♥ உள்ளத்தின்.. கதவுகள் 5 ♥

சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்.. சொன்னாள் மிருதுளா.
” உனக்கு ரூம் கூட அல்ர்ட் பண்ணி வெச்சிட்டேன் நந்தா. .! வா பாக்கலாம்..”
புன்னகையுடன் எழுந்தான்.நந்தா. ”அங்கிள் எப்ப வருவார் ஆண்ட்டி. .?”
” நாட் ஹோப் ..” என்றாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சன்டே கூட வீட்ல இருக்க மாட்டாரா.. என்ன. .?”
பேசியவாறே.. மாடிப்படிகளில் ஏறினர். மாடியில் இரண்டாவதாக இருந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். அவனும் பின் தொடர்ந்தான்.
” இதான் நந்தா உன் ரூம். ! கெஸ்ட் யாரு வந்தாலும் இந்த ரூம்லதான் தங்க வெப்பேன். இனிமே இது உன் ரூம். ! இதுல நீ என்னென்ன மாற்றங்கள் பண்ண நெனக்கிறியோ.. உன் விருப்பம்போல பண்ணிக்கோ… இனிமே இது உன் வீடு..”
” ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.”
நந்தா அந்த அறையை ஆராய்ந்தான். கட்டில் மெத்தை கசங்காமல் இருந்தது. எம்பிராய்டரி வரைந்த தலையணைப் பூக்கள். . நான்கு வண்ணங்களில் மிகவும் அழகாக இருந்தது. சுவரோரமாக ஒரு டேபிள். வோயர் சர். மேற்குப் பார்த்த ஜன்னல். இளரோஸ் திரைச்சீலை. கைக்கெட்டும் தூரத்தில் பக்கத்து வீட்டு மாடி அறை.!
” எம்பிராய்டரி நீங்க பண்ணதா ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.
” ம்.. ” என மெலிதாகப் புன்னகைத்தாள்.
” சூப்பரா இருக்கு..”
அட்டாச்டு பாத்ரூம். .! பாத்ரூம் கதவைத்திறந்து பார்த்தான். மிகவும் சுத்தமாக இருந்தது.!

இரவு..!
எட்டரை மணிக்கு அவர்கள் இரவு டிபனைச் சாப்பிடும்போது கேட்டான் நந்தா.
” அங்கிள் வருவாரா.. மாட்டாரா ஆண்ட்டி..?”
” யாமறியோம் பராபரமே..” என்றாள். ”போன மாசம்வரை.. மாடில ஒரு குடும்பம் குடியிருந்தாங்க..! எனக்கு பயமில்லாம இருந்துச்சு. .”
” சரி விடுங்க..! அதான் நான் வந்துட்டேன் இல்ல. .?”

அவர்கள் டிபன் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவளது கணவர் வந்து விட்டார்.
” ஹல்லொ… யங் பாய்..” என்றார் அவனைப் பார்த்து.”எப்படி இருக்கே..?”
” பைன் அங்கிள்.! நீங்க எப்படி இருக்கீங்க..?”
அவர் நிதானத்தில் இல்லை. போதையில் இருந்தார். லேசாகக் குளறிக் குளறிப் பேசினார்.
” குட் மேன்..! பாய்..! உங்கம்மா எப்படி இருக்காங்க..?”
” ம்..ம்.. நல்லாருக்காங்க அங்கிள்.! கல்யாணத்துக்கு வந்துருக்கலாமில்ல.. அங்கிள்.”
” வேலை மை பாய்..! லீவ் போட முடியல..! அப்பறம் எப்படி எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதில்ல..?”
” ஓ.! அதெல்லாம் பக்காவா நடந்து முடிஞ்சிருச்சு அங்கிள்.”

அவர் சாப்பிடவில்லை. வெளியிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொன்னார். நீண்ட நேரம் அவருடன் பேசினான் நந்தா.
அவன் படுக்கப்போனபோது பத்துமணிக்கு மேலாகிவிட்டது.
அவன் படுத்த சிறிது நேரம் கழித்து. . மிருதுளா வந்தாள்.
” ஏதாவது வேணுமா..நந்தா. ?” எனக் கேட்டாள்.
” அப்படி எதும் இல்ல ஆண்ட்டி”
” ஏதாவது தேவைப்பட்டா கேளு…”

” சரி ஆண்ட்டி. .! நீங்க தூங்கல.?”
” தூங்கலாம்..! நாளைலருந்து டிவிய வேணா உன் ரூம்க்கு மாத்திக்கறியா..?”
” ஏன் ஆண்ட்டி. .?”
” பெரும்பாலும் நான் டிவி பாக்க மாட்டேன். ஆனாலும் அது என் ரூம்லதான் இருக்கு.! நீ.. ஒரு வயசுப் பையன்.. நெறைய டிவி பாப்ப..”
” இல்ல.. பரவால்ல ஆண்ட்டி. நான் அப்படியெல்லாம் டிவி பாக்ற ஆளில்லை..! கிரிக்கெட் மட்டும் விரும்பிப் பாப்பேன் அவ்வளவுதான். .! உங்க ரூம்லயே இருக்கட்டும்..”
” நீ.. ரொம்ப பொய் பேசுவ போலிருக்கே..?”
” சே..சே..! நான் ஒரு நேர்மையான இளைஞன் ஆண்ட்டி. .! என்னை நம்புங்க..”
” ம்..ம்.. பாக்கறேன்..!” எனச் சிரித்தாள்.
அவனும் சிரித்தான். உடனே பேச்சை மாற்றினான்.
” அங்கிள் செம டோஸ்ல இருக்கார் போல..?”
சட்டென அவள் முகம் வாடியது. ஒரு கவலை மேகம் அவளின் முகத்தில் கருக்கொண்டது.
” என்னால முடிஞ்சவரை ட்ரை பண்ணேன் நந்தா.. நோ யூஸ்..! இப்பெல்லாம் டெய்லி குடிதான். இனி என்கைல ஒண்ணுமே இல்ல. .” எனத்தொடங்கி.. தனது கணவனைப் பற்றி நிறையக் கதைகளைச் சொன்னாள்.
” உங்கம்மா உன்கிட்ட எதும் சொல்லலையா நந்தா. .”
” என்ன ஆண்ட்டி. .?”
” அங்கிளுக்கு.. இன்னொரு குடும்பம் இருக்கு..” என்றாள்.
திடுக்கிட்டான் ”என்ன சொல்றீங்க ஆண்ட்டி. .?”
” ஆமா நந்தா. ! சின்ன வயசுக்காரிதான்.! புருஷன் இல்ல. எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.. ! இப்ப ஒரு ரெண்டு வருசமா.. அவளோட தொடர்புலதான் இருக்கார்.! எவ்வளவோ சண்டை போட்டுப் பாத்தாச்சு.. ஒண்ணும் திருத்த முடியல..! இதெல்லாம் உங்கம்மா உன்கிட்ட சொல்லிருப்பானு நெனச்சேன். எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட அவ்வளவா இல்ல. ! இன்னிக்கேகூட நீ வந்துருக்கேன்னுதான் இங்க வந்துருக்கார். இல்லேன்னா. . ராத்திரி வந்துருக்க மாட்டார்..” என.. வருந்தும் குரலில் சொன்னாள்.
அவளது சோகங்களைக் கேட்ட அவன் மனது கரைந்தது. அவளுக்காக மிகவும் வருந்தினான். முதல் நாளே அவள். . அவனிடம் மனசுவிட்டுப் பேசியது.. அவர்களுக்குள் நெருக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது.
மேலும் பேசியவள்.. பேச்சினிடையே.. கண்கள் கலங்கிவிட்டாள்.
” என்ன ஆண்ட்டி இது..! நீங்க போயி..” என்று கனிவோடு அவளது கரத்தைப் பற்றி. . ஆறுதல் சொன்னான்.
” இப்பெல்லாம் நான் தனிமைல ரொம்பத் தவிக்கறேன் நந்தா. யாருமே இல்லாம அனாதையாகிட்ட மாதிரி ஒரு பீலிங்..! வெரி லோன்லினெஸ்..! இதுலருந்து என்னால விடுபடவே முடியல.” என மிகவும் வருந்திச் சொன்னாள்
” என்ன ஆண்ட்டி இது..? ரெண்டு பொண்ணுகளப் பெத்துருக்கீங்க.. அவங்க ரெண்டு பேரும் சேந்து.. நாலு பேரப் புள்ளைங்களப் பெத்துக் குடுத்திருக்காங்க.. ! நீங்க போயி.. அனாதை.. அது இதுன்னுட்டு..?”
” இல்லப்பா.. அவங்கள்ளாம் கல்யாணமாகி.. வாழ்க்கைல.. செட்டிலாகிட்டாங்க..! ஏதோ அம்மாங்கற முறைல என்னைப் பாக்க வருவாங்களே தவிற… என் பிரச்சினையை அவங்களால தீர்க்க முடியாது. ! அவங்கப்பா விசயத்துல… அவங்களால எதும் பண்ண முடியல.! தவிற.. அவங்கவங்க பிரச்சினையே அவங்களுக்குப் பெருசில்லையா..? இதுல.. அவங்கள குத்தம் சொல்ல என்ன இருக்கு..?”

பெருமூச்சு விட்டான் நந்தா ”சரி விடுங்க ஆண்ட்டி. .! நான் இருக்கேன் உங்களுக்கு. .! எத நெனச்சும் பீல் பண்ணாதிங்க.. ! அங்கிள மாத்த வேண்டியது என் பொருப்பு..!”என்றான்.
”வேஸ்ட் நந்தா. .! அவரால.. அவ இல்லாம வாழ முடியாதுங்கற நெலமைலதான் இருக்கார் இப்ப. ! இதுபத்தி.. நீ ஏதாவது பேசி.. வீனா மனச கஷ்டப் படுத்திக்காத..”
அவளுடைய கணவனைப் பற்றி. . முன்பே அவனுக்கு ஓரளவு தெரியும் என்றாலும்.. இப்போது அவள் சொன்னதைக் கேட்க சங்கடமாகவே இருந்தது.
ஒரு பெருமூச்செறிந்து விட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
” ஸாரி நந்தா நீ வந்த மொத நாளே.. என்னோட கஷ்டங்கள உன்கிட்ட சொல்லி.. உன்ன சங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன்.”
” சே.. சே.. அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .! நெஜமா.. நீங்க மனசுவிட்டு பேசறது.. எனக்கு சந்தோசமா இருக்கு..!” என்றான்.

” யாரை நம்பி நான் வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ.. அந்தாளே என்னைத் தூக்கி குப்பைல வீசிட்டான் நந்தா. அதான் என்னால ஜீரனிக்க முடியல..” எனக் குரலடைக்கச் சொன்னாள்.
அதன் பிறகும். . அவனோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் கீழே போனாள் மிருதுளா.

காலை.!
நந்தா கண்விழித்த போது.. மணி ஆறரை ஆகியிருந்தது. அவன் கீழே இறங்கிப் போனபோது.. மிருதுளா.. சமைத்துக் கொண்டிருந்தாள்.
”குட் மார்னிங் ஆண்ட்டி. .” என்றான்.
” குட்மார்னிங் ” சொல்லிச் சிரித்தாள்.
காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.
” இதான் நீ… வழக்கமா எந்திரிக்கற நேரமா..?” எனக் கேட்டாள்.
புன்னகைத்தான் ” சில நேரங்கள்ள… எட்டு மணிகூட ஆகும் ”
” இன்னிக்கு மொத நாள் அதான் விட்டுட்டேன். ஆனா நாளலருந்து நீ சரியா ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சாகனும்..”
” ஓகே ஆண்ட்டி. .” என்றான் ”பட் ஆறுமணிக்கு எந்திரிச்சு என்ன பண்றது ..?”
”எவ்வளவோ பண்ணலாம்.! ஜாகிங் போகலாம். வீட்லயேகூட எக்சர்சைஸ் பண்ணலாம்.. அப்றம் யோகா கூடப் பண்ணலாம்..”
” கரெக்ட் ஆண்ட்டி. .! ஆனா இதெல்லாம் எனக்கு எதுமே பழக்கயில்லயே..”
” பழகிக்கோ.. ! ஆரோக்ய வாழ்க்கை வாழக்கத்துக்கோ..! ஒண்ணும் தப்பில்ல..!”
” ம்…சரி.” என்றுவிட்டு அவளைக் கேட்டான் ”உங்க ஆரோக்யத்துக்குக்கூட அதான் காரணமோ..?”
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
” ஆமாப்பா..”
” இப்பயும் கன்டினியூ பண்றீங்களா..?”
” ரெகுலரா பண்றதில்ல..! நேரம் கெடைக்கறப்ப கண்டிப்பா பண்ணிருவேன்..! அதிகமா… யோகா பண்ணுவேன்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு. சூடாகிவிட்ட காபியை. .. டம்ளரில் ஊற்றி…அவனுக்கு ஆற்றிக் கொடுத்தாள்..!
” நாளைலருந்து உன்கிட்ட ஒரு டிசிப்ளினை எதிர்பாக்கறேன்..”

பரிதாபமாகச் சிரித்தான் நந்தா.

காலைக்கடன்களை முடித்துவிட்டு. . குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான் நந்தா.
காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது.!
தினசரியை எடுத்துக்கொண்டு. . அவன்.. உணவு மேஜைமுன் உட்கார. .
”சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா.. மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி.. அற்புதமாகத் தோண்றினாள்.
” ம்.. ம்..” தலையாட்டினான்.
அவள் அருகில் வந்தபோது… அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை… உற்சாகமடையச் செய்தது.
ஆண்ட்டி உணவைப் பறிமாற.. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ இந்த வயதிலும் எத்தனை அழகு..? ‘ என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’

” ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல. .
” அங்கிள் இல்லையா.. ஆண்ட்டி. .?” எனக் கேட்டான்.
” போயாச்சு..”
” எப்ப போனார்…?”
” நீ… குளிக்கப் போனப்பறம்..”
” டிபன் சாப்பிடலை..?”
” இல்லை. .”
அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை.
அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும்..! எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான் நந்தா.

பறிமாறியபின்… மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.!!!

– தொடரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments