மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 18

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதுதான் என் செல்போனுக்கு அந்த கால் வந்தது. எங்கள் கம்பெனி டைரெக்டரிடம் இருந்து..!! இவர் எதுக்கு இப்போது கால் செய்கிறார்..? கிளம்பும் அவசரத்தில் இவரிடம் சொல்லாமல் வந்துவிட்டேன். திட்டப் போகிறாரோ..? குழப்பத்துடன் கால் பிக்கப் செய்து அவரிடம் பேசினேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

மறுமுனையில் டைரெக்டர் உச்சபட்ச கொதிப்பில் இருந்தார். ‘எங்கே போய் தொலைஞ்ச..?’ என்று எகிறிக் குதித்தார். ப்ளான்ட்டில் ஏதோ பிரச்சனை என்றும், உடனடியாய் என்னை அங்க வருமாறும் அழைத்தார். ‘சரி.. வருகிறேன்..’ என்று அவரை சமாளித்து காலை கட் செய்வதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது. செல்போனை பாக்கெட்டில் திணித்துவிட்டு, நான் மலரை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தேன். அவள் என் நிலையை உடனே புரிந்து கொண்டாள்.

“பரவாலத்தான்.. நீங்க கெளம்புங்க.. நான் போயிக்குறேன்..!!”

புன்னகையுடன் சொல்லிக்கொண்டே, என் கையில் இருந்த பேகை அவளுடைய கையில் வாங்கிக் கொண்டாள். நான் இப்போது உள்ளம் எல்லாம் அவஸ்தையும், தவிப்புமாக அவளை ஏறிட்டேன். அவளிடம் ஏதோ சொல்லவேண்டும் என் இதயம் கிடந்தது துடித்தது. பதறியது..!! ஆனால்.. தொண்டையில் சிக்கிய மீன் முள் மாதிரி ஏதோ ஒன்று.. என் மூளைக்குள் சிக்கிக் கொண்டு என்னை சொல்ல விடாமல் தடுத்தது..!!

“சரி மலர்.. பாத்து கவனமா போ..!! அங்க போய் ரீச் ஆனதும் கால் பண்ணு..”

“ம்ம்.. சரித்தான்..!!”

“அ..அப்புறம்.. ஏதோ கேக்கனும்னு நெனச்சேன்…!! ஆ..ஆங்.. உன் ஃப்ரண்டோட செல்நம்பர் சொல்லு.. நோட் பண்ணிக்கிறேன்..!!”

“ஓ..!! இருங்கத்தான்.. என் மொபைலை பாத்துதான் சொல்லணும்..!!”

என்றவள் தன் கைப்பையை திறந்து அவளுடைய செல்போனை எடுத்தாள். பட்டனை அமுக்கி அவளுக்கு வந்த மெசேஜை எடுத்தாள்.

“அவ அட்ரசும் இருக்குத்தான்.. அதையும் நோட் பண்ணிக்குங்க..!!”

“ம்ம்.. சொல்லு..!!”

அவள் அந்த அஹமதாபாத் பெண்ணின் அட்ரசையும், செல் நம்பரையும் சொல்ல, நான் என் செல்போனிலேயே அதை குறித்துக் கொண்டேன். காண்டாக்டில் ஸேவ் செய்து, மீண்டும் என் செல்போனை பாக்கெட்டில் திணித்தவாறு, ‘ஓகே மலர்..’ என்றதும், மலர் அவளுடைய கைப்பையை திறந்து அவளுடைய செல்போனை உள்ளே போட்டாள்.

அப்போதுதான் அது நடந்தது..!! அவளுடைய கைப்பை நழுவி பொத்தென்று கீழே விழுந்தது..!! அவளுடைய செல்போன்.. கர்சீப்.. சீப்பு.. சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி.. சில்லறைக்காசுகள்.. இன்னும் சின்ன சின்னதாய் ஏதேதோ பொருட்கள்.. தரையில் விழுந்து எல்லாப்பக்கமும் சிதறி ஓடின..!! அத்தனை பொருட்களிலும்.. ஒரு இரண்டு மட்டும்.. தனியாகப் பிரிந்து.. என்னை நோக்கி உருண்டு வந்து.. என் காலடியை முத்தமிட்டு நின்றன..!!

அவை.. அந்த ஜோடி ஜிமிக்கிகள்..!! நான் முதன்முதலாய் மலருக்காக ஆசையாக வாங்கிய அந்த ஜிமிக்கிகள்..!! வாங்கிய சிறிது நேரத்திலேயே.. ஆத்திரம் என் கண்ணை மறைக்க.. அறிவும் இல்லாமல், மலரிடமும் காட்டாமல்.. நானே குப்பையில் வீசியெறிந்த ஜிமிக்கிகள்..!!

அந்த ஜிமிக்கிகளை பார்த்ததுமே.. எனக்கு உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!! இவை எப்படி இங்கே..?? மலரின் கைப்பைக்குள்ளே..?? அப்படியானால்.. அன்றே மலர் இவைகளை எடுத்து பத்திரப்படுத்தியிருக்கிறாளா..?? நான் குப்பையில் வீசியெறிந்த பொருளை.. பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறாளா..??

நான் குனிந்து அந்த ஜிமிக்கிகளை கையில் எடுத்தேன். மலர் அதற்குள்ளாகவே கீழே அமர்ந்து மற்ற பொருட்களை அவசர அவசரமாக அள்ளி, தன் கைப்பைக்குள் திணித்திருந்தாள். அப்புறம் நிமிர்ந்து என் கையில் இருந்த அந்த ஜிமிக்கிகளை பார்த்ததும், படக்கென அதிர்ந்து போனாள்..!! அவளுடைய கண்கள் உடனடியாய் கலங்கிப் போயின..!! உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை, உதடுகள் கடித்து அடக்கிக் கொண்டவள்.. மெல்ல எழுந்து நின்றாள்..!! ஏதோ தவறு செய்து மாட்டிக் கொண்டவள் போல.. ஒரு மாதிரி மிரட்சியாக என்னையே பார்த்தாள்..!!

எனக்கு மனதுக்குள் மலர் மீதான காதல் ஊற்று சரசரவென பொங்க ஆரம்பித்தது..!! உச்சபட்ச வேகத்தில் சுரந்து.. உள்ளமெங்கும் நிறைந்து ஓடியது..!! எனது கண்களும் கலங்கின..!! நானும் உதடுகள் கடித்து என் உணர்சிகளை அடக்க முயன்றேன்..!! காதலும், தவிப்பும், ஏக்கமுமாய் அவளையே பார்த்தேன்..!!

என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் இவள்..? நான் எவ்வளவுதான் திரும்ப திரும்ப இவளை காயப்படுத்தியும், இன்னும் இன்னும் அதிகமாகத்தானே அவளுடைய காதலை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறாள்..? அத்தனை காதலையும் மொத்தமாய் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு.. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதற்காக.. எங்கேயோ தூரமாய் சென்று விட தீர்மானித்திருக்கிறாளே..? இத்தனை காதலையும் உள்ளே வைத்துக்கொண்டுதானா.. இந்த ஒருவாரமாய் ‘ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை..’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..?? இயல்பாக இருக்கிற மாதிரி நடித்துக் கொண்டிருந்தாள்..?? இதோ.. இப்போது தன் காதல் ரகசியம் வெளிப்பட்டதும்.. உடைந்து போய் பரிதாபமாக நிற்கிறாளே..?? என்ன பெண் இவள்..?? இவளுக்கு ஈடாக இன்னொருத்தியை காண முடியுமா..??

“அ..அதை குடுங்கத்தான்.. ப்ளீஸ்..”

உதடுகள் படபடக்க மலர் என் முன் கை நீட்டினாள். நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்தேன். அப்புறம் என் கையில் இருந்த ஜிமிக்கிகளை அவளுடைய கையில் வைத்தேன். அவள் ஜிமிக்கிகளை பற்றிக்கொள்ள, நான் அவளுடைய கையை பற்றிக் கொண்டேன்.. அழுத்தமாக..!!

மலர் இப்போது பட்டென நிமிர்ந்து என்னை பார்த்தாள். கலங்கியிருந்த அவளுடைய கண்கள் இப்போது கண்ணீரை கொட்ட ஆரம்பித்தன..!! கண்ணீர் வழியும் கண்களுடனே, என்னை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தாள். ஏதோ சொல்லத் துடித்த உதடுகளை, பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். நானும் அவளுடைய கையை இறுகப் பற்றியவாறு, கலங்கிய விழிகளுடன் அவளையே பார்த்தேன்..!! என்னுடைய உதடுகளும் ஏதோ சொல்லத் துடித்தன..!!

‘அவளை போக வேண்டாம் என்று சொல்.. அவளை போக வேண்டாம் என்று சொல்..’ என்று என் இதயம் கிடந்தது பதறியது..!! ‘என்னைப் போகவேண்டாம் என்று சொல்.. காலம் முழுதும் உன் காலடியில் விழுந்து கிடக்கிறேன்..’ என்பது போலிருந்தது அவளது பார்வை..!! ‘என்னை விட்டுட்டு போகாத மலர்..’ என்று என் வாய் வரை வந்து விட்டது.. ஆனால் அந்த வார்த்தைகளை என் உதடுகள் உச்சரிக்கப் போகும் வேளையில்.. மலர் தன் கையை என்னிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்..!! என் காலுக்கருகே இருந்த அந்த பெரிய பையை இழுத்துக் கொண்டு விடுவிடுவென அந்த சப்வே நோக்கி நடந்தாள்..!!

நான் நீர்த்திரையிட்ட கண்களுடன் அவள் போவதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கையால் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே, வேகமாக நடந்த மலர்.. அந்த சப்வேயில் இறங்கி என் பார்வையில் இருந்து மறைவதற்கு முன்.. ப்ரேக் அடித்த மாதிரி நின்றாள்..!! மெல்ல திரும்பி என்னை பார்த்தாள்..!! உள்ளத்தில் பொங்கும் காதலுடனும்.. கண்களில் பொங்கும் கண்ணீரோடும்.. பரிதாபமாக பார்த்தாள்..!!

அந்த ட்ரெயின் இப்போது ஸ்டேஷனை அடைந்திருக்க வேண்டும்..!! அந்த சுவாமிகள் வந்து சேர்ந்திருக்க வேண்டும்..!! கூடியிருந்தவர்களின் கூக்குரல் இங்கு வரை கேட்டது..!! மேளங்கள் ‘டமார்.. டமார்..’ என ஒலித்து.. இடியாக இப்போது என் செவிப்பறையை வந்து மோதின..!! பட்டாசுகள் ‘படார்.. படார்..’ என வெடித்து சிதறின..!! யாரோ ஆட.. ‘ஜல்.. ஜல்..’ என சலங்கை ஒலி ஊசியாய் என் காதில் இறங்கின..!! அப்போதுதான் அது நடந்தது..!!

என்னையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த மலருடைய கண்கள், திடீரென மயக்கமுற்று செருகின..!! அவள் கையில் வைத்திருந்த பை நழுவி கீழே விழ, இரண்டு கையாளும் தன் தலையின் இருபுறமும் பிடித்துக் கொண்டாள்..!! ‘என்னாயிற்று என்னவளுக்கு..?’ என்று நான் பதறிக் கொண்டிருக்கும்போதே, மலர் அப்படியே நிலைகுலைந்து சரிந்தாள்..!! கீழே விழுந்தாள்..!! விழுந்த வேகத்தில் அந்த சப்வே படிக்கட்டுகளில்.. சரசரவென கீழ்நோக்கி உருண்டாள்..!!

“மலர்.. மலர்.. மலர்..”

நான் ஆவி பதறிப்போய் கத்திக்கொண்டே படிக்கட்டை நோக்கி ஓடினேன். கடகடவென கீழ் நோக்கி உருண்டு கொண்டிருக்கும் மலரை பார்த்து, அலறியவாறே நானும் வேகவேகமாய் அந்த படிக்கட்டுகளில் இறங்கினேன். அதற்குள்ளாகவே மலர் கடைசி படியிலும் உருண்டு, தரையில் சென்று சொத்தென்று விழுந்தாள். நான் அவசரமாய் ஓடிச்சென்று.. காயம் பட்ட புள்ளிமானாய் தரையில் வீழ்ந்து கிடந்தவளை.. என் கைகளில் அள்ளிக்கொண்டேன். அவளுடைய கன்னத்தைப் பற்றி முகத்தை திருப்பினேன்.

மலருடைய நெற்றியில் அடிபட்டிருந்தது..!! செந்நிறத்தில் குருதி அவளது இடது நெற்றியில் இருந்து வெளிப்பட்டு.. குபுகுபுவென பொங்கி.. காது நோக்கி வழிந்து கொண்டிருந்தது..!! இமைகள் விழிகளை மூடியிருந்தன..!! உதடுகள் மட்டும் துடிதுடித்துக் கொண்டிருந்தன..!! உடல் ஒருமாதிரி ‘விலுக் விலுக்’ என்று வெட்டிக் கொண்டது..!! அவளை அந்தக் கோலத்தில் காண.. எனக்கு அழுகை பீறிட்டது..!!

“மலர்.. மலர்..”

அழுதுகொண்டே, நான் அவளுடைய கன்னத்தை ‘பட்.. பட்..’ என தட்ட, அவள் இப்போது மெல்ல கண்கள் திறந்தாள்..!! என்னையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! அவளுடைய இமைகள் படபடத்தன.. அவளுடைய உதடுகள் துடிதுடித்தன..!! என்னையே காதலும் ஏக்கமுமாய் பார்த்தாள்..!! என்னுடன் கலந்துவிட துடிப்பது மாதிரியான ஒரு பார்வை..!! ஒரு வருடம் முன்பு கயலை, இதே மாதிரியான சூழ்நிலையில் என் கைகளில் ஏந்தியபோது அவள் பார்த்தாளே.. அதே பார்வை..!! என் உள்ளத்துக்குள் பாய்ந்து.. என்னை அப்படியே உலுக்கி எடுத்தது அந்தப் பார்வை..!!

“எ..என்னடா நீ..? காலைல இருந்து ஒன்னும் சாப்பிடாம..? நான்தான் அப்போவே சொன்னேன்ல..?” நான் அழுகையாய் சொல்ல,

“அ..அத்தான்.. அத்தான்..” அவள் திணறலாக என்னை அழைத்தாள்.

“ம்ம்ம்..”

“எ..எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் அத்தான்..”

“சொ..சொல்லுடா..!!”

“நா..நான்.. நான் உங்க கூடவே இருந்துடுறேன் அத்தான்..!! எ..எனக்கு உங்களை விட்டு பிரியிறதுல இ..இஷ்டமே இல்ல..!! ப்..ப்ளீஸ்த்தான்..!!”

சிறகொடிந்த பறவையின் பார்வையுடன்.. ஈனஸ்வரத்தில் அவள் அந்த மாதிரி கெஞ்ச.. என்னால் உள்ளத்தில் எழுந்த குமுறலை அடக்கவே முடியவில்லை..!! எனது கண்களில் கண்ணீர் பொலபொலவென அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது..!! அவளை அப்படியே என் மார்போடு சேர்த்து, இறுக்கி அணைத்துக் கொண்டேன்..!! அவளுடைய நெற்றியில் இச்சென்று முத்தம் பதித்தேன்..!!

“நீ எங்கயும் போக வேண்டாண்டா..!! எ..என்கூடவே இருந்திடு.. என்கூடவே இருந்திடு..!! எப்போவும்..!!”

நான் அழுகை பீறிட சொல்ல.. மலர் நிம்மதியாக தன் விழிகளை மூடி மீண்டும் மயக்கத்துக்கு போனாள்..!! கயலின் நினைவுகள் என் மனதில் எழுப்பியிருந்த சுவர்.. மலர் காட்டிய மாசற்ற அன்பினால்.. எப்போதோ விரிசல் விட ஆரம்பித்திருந்தது..!! இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. இவள் பேசிய வார்த்தைகளில்.. மடை திறந்த வெள்ளமாய்.. என் மனதுக்குள் பொங்கிப்பெருகிய.. மலர் மீதான காதல் வெள்ளம்.. எஞ்சியிருந்த தடைகளையும் எளிதாக உடைத்து எறிந்து.. கட்டற்ற காட்டாறாய் எங்கெங்கும் பாய்ந்தோட ஆரம்பித்தது..!! நான் இரண்டு கைகளாலும் மலரை அப்படியே தூக்கிக் கொண்டேன்..!!

“ஸம்படி.. ஹெல்ப் ப்ளீஸ்…!!!!”

என்று கத்திக்கொண்டே, மலரை கைகளில் ஏந்தியவாறு.. படிக்கட்டுகளில் வேகமாய் மேலேறினேன்..!!

அடுத்து ஐந்து நொடிகள் கழித்து :

‘ஸார்.. என்னாச்சு ஸார்..?’ என்று பதறியவாறு ஒரு இரக்க குணம் படைத்தவர் உதவிக்கு வந்தார்..!!

அடுத்து ஐந்து நிமிடங்கள் கழித்து :

காரின் பின்சீட்டில் மலரை கிடத்தி.. நான் முன்பக்கம் சென்று ஏறிக்கொண்டு.. அவசரமாய் காரை ஸ்டார்ட் செய்து.. ஆவேசமாய் ஆக்சிலரேட்டரை மிதித்தேன்..!!

அடுத்து ஐந்து மணி நேரம் கழித்து :

மயக்கத்தில் இருந்து விழித்த மலரை.. நான் காதலாக பார்த்தேன்..!! அவளுடைய வலது கையை எடுத்து எனது இரண்டு கைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டேன்..!! அருகில் பன்னீர் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல்.. அவளுடைய கைக்கு தைரியமாக முத்தம் கொடுத்தேன்..!! ‘ஐ லவ் யூ மலர்.. ஐ லவ் யூ..’ என்று உணர்சிகள் மேலிட, கண்களில் நீரோடு சொன்னேன்..!! அவள் அன்பும் நன்றியுமாய் என்னை பார்த்தாள்..!! எனது தலை முடியை கோதி விட்டாள்..!!

அடுத்து ஐந்து நாட்கள் கழித்து :

மலர் அபிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க, நான் அவளை பின்பக்கமாக சென்று அணைத்துக் கொண்டேன். ‘ஐயோ.. என்னத்தான் இது காலைலேயே..?’ என்ற அவளது சிணுங்கலை கண்டுகொள்ளாமல்.. அவளது கழுத்துப் பகுதியை உதடுகளால் கவ்வினேன்..!! பின்னர் அவளது காது மடலை நாவால் தடவிவிட்டு.. கிசுகிசுப்பான குரலில் கேட்டேன்..!!

“எனக்கு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு.. நீ என்னை கட்டிக்கிறியா..?” என்று குறும்பாக கேட்டேன்.

அடுத்து ஐந்து வாரங்கள் கழித்து :

ஆபீஸ் கேண்டீனில்.. சாதத்தை பிசைந்து உடைத்துவிட்டவாறே பன்னீர் கேட்டார்.

“இன்னும் ஏன் நாளை கடத்திட்டு இருக்குற..? சட்டுபுட்டுன்னு ஒரு நாளை முடிவு பண்ணிட வேண்டியதுதான..?”

“அப்டியா சொல்ற..?” நான் சற்றே அப்பாவியாக கேட்டேன்.

“ஹ்ஹஹாஹஹா.. இன்னும் என்னடா வெக்கம் உனக்கு..?”

“வெக்கம்லாம் இல்ல பன்னீர்..” சொல்லும்போதே எனக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.

“அப்புறம்..? வேற ஏதும் உனக்கு பிரச்னை இருந்தா சொல்லு..”

“சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! மதுரைல இருக்குற மாமாட்ட மட்டும் ஒரு வார்த்தை சொல்லணும் பன்னீர்.. அதுமட்டும் சொல்லிட்டோம்னா.. ஜோசியரை பாத்து ஒரு நல்ல நாள் குறிச்சிடலாம்..!!”

“அப்போ கவலையை விடு.. இந்த வாரம் ஞாயிற்றுக்கெழமை மதுரைக்கு டிக்கெட் புக் பண்ணு..!! ரெண்டு பேருமாவே போயிட்டு வந்துடலாம்..!! சரியா..?”

“ம்ம்.. சரி..”

அடுத்து ஐந்து மாதங்கள் கழித்து :

நான் மாங்கல்யத்தை சூட்டி முடிச்சிட, மலர் அதை தலை குனிந்து வாங்கிக் கொண்டாள். நடுவிரலால் அவள் நெற்றியில் நான் குங்குமம் இட.. அவள் என்னை பெருமிதமாக ஏறிட்டாள். என் கழுத்தில் இருந்த மாலையை நான் அவள் கழுத்தில் போட.. அவள் கழுத்து மாலையை என் கழுத்துக்கு மாற்றினாள்..!! நானும் மலரும் கணவன் மனைவியாய் மாறி.. இல்லறத்தில் அடி எடுத்து வைத்தோம்..!!

அன்று இரவு..

மலருடைய தடித்து சிவந்த உதடுகள் எனது உதடுகளுக்குள் அகப்பட்டிருந்தன. தேனூறும் அந்த உதடுகளை நான் சுவைத்து சுவைத்து, மது அருந்திக் கொண்டிருந்தேன். மலரும் தன் விழிகளை செருகியவாறு, என் முத்தம் தந்த போதைக்கு கட்டுண்டு கிடந்தாள். நெடுநேரம் நான் அந்த அதரங்களை சுவைத்து, இனிப்பு உறிஞ்சிவிட்டு விடுவித்தேன். விடுவித்ததுமே..

“ம்ம்ம்ம்.. மெல்லத்தான்.. வலிக்குது..” என்று நான் உறிஞ்சிய உதடுகளை கடித்தவாறே போதையாக சொன்னாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments