அன்புள்ள ராட்சசி – பகுதி 38

அத்தியாயம் 20

தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!

திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!

யோகா..!! ரத்த ஓட்டம் சீராகும்.. நல்ல சிந்தனை பெருகும்.. ப்ரெஷர் குறையும்.. டென்ஷன் கட்டுப்படும்.. இவையெல்லாம் யோகாவின் நன்மைகளாக கூறப்படுகின்றன.. அந்த நன்மைகள் எல்லா நேரமும் உண்மைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை..!! யோகாவில் உளமாற ஈடுபடுபவர்களுக்குத்தான் அவை உண்மைகளே ஒழிய.. மீராவுடைய அழகு யோகாவை அருகிலிருந்து பார்க்கிற ஆடவருக்கு.. மேற்சொன்ன நான்கிற்கும் எதிர்ப்பதமான விளைவுகளே ஏற்பட நேரிடும்..!!

கடந்த ஒரு வருடமாகவே.. கலங்கிய குளமாய் அடிக்கடி மாறிப்போகிற மனதினை.. தெளிய வைத்து தேற்றிட.. மீரா அடிக்கடி தேர்ந்தெடுப்பது இந்த யோகாதான்..!! அறையின் நிறத்திலான அவளுடைய மனது.. இன்று ஏனோ அபரிமிதமான குழப்பத்துக்குள் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தது..!! கொதிநிலை கூடிப்போன உலையிட்ட பானை.. திண்ணமான மூடியையும் தூக்கியெழுப்பி.. வெப்பமான குமிழ்களை உமிழுமே..?? அதுபோல.. குழம்பித் தவித்திட்ட மீராவின் உள்ளம்.. வன்மையான தியானத்துக்கும் கட்டுப்படாமல்.. வேதனையான நினைவுகளை வெளிக்கசிந்தது..!! அந்த நினைவுகள் எல்லாம்.. நிழற்படமாய் அவள் நெஞ்சிலே ஓடின..!!

“அப்பா ஏன்மா நம்ம கூடவே இருக்க மாட்டேன்றாரு..??” அஞ்சு வயது மீரா, ஏக்கம் மிகுந்த பிஞ்சு குரலில் அம்மாவிடம் கேட்டாள்.

“அ..அப்பாவால.. எப்பவும் நம்ம கூட இருக்க முடியாதுடா சின்னு.. அ..அவருக்கு.. வெளியூர்ல வேலை.. அதான்..!!”

மடியில் படுத்திருந்த மகளின்.. தலையை மெல்ல வருடியவாறே.. தடுமாற்றமாக சொன்னாள் நீலப்ரபா.. மீராவின் அம்மா..!! வைத்திருந்த பெயர் வேறானாலும்.. நீலப்ரபா தன் மகளை சின்னு என்று செல்லமாக அழைப்பதுதான் வழக்கம்..!!

“அப்பா அங்க எங்க படுத்துகுவாரு..??”

“அ..அங்க.. இன்னொரு வீடு இருக்குமா.. அங்க படுத்துப்பாரு..!!”

“ம்ம்.. நாமளும் அந்த வீட்டுக்கே போயிடுவமா..??”

“இ..இல்லடா சின்னு.. நா..நாம.. நாம அந்த வீட்டுக்கு போக முடியாது..!!” – நீலப்ரபாவிடம் ஒரு பதற்றம்

“ஏன்மா..??”

“அ..அது அப்படித்தான்..!! சொன்னா உனக்கு புரியாது..!!”

அதற்குமேலும் அம்மாவிடம் குறுக்கு கேள்வி கேட்கிற அளவுக்கு.. ஐந்து வயது மீராவுக்கு அப்போது அறிவில்லை..!! தெளிவாக புரியாவிட்டாலும்.. அம்மா சொன்ன வார்த்தைகளை, அப்படியேதான் நம்பினாள்..!! அவளுக்கு அப்போது தெரியாது.. அப்பாவுக்கு தன் அம்மா வைப்பாட்டியாக வாழ்கிறாள் என்பதும்.. அவரால் இந்த வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறைதான் வந்து செல்லமுடியும் என்பதும்..!!

மீராவுக்கு தாய்மொழி தெலுங்குதான்.. அவளுடைய தாய் நீலப்ரபாவின் தாய்மொழி..!! நீலப்ரபாவுக்கு சொந்த ஊர்.. ஆந்திர மாநில சித்தூருக்கு அருகே இருக்கிற பங்காரெட்டிபள்ளி..!! பருவ வயதுடன் அவள் பூரித்து திளைத்திருந்த சமயத்தில்.. பங்காரெட்டிபள்ளியில் ஒரு தொழிற்சாலையின் கட்டுமானப்பணி ஆரம்பமானது..!! பழங்களை பிழிந்து சாறெடுத்து.. வேதியியல் மாற்றத்துடன் பவுடராக்கி.. வெள்ளீய டப்பாக்களில் அடைத்து.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற தொழிற்சாலை..!!

பழங்களை பவுடராக்கிடும் செயல்முறைக்கு.. பாய்லர்கள் மிக அவசியம்.. ராட்சத வடிவில் ஒன்றிரண்டு பாய்லர்கள் நிச்சயம் தேவை..!! அந்த பாய்லர்களை நிறுவும் கான்ட்ராக்ட் எடுத்திருந்தவன்.. சென்னையை சேர்ந்த இளம் பிசினஸ்மேன் மதுசூதனன்..!! பாய்லர்கள் நிறுவும் பொருட்டு.. அவன் பங்காரெட்டிபள்ளியில் சிறிது காலம் தங்கி இருக்க நேர்ந்தது..!! அப்படி அவன் தங்கியிருந்த ஒரு ஓட்டு வீடு.. நீலப்ரபாவுடைய ஏழைவீட்டின் எதிர்த்தவீடாக இருக்க நேர்ந்தது..!!

தங்கு தடையில்லாமல் மதுசூதனன் பேசிய ஆங்கிலம்தான்.. நீலப்ரபாவை முதலில் வசீகரித்தது.. அந்நிய ஆடவன் மீது அவள் மனதில் ஒரு அர்த்தமற்ற ஈர்ப்பு..!! பிறகு ஒருநாள்.. அவன் தடுமாறி தடுமாறி தெலுங்கில் தண்ணீர் கேட்டபோது.. ‘களுக்’ என்று அவளிடம் ஒரு சிரிப்பு..!!

“நீ..நீலு.. கா..காவாலி..!!”

நீலப்ரபாவை அவளுடைய வீட்டில் நீலு என்று அழைப்பதுதான் வழக்கம்..!! நீர் வேண்டும் என்று கேட்டது.. நீ வேண்டும் என்று கேட்டது மாதிரி அவளுக்கொரு நினைப்பு.. தான் ரசிப்பவன் தன்னையே கேட்கிறானே என்றொரு சிலிர்ப்பு.. அதனாலேயே ‘களுக்’ என்ற அந்த அடக்கமுடியா சிரிப்பு..!!
“எ..எனக்கு தமிழ் நல்லா தெரியும்.. நீங்க தமிழ்லயே பேசலாம்..!!”

நீர் கொணர்ந்து கொடுத்த நீலப்ரபாவின் கண்களில் ஒரு மினுமினுப்பு..!! அவளுடைய குழைவான பேச்சைக் கேட்ட மதுசூதனனுக்கோ.. மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு..!!

‘இவளுக்கு நம்மள புடிச்சிருக்கோ..??’

அப்புறம் மதுசூதனன் அடிக்கடி அவளிடம் பேச ஆரம்பித்தான்..!! தடையற்ற ஆங்கிலத்துடன்.. தடுமாற்றமான அவனுடைய தெலுங்கையும்.. இப்போது நீலப்ரபா ரசிக்க ஆரம்பித்திருந்தாள்..!!

அப்புறம் ஒருநாள்.. வார்த்தைகள் எதுவும் இல்லாமல்.. அவன் கண்களாலேயே வசீகர மொழி பேசியபோது.. நீலப்ரபாவிடம் ஒரு சிலுசிலுப்பு.. அவன் இவளுடைய கைவிரல்களை பற்றுகையில்.. நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு..!! கையை உதறிக்கொண்டு வெட்கப்பட்டு ஓடினாளே தவிர.. கத்தி ஊரைக்கூட்டவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை..!! அன்றே அவள் கத்தி ஊரைக் கூட்டியிருந்தால்.. இன்று உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் கதை இருந்திருக்கப் போவதில்லை..!!

சுருக்கமான காலத்துக்குள்ளேயே.. இருவரும் மிக நெருக்கமாகிப் போயினர்..!! கண்களும் கண்களும் கதை பேசிக்கொண்டன.. விரல்களும் விரல்களும் விளையாடி மகிழ்ந்தன.. உதடும் உதடும் தேன் உறிஞ்சி குடித்தன.. உடலும் உடலும் அனல் உரசி தகித்தன..!!

பிறிதொரு நாளில்.. இருவரும் சித்தூர் சென்று சிரஞ்சீவி நடித்த ‘மஞ்சி தொங்கா’ படத்தினை, மதியக்காட்சி பார்த்து திரும்பியதற்கு மறுதினத்தில்.. மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த குளிர்நாளின் பின்னிரவில்.. திருவிழாவுக்கு திரளாக திரண்டிருந்த ஊர்மக்கள், கதாகாலேட்சேபம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில்.. திருட்டுத்தனமாய் சந்தித்துக்கொண்ட மதுசூதனனும் நீலப்ரபாவும், களவுப்புணர்ச்சி காண நேர்ந்தது..!!

“வே..வேணாங்க..!!” கட்டிலில் சரிந்திருந்த நீலப்ரபா ஆரம்பத்தில் மறுத்தாள்.

“என்னை உனக்கு புடிக்கலை.. இல்ல..??” மதுசூதனனுக்கு அவளை மடக்க தெரிந்திருந்தது.

“ஐயோ.. அப்படி இல்ல..!!”

“அப்புறம்..??”

“க..கல்யாணத்துக்கு முன்னாடி..??”

“அப்போ.. என் மேல நம்பிக்கையில்லை.. அப்டித்தான..??”

“ச்சே ச்சே.. நான் அப்படி சொல்லல..!!”

“அப்புறம் என்ன..??”

“எ..எனக்கு..”

“உனக்கு..??”

“ப..பயமா இருக்கு..!!” நீலப்ரபா வெடவெடப்புடன் சொல்ல, மதுசூதனனிடம் ஒரு வெற்றிப்புன்னகை.

“அவ்வளவுதான..?? உன் பயத்தை எப்படி போக வைக்கனும்னு எனக்கு தெரியும்..!! ம்ம்ம்ம்.. கண்ணை மூடிக்கோ..!!”

“எதுக்கு..??”

“கண்ணை மூடு.. சொல்றேன்..!!”

நீலப்ரபா தயங்கி தயங்கி கண்களை மூடிக்கொண்டாள்..!! இடுப்பை மூடியிருந்த அவளுடைய புடவைத் தலைப்பை.. மதுசூதனன் கொஞ்சமாய் விலக்கினான்..!! அவளுடைய அடிவயிறுக்கருகே தனது முகத்தை எடுத்து சென்றவன்.. தலையை இப்படியும் அப்படியுமாய் மெல்ல அசைத்து.. அவள்மேல் பட்டும் படாமலும் உரசினான்..!! நீலப்ரபா இப்போது ‘ஹ்ஹாஹ்க்..’ என்ற சப்தத்துடன், மூச்சை இழுத்து பிடிக்க.. அவளது வயிறு இறுகிச்சுருங்கி உட்சென்றது.. மார்புகள் விம்மி விரிந்து வெளித்தள்ளின..!!

மதுசூதனன் உதடுகளை குவித்து அவளது இடுப்பில் காற்று ஊதினான்..!! அந்த அனல்க்காற்று அவளுடைய தொப்புளுக்குள் புயல்க்காற்றாய் சுழன்றடித்தது..!! அவன் இப்போது தனது மீசை மயிர்களால்.. அவளது அடிவயிற்று தசைகளில் கோடுகள் கிழித்தான்..!! அந்த மீசையின் குறுகுறுப்பு.. மூச்சுக்காற்றின் வெப்பம்.. மூக்கு நுனியின் ஸ்பரிசம்.. அதில் எழுந்த புதுவித சுகம்..!! உணர்சிக் கொந்தளிப்புக்கு உள்ளான நீலப்ரபா.. வெட்கத்தை உதறினாள்..!! அடிவயிற்றில் முகம் புதைத்திருந்த அவனுடைய சட்டையை பற்றி இழுத்து.. தன் அங்கத்தின் மீது முழுமையாய் போர்த்திக் கொண்டாள்..!!

“ராமா கனவேமிரா..!!!!! ராமா கனவேமிரா… ஸ்ரீ ரகுராமா கனவேமிரா ஆஆஆஆ..!!”

நீலப்ரபாவை பெற்றவர்கள் ஊர்ப்பொதுமேடை முன் அமர்ந்து.. ராமன் வாலியை வதம் புரிந்த கதை கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம்.. அவர்கள் வீட்டில்.. மதுசூதனன் அவர்களது மகளை பதம் பார்த்த கதை ஓடிக்கொண்டிருந்தது..!! மதுசூதனன் மஞ்சி தொங்கனாய் மாறி.. நீலப்ரபாவின் கற்பை கொஞ்சம் கொஞ்சமாய் களவாடிக் கொண்டிருந்தான்.. அவளது இளமையை திகட்ட திகட்ட அள்ளி பருகிக் கொண்டிருந்தான்..!! நீண்ட நேர கட்டில் சத்தம்.. நீண்ட நேர காமன் யுத்தம்.. நீண்டதொரு துடிப்பின் பிறகு.. நீண்டதொரு சுடுமூச்சுடனே முடிவுக்கு வந்தது..!!

ஒருநாள் பாலருந்தி பழகிப்போன திருட்டுப்பூனை.. அடுத்த நாளும் அடுப்பங்கரையை நோட்டமிடும்..!! ஆமாம்.. மதுசூதனனும், நீலப்ரபாவும்.. அதன்பிறகு வந்த தினங்களில் கூட.. மேலும் இரண்டு மூன்று முறைகள்..!!

பாய்லர்கள் நிறுவும் பணி முடிவுக்கு வந்தது..!! மதுசூதனன் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள்..!! கச்சையற்ற மார்புடன் தன் மீது கவிழ்ந்து கிடக்கிற நீலப்ரபாவின் வெற்று முதுகை தடவிக்கொண்டே அவன் சொன்னான்..!!

“ஊருக்கு போனதும் எனக்கு மொத வேலையே.. அப்பாட்ட நம்மள பத்தி பேசுறதுதான்..!!”

பிரிகிற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்.. விரைவிலேயே அமையப்போகிற வாழ்க்கையை எண்ணி.. நீலப்ரபாவின் மனம் கனவில் மிதந்து கொண்டிருந்தது..!! அப்போதுதான் ஆடிக் களைத்திருந்தாலும்.. அடுத்த நாள் ஊருக்கு கிளம்பும் முன்னர்.. இன்னொருமுறை இவளை ருசிபார்த்து விடவேண்டுமென.. மதுசூதனனின் மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது..!!

இன்னொருமுறை அவளை ருசிபார்க்க வாய்ப்பு கிடைக்காமலே.. மதுசூதனன் சென்னை கிளம்பி சென்றான்..!! அவன் சென்னை சென்று வெகுநாளாகியும்.. அவனிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை..!!

‘என்னாயிற்று..?? என்னைப்பற்றி வீட்டில் பேசியிருப்பாரா..?? எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எப்படியாவது சமாதானம் செய்திருப்பாரா..?? ஏன் ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை..? ஒருவேளை ஓய்வில்லா பணியாக இருக்குமோ..?? காதலியை விட கடமைதான் அவருக்கு முக்கியமாக போய்விட்டதா..?? வேலைதான் காரணமா.. இல்லை.. வேறெதும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டாரா..??’

குழப்பமும், கேள்வியும், ஏக்கமும், தவிப்பும்.. நீலப்ரபாவிடம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது..!! கூடவே.. அவள் வயிற்றில் உருவாகியிருந்த கருவும்..!!

விஷயம் வீட்டுக்கு தெரிந்து போனபோது.. அவர்கள் அப்படியே கொதித்துப் போனார்கள்..!! நீலப்ரபாவை அடித்தார்கள்.. உதைத்தார்கள்.. அசிங்கமான வார்த்தைகளை தெலுங்கிலே உதிர்த்தார்கள்..!! பிறகு.. நீலப்ரபா அழுதுகொண்டிருந்த மூலைக்கு எதிர்த்த மூலையில் அமர்ந்து.. அவர்களும் அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள்..!!

அன்று இரவு..

“நித்திர போத்தாயி…???” (தூங்குறாளா..??)

“அ…அவுனு..!!” (ஆ..ஆமாம்..!!)

“ஹ்ம்ம்.. நிதிர போனி…!!” (ஹ்ம்ம்.. தூங்கட்டும்..!!)

“இலாக சேஸிந்தே இ பில்ல ..??” (இப்படி பண்ணிட்டாளே பாவி..??)

“ஷ்ஷ்.. ஏடகா..!! ரேப்பு மன பில்ல சுத்தங்க அய் போத்துந்தி… ஹா பாப்பம் ரேப்பு தானி கடுப்புல உண்டது.. ஹந்தா பணியும் சேஸேஸி ஒஸ்த்தானு..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அந்தா மன்ச்சிதூரிகா நடுஸ்துன்னு.. தானிகி ஏ சந்தேகமும் ராகுண்டலாக நூ சூஸ்துக்கோ…!!”

(“ஷ்ஷ்.. அழாத..!! நம்ம பொண்ணு நாளைக்கு சுத்தமாயிடுவா.. அந்த பாவம் அவ வயித்துல நாளைக்கு இருக்காது.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வர்றேன்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அவளுக்கு எந்த சந்தேகமும் வாராத மாதிரி நீ பாத்துக்கோ..!!)

மெலிதாக உறக்கம் கலைந்து எழுந்த நீலப்ராவுக்கு.. தாய், தந்தையர் பேசிய பேச்சை கேட்டு திக்கென்று இருந்தது..!! பசுக்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் அவளுடைய பெற்றோர்.. வறுமைதான் அவர்களது வாழ்க்கை முழுமையும்..!! மானத்துக்கு பயந்த அவர்கள்.. மதுசூதனனிடம் சென்று முறையிட நினைக்கவில்லை.. !! ஊருக்கு அஞ்சியவர்கள்.. உண்டான கருவை கலைத்துவிடவே முடிவெடுத்தனர்..!!

அவர்களது திட்டம் அறிந்ததுமே.. சித்தூரில் இருந்து சிட்டாக பறந்துவிட்டாள் நீலப்ரபா..!! மதுசூதனனுடைய கம்பனியின் பெயரை மட்டும் மனதில் குறித்துக்கொண்டவள்.. மருட்சியான ஒரு பார்வையுடன் சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கினாள்..!! அங்கும் இங்கும் அலைந்து திரிந்து.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த கம்பனியை கண்டுபிடித்து.. மதுசூதனனின் முன்னால் சென்று நின்றாள்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments