்ட வேகத்தில் அசோக் அப்படியே புரண்டான். குப்புற கவிழ்ந்து கொண்டவன், ‘ம்ம்ம்.. ம்ம்ம்..’ என்று போதையில் முனகினான்.

நந்தினி படக்கென்று எழுந்து படுக்கையில் அமர்ந்து கொண்டாள். உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்டும், பொங்கி வந்த அழுகையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘இவனுடனான என் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை..!!’ முதல் நாள் இரவே அந்த உண்மை நந்தினிக்கு பளிச்சென்று உறைக்க, துடித்து போனாள். வெளியே சத்தம் வராமல் வாயைப் பொத்திக்கொண்டு, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments