அன்புள்ள ராட்சசி – பகுதி 14

யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!”

அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். ‘நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!’ என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான்.

“என்னடா ஆச்சு..??”

“எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??”

“பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!”

“ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!”

முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.

‘ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??’

விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் ‘பெக்கே பெக்கே’ என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.

அத்தியாயம் 9

அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, அசோக் அந்த செல்போனை மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தபோது, வடபழனியில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் இருந்தான். புதியதொரு சிம் கார்டை அவனுடைய செல்போன் அல்ரெடி உள்வாங்கியிருந்தது.

“நம்பர் எப்போண்ணா ஆக்டிவேட் ஆகும்..??”

“நைட்டுக்குள்ள ஆகிடும் ஸார்.. நான் கேரண்டி..!!”

“ஓகேண்ணா.. தேங்க்ஸ்..!!”

சொன்ன அசோக், செல்போனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பழைய சிம்மை கையில் எடுத்து, ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று மனதுக்குள்ளேயே மூன்று முறை காறித்துப்பி, அந்தக்கடையில் இருந்த குப்பைக்கூடையிலேயே விட்டெறிந்தான்.

“டபுள் ஃபைவ்.. ட்ரிப்பில் ஃபைவ்னு முடியுது மச்சான்.. நல்லா ஃபேன்சி நம்பர் மாதிரி இருக்கு..!!” புது சிம்கார்ட் அட்டையை சுரண்டிக்கொண்டே சாலமன் இளிக்க, அசோக் அவனை கடுப்புடன் முறைத்தான்.

“கெளம்புடா வெண்ணை..!!” என்று எரிந்து விழுந்தான். திரும்பி நடந்தான்.

“ம்க்கும்.. எவ மேல இருக்குற கடுப்பையோ, என் மேல காட்டு..!!”

சாலமன் முனகிக்கொண்டே அவனுடன் நடந்தான். இருவரும் பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஆபீஸை நோக்கி பறந்தது.

அசோக் நிஜமாகவே மீரா மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அவளால் நேற்று இரவில் இருந்து அவன் மாற்றி மாற்றி அனுபவித்த டென்ஷனை எண்ணி எண்ணி எரிச்சலானான். ‘எதுக்கு இப்படி ஒரு சிக்கல்ல என்னை மாட்டிவிட்டா.. ஊர் பேர் தெரியாதவன்லாம் என் உசுரை எடுக்க அலைஞ்சுட்டு இருக்கானுக.. ச்சே.. இன்னைக்கு வரட்டும்.. அவளை வச்சுக்குறேன்..’ என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான்.

ஆபீஸில்..

“அவ நம்பரை உன் கைல எழுதுனதுக்கே.. உன் நம்பர் காலி ஆகிடுச்சு மச்சி..!! ஐ லவ் யூ வேற சொல்லிருக்கா.. அதுக்கு இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ..?? கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு..!!” வேணு வேறு அசோக்குக்கு டென்ஷன் ஏற்றினான்.

“அவ ஒன்னும் என் மேல இருக்குற ஆசைல ஐ லவ் யூ சொன்ன மாதிரி எனக்கு தோணலைடா..!!” அசோக் மனதில் இருந்த குழப்பத்தை வெளியே சொல்லிவிட,

“ஹேய்.. ஏண்டா அப்படி சொல்ற..??” கிஷோர் சட்டென அசோக்கிடம் கேட்டான்.

அசோக் இப்போது தன் மனதில் இருந்த குழப்பத்தை நண்பர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தான். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மீரா அவனை கலாய்த்தது.. அப்புறம் பரிட்டோ வாங்கி தந்தால்தான் மேற்கொண்டு பேசுவேன் என்றது.. பில்லுக்கு பணம் கேட்டதும், திடீரென ஐ லவ் யூ சொன்னது..!! நேற்று அவர்களிடம் சொல்லாத அந்த விஷயங்களை எல்லாம், இப்போது விளக்கமாக சொன்னான். நம்பர் தந்திருக்கிறாளே என்ற நம்பிக்கை கூட நேற்று இரவே தகர்ந்து போனது என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நண்பர்கள் மூவரும், சிறிது நேரம் பலத்த யோசனையில் இருந்தனர். அசோக்குக்கு ஏதாவது ஒருவகையில் உதவ முடியாதா என்று தீவிரமாக தின்க் செய்தனர். ‘புரிஞ்சுக்க முடியாத கேரக்டரா இருக்காடா..’ என்று அசோக் சலிப்பாக சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். ‘ஹேய்.. ஒருவேளை அவ கெளம்புற அவசரத்துல தப்பான நம்பர் குடுத்திருக்கலாம் மச்சி.. நீயா எந்த ஒரு முடிவுக்கும் வந்துடாத..’ என்று சொல்லிப் பார்த்தனர். பிறகு அவன் சமாதானம் ஆகாததை கண்டதும், ‘சரி மச்சி.. நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.. அதான் நாங்கலாம் இருக்கோம்ல.. இன்னைக்கு அவ வந்தான்னு வச்சுக்கோ.. ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்.. சரியா..??’ என்று அசோக்கை தைரியமூட்டினார். என்ன செய்யலாம் என்று நான்கு பேரும் ஒரு திட்டம் தீட்டினர்..!!

அன்று மதியம்..

அவர்கள் நால்வரும் அந்த ஃபுட்கோர்ட்டுக்குள் புகுந்தபோது.. மீரா ஏற்கனவே வந்திருந்தாள்..!! வழக்கம் போல ஒரு கார்னர் டேபிளை பிடித்திருந்தவள்.. தனியாக அமர்ந்து, தட்டில் இருந்த ரோட்டியை தாக்கிக் கொண்டிருந்தாள்..!! வேணுதான் அவளை முதலில் கவனித்தான்..!!

“மச்சி.. யார்னு பாரு அங்க..!!”

என்று வேணு சொன்னதும், மற்ற மூவரும் மீராவை பார்வையால் தேடிப் பிடித்தனர். நன்றாக முழுங்கிக்கொண்டிருந்த அவளை.. நான்கு பேருமே தூரத்தில் இருந்தவாறு முறைத்து பார்த்தனர்..!! தங்களுக்குள் ஒருமுறை ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். இதே ஃபுட் கோர்ட்டில் மீரா ஒரு ஆளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விரட்டிய சம்பவம், அவர்கள் அனைவருடைய மூளையையும் அந்த நொடியில் க்ராஸ் செய்திருக்க வேண்டும். தலையை சிலுப்பி வலுக்கட்டாயமாக அந்த நினைவை விரட்டி அடித்தனர். பிறகு வீரசிங்கங்கள் போல.. நால்வரும் பேரலலாக நடந்து.. மீராவை நோக்கி சென்றனர்.. அவள் அமர்ந்திருந்த டேபிளை சூழ்ந்து கொண்டனர்..!!

தலையை நிமிர்த்திய மீரா முதலில் அசோக்கைத்தான் பார்த்தாள்.. உடனே அவளுடைய முகம் விளக்கு போட்ட மாதிரி ப்ரைட் ஆனது..!!

“ஹாய்…” என்று உற்சாகமாக கத்தியவள்,

“மிஸ்டர்.. மிஸ்டர்..”

என்று எதையோ மறந்தவள் போல இழுத்தாள். நான்கு பேருமே அவளை இன்னும் கடுமையாக முறைக்க ஆரம்பிக்க, அசோக்தான் கடுப்பை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான்.

“அசோக்..!!!! என் பேர் கூட அதுக்குள்ள மறந்து போச்சா..??”

“ச்சே ச்சே.. அப்டிலாம் இல்லப்பா..!! உன் பேரை எப்படி நான் மறப்பேன்..? ஆக்சுவலா நேத்து நைட் உனக்கு ஒரு பெட் நேம்.. ஸாரி.. நிக் நேம் யோசிச்சு வச்சேன்.. அதை சொல்லி கூப்பிட ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ளே நீ…”

“போதும்.. ரொம்ப நடிக்காத..!!” அசோக் அவ்வாறு எரிச்சலாக சொல்ல, இப்போது மீராவின் முகம் பட்டென மாறிப் போனது.

“என்னாச்சு..???” என்றாள் மிகவும் சீரியஸான குரலில்.

அசோக் அவளுக்கு பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டே இருக்க, இப்போது சாலமன் அவ்வளவு நேரம் மனதுக்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த டயலாக்கை டெலிவரி செய்தான்.. குரலில் மெலிதான பதற்றத்துடனே..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்றதுலாம் சரி இல்ல.. உங்க மனசுல என்னதான் நீங்க நெனச்சுட்டு இருக்கீங்க..??” சாலமன் கேட்கவும், இப்போது மீரா அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“இ..இந்த மொறைக்கிற வேலைலாம் வச்சுக்காதிங்க..!! எ..எங்க அசோக் உங்களை சின்ஸியரா லவ் பண்றான்.. நீங்க என்னடான்னா அவனை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க..!! ஏன் இப்படிலாம் பண்றீங்க..??” – இது வேணு சற்று தடுமாற்றத்துடனே.

“இப்படி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்..?? கேக்குறோம்ல.. பதில் சொல்லுங்க..!! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நாங்க போறதா இல்ல.. எங்க ஃப்ரண்டை நீங்க உண்மைலேயே லவ் பண்றீங்களா.. இல்ல சும்மா டைம் பாஸ்க்கு வெளையாடுறிங்களா..??” கிஷோரின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது.

மீரா இப்போது அசோக்கை விட்டுவிட்டு அவனுடைய நண்பர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்து முறைத்தாள். அவளுடைய மார்புகள் ஒருமாதிரி குபுக் குபுக்கென ஏறி இறங்கின. அவளுடைய அமைதியை பார்த்த மற்ற மூவரும், இப்போது சற்றே தைரியமாகி..

“ஹலோ.. பேசுங்க..” என்றார்கள் கோரஸாக.

மீராவுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அமர்ந்திருந்த சேரை சரக்கென பின்னால் தள்ளிவிட்டவாறு ஆவேசமாக எழுந்தாள். அவளுடைய முகம் இன்ஸ்டண்டாய் ஒரு ஆத்திரச் சிவப்பை பூசியிருக்க,

“அடிங்ங்ங்..!! யார்டா நீங்கள்லாம்..??” என்று நரம்பு புடைக்க அவர்களை பார்த்து கர்ஜித்தாள்.

அவ்வளவுதான்..!! அவளுடைய அனல் கக்கும் பார்வையில் அனைவரும் அரண்டு போயினர். நால்வரும் சடக்கென இரண்டடி பின்னால் நகர்ந்தார்கள். சாலமன் மட்டும் பத்தடி தூரத்திற்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான். கிஷோர்தான் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மிடறு விழுங்கியவாறு சொன்னான்.

“நா..நாங்க.. நாங்கள்லாம்.. அ..அசோக்கோட ஃப்ரண்ட்ஸ்..!!”

“ப்ரண்ட்ஸ்னா.. பெரிய பருப்பா நீங்கள்லாம்..???? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!! உங்களுக்குலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா..?? உங்களுக்கு இன்னும் பத்து செகன்ட் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒருபய என் முன்னாடி இருக்க கூடாது.. இல்லனா நான்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!”

முகத்தில் முறைப்பும் உடலில் விறைப்புமாக மீரா பொரிந்து தள்ள, நான்கு பேரும் அப்படியே வெலவெலத்துப் போயினர். அசோக்கை தவிர மற்ற மூவரும் தயங்கி பின் வாங்கினர்.

“ம..மச்சி… வந்துட்றா.. போயிர்லாம்..!!”

சாலமன் தொடை நடுங்க அசோக்கை கை நீட்டி சுரண்டினான். உடனே அசோக் மெல்ல ஓரடி பின்னால் எடுத்து வைக்க, இப்போது மீரா அசோக்கின் முகத்துக்கு நேராக ‘டக்.. டக்..’ என விரலை சொடுக்கினாள்.

“ம்ம்ம்…. நீ எங்க கெளம்புற..?? நீ உக்காரு..!!”

என்று மிரட்டலாக சொன்னவள், அவளுக்கு எதிரே இருந்த சேரை சுட்டு விரலால் அவனுக்கு சுட்டி காட்டினாள். அவன் அப்புறமும் தயங்க, ‘ம்ம்.. உக்காருன்றன்ல..?’ என்று உறுமினாள். அசோக் இப்போது தயங்கி தயங்கி அந்த சேரில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் மீரா வெடுக்கென மற்றவர்களிடம் திரும்பினாள்.

“ம்ம்ம்.. இன்னும் என்ன இங்க வேடிக்கை..??” என்றாள் சீற்றமாக.

“ஹேய்.. நீங்க ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருங்கடா.. நான் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..!!” அசோக் திரும்பி நண்பர்களிடம் சொன்னான்.

“இ..இல்ல மச்சி.. நா..நாங்க பார்ஸல் வாங்கிட்டு ஆபீஸுக்கு போயிர்றோம்.. நீ அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கோ..!!” என்று சொன்ன வேணு,

“ஹேய்.. வாங்கடா..!!”

என்று மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். விட்டால் போதும் என்று விழுந்தடித்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர் மூவரும்.

“மச்சி.. எமர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நம்பர்.. 102-ஆ 103-ஆ..??” நகரும்போது சாலமன் முணுமுணுத்தது அசோக்கின் காதில் விழுந்து அவனை கிலியடைய செய்தது.

அவர்கள் செல்வதையே சிறிது நேரம் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் படக்கென சேரில் அமர்ந்தாள். அமர்ந்ததுமே டேபிளில் கிடந்த முள்கரண்டியை கையில் எடுத்து.. அசோக்கின் முகத்துக்கு நேராக நீட்டி.. அவனை குத்திவிடுவது மாதிரி ஆட்டியாவாறே.. சீற்றமாய் கேட்டாள்..!!

“என்ன.. ஆள் கூட்டிட்டு வந்து மெரட்றியா..?? ஒரு அறைக்கு தாங்க மாட்டானுக ஒவ்வொருத்தனும்..!! இவனுகள்லாம் உனக்கு அடியாளுகளா..?? அப்டியே போட்டன்னா..!!!”

“ஸா..ஸாரி மீரா.. அ..அவனுக என் ஃப்ரண்ட்ஸ்…. ஏதோ தெரியாம..”

“ப்ரண்ட்ஸ்னா..?? இங்க பாரு.. உனக்கும் எனக்கும்தான் பேச்சு..!! உன் அல்லக்கையி.. நொள்ளக்கையி.. மொன்னக்கையிலாம்.. அங்க.. அங்க நிக்கணும்.. தூரமா..!! பக்கத்துல வந்தானுக.. பஞ்சர் ஆயிடுவானுக.. பஞ்சர்..!! சொல்லி வையி.. புரிஞ்சதா..?? இவனுக ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பானுக.. நான் கையை கட்டி பதில் சொல்லனுமா..??”

“ஓகே ஓகே..!! ரிலாக்ஸ்.. கூல் டவ்ன்..!!!!”

அசோக் அவளை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான். அப்புறமும் சில வினாடிகள் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் ஆத்திரம் வெகுவாக குறைந்து போனவளாய் கேட்டாள்.

“ம்ம்ம்..!! இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை..??” அவள் கேட்க, அசோக் சற்றே தயங்கிவிட்டு ஆரம்பித்தான்.

“நீ.. நீ ஏன் அப்படி பண்ணின..??”

“எப்படி பண்ணேன்..??”

“உன்னால எவ்வளவு டென்ஷன் தெரியுமா..??”

“ப்ச்.. பிரச்சனை என்னன்னு சொல்லப் போறியா.. இல்ல சப்புன்னு ரெண்டு விடட்டுமா..??”

“சொ..சொல்றேன்.. அ..அந்த நம்பரு..”

“எந்த நம்பரு..??”

“அதான்.. நேத்து உன் கான்டாக்ட் நம்பர்னு குடுத்தியே..??”

“ம்ம்.. அதுக்கென்ன..??”

“அ..அந்த நம்பருக்கு கால் பண்ணினா வேற யாரோ ஃபோன் எடுக்குறாங்க.. ஆக்சுவலி இட்ஸ் எ ராங் நம்பர்..!!”

“ஓ..!! எங்க.. அந்த நம்பர் என்னன்னு சொல்லு..!!”

மீரா கேட்க, அசோக் நம்பரை சொல்லாமல், தன் செல்போன் எடுத்து அந்த காண்டாக்ட் திறந்து காட்டினான். ஒருகணம் அந்த எண்ணை சரிபார்த்த மீரா,

“ஹ்ம்ம்.. என் நம்பர்தான் இது.. பட்.. ஒரே ஒரு சின்ன கரெக்ஷன்..!! ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்டேன்.. தட்ஸ் ஆல்..!!! இதுக்கா இவ்வளவு அலப்பறை..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக் உடனே சன்னமான குரலில் முனகினான்.

“ம்க்கும்.. நீ ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்ட.. எனக்கு எல்லாரும் ஏழரையை கூட்டிட்டாணுக..!!”

“என்ன மொனங்குற..??”

“ஒன்னுல்ல..!! நீ தப்பான நம்பர் குடுத்ததால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா..?? டாடா டோகோமோல இருந்து வோடஃபோன் மாற வேண்டியதா போச்சு.. டாடா சுமோவ பாத்தாலே ஓட்டம் எடுக்க வேண்டியதா போச்சு..!!”

“ப்ச்.. எனக்கு ஒன்னும் புரியல.. என்னாச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்..” மீரா இப்போது கூலாக கேட்டாள்.

“ஆக்சுவலா.. நேத்து நைட்டு.. உனக்கு கால் பண்ணலாம்னு..” அசோக் ஆரம்பிக்க, அவள் இடையில் குறுக்கிட்டாள்.

“ஏய்.. இரு இரு.. அதுக்கு முன்னாடி..” அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

“என்ன..? பரிட்டோவா..??” அசோக் பாவமாக கேட்டான்.

“யெஸ்..!! அதோட..”

“டயட் கோக்..??”

“ஹாஹா..!! க.க.க.போ.. வாங்கிட்டு வா போ..!!” கண்களில் குறும்பும், கன்னத்தில் குழியுமாக மீரா புன்னகைத்தாள்.

‘தலையெழுத்தே..!!’ என்று அசோக் சேரை விட்டு எழுந்து கொண்டான். நேற்று மாதிரியே டேகோ பெல் சென்று பரிட்டோவும், டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்ப வந்தான். வந்ததுமே மீரா கவர் பிரித்து, பரிட்டோவை ஒரு பெரிய கடி கடித்தாள்.

“ம்ம்.. சொல்ஹு..!!” என்று வீங்கிப்போன கன்னத்துடன் சொன்னாள்.

அசோக் மீராவின் முகத்தையே சலிப்பாக பார்த்தவாறு, முந்தின இரவில் இருந்து நடந்த சம்பவங்களை, பொறுமையாக கூற ஆரம்பித்தான். அவன் பரிதாபமாக சொன்னவற்றை எல்லாம், மீரா பரிட்டோ மென்று கொண்டே சுவாரசியமாக கேட்டுக் கொண்டாள். அடிக்கடி ‘ஹாஹாஹாஹா..’ என்று சீஸ் அப்பிய வாயுடன் சிரித்தாள். கோக் குடித்து ‘ஏவ்வ்வ்’ என்று ஏப்பம் விட்டாள்.

“ம்ம்.. கடைசில என்னாச்சு..??”

“என்னாச்சு.. என் நம்பரை சேன்ஜ் பண்ணிட்டேன்..!! சிவன் கோயில் போய்.. என் பேர்ல நானே ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டேன்..!! அவனுக கைல சிக்க கூடாதுடா சாமின்னு நல்லா வேண்டிக்கிட்டேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!!” மீரா அதற்கும் கனைக்க, அசோக் எரிச்சலாக அவளை பார்த்தான்.

“ம்ம்.. அந்த கடுப்புலதான்.. ப்ரண்ட்ஸ்லாம் கூட்டிட்டு என் மேல படை எடுத்து வந்தியாக்கும்..??”

“அ..அது மட்டும் இல்ல..”

“அப்புறம்..??”

“நீ நேத்து ஐ லவ் யூ சொன்னேல..??”

“ஆமாம்..!!”

“நெஜமாவே நீ என்ன லவ் பண்றியா.. இல்ல சும்மா வெளையாடுறியான்னு வேற எனக்கு ஒரு டவுட்டு..!!”

“ஏன் அப்படி ஒரு டவுட்டு..??”

“பின்ன.. திடீர்னு ஐ லவ் யூ சொன்னா..??”

“ம்ம்..?? நீயுந்தான் திடீர்னு என்னை லவ் பண்றேன்னு சொன்ன..??”

“அதுக்கில்ல.. என்னைப் பத்தி உனக்கு..” அசோக் கேட்க வந்ததை முடிக்காமல் இழுத்தான்.

“ம்ம்.. சொல்லு..!!” மீரா அவனை முடிக்க சொல்லி தூண்டினாள்.

“இல்ல.. எ..என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாதேன்னு..” மீண்டும் இழுக்கத்தான் செய்தான்.

“எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர்தான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்கு பேர் கால்குலேஷன்..!! நீதான நேத்து சொன்ன..??” மீரா அசோக்கை மடக்க, அவன் இப்போது சோர்ந்து போனான்.

“ம்ம்ம்.. ஆ..ஆமாம்.. நான்தான் சொன்னேன்.. நானேதான்..!!!!” என்று பரிதாபமாக தலையை ஆட்டினான்.

“ம்ம்.. அப்புறம் என்ன..??”

“இல்ல.. பில்லுக்கு பணம் கேட்டதும் நீ ஐ லவ் யூ சொன்னியா.. அதான் ஒருவேளை..” ஆரம்பித்துவிட்டு, அப்புறம் அவசரப்பட்டு விட்டோமோ என்று அசோக் நாக்கை கடித்துக் கொண்டான்.

“ம்ம்.. ஒருவேளை..??” மீரா கண்களை உருட்டியவாறு கேட்டாள்.

“வே..வேணாம் விடு..!!”

“ப்ச்.. இப்போ சொல்லப் போறியா.. இல்ல பளார்னு ஒன்னு விடவா..??” மீரா திடீரென உக்கிரமாக, அசோக் மிரண்டு போனான்.

“இ..இல்ல.. சொல்லிடுறேன்..!!”

“சொல்லு..!!”

“ஒருவேளை உன் கைல காசு இல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டியோன்னு..”

சொல்லிவிட்டு அசோக் மிரட்சியாக மீராவை ஏறிட்டான். அவள் எரிந்து விழப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ படுகூலாக இருந்தாள். கோக்கை எடுத்து ஒருமுறை உறிஞ்சிக் கொண்டவள், பிறகு கேஷுவலாக கேட்டாள்.

“என் அப்பாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கன்னு சொன்னேன்ல..??”

“ம்ம்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments