அன்புள்ள ராட்சசி – பகுதி 15

“அவருக்கு மொத்தம் சொத்து எவ்வளவுன்னு சொன்னனா..??”

“இ..இல்ல..!!”

“கொஞ்சம் கம்மி.. அறுபது கோடிக்கு கொஞ்சம் கம்மி..!!” மீரா அசால்டாக சொல்ல, அசோக் ஆவேன வாயை பிளந்தான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“மூணு பங்கு வச்சாலும்.. இருபது கோடிக்கு சொந்தக்காரி நான்..!! அந்த பிச்சைக்காசு நூத்தி நாப்பது ரூவாக்காக.. உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்னு நெனைக்கிறியா..?? ம்ம்..??” மீரா ஷார்ப்பாக கேட்க, அசோக் அவனையும் அறியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான்.

“சான்ஸே இல்ல..!!!”

“சந்தேகப்படுறல என்னை..??”

மீரா திடீரென முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சீரியஸ் குரலில் கேட்டாள். அசோக்கிடம் உடனே ஒரு பதற்றம். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு அவளை காயப்படுத்தி விட்டோமோ என்பது மாதிரியான குற்ற உணர்வு..!!

“ஹேய்.. மீரா.. அ..அப்டிலாம் இல்ல..”

“போ..!! நம்பாட்டி போ.. மனசுல சந்தேகத்தை வச்சுக்கிட்டு நீ என் கூட பழக வேணாம்..!! போ.. ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கு நான் காசு தந்துட்றேன்.. வாங்கிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே, மீரா ஹேண்ட் பேகை எடுக்க செல்ல அசோக் அவசரமாய் அவளை தடுத்தான்.

“ஐயோ.. என்ன மீரா இது.. நான் ஏதோ அறிவில்லாம..”

“நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!”

“ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!”

“ம்ம்.. பரவால விடு..!!”

“ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!”

“ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!”

“ம்ம்ம்ம்… ஓகே.. அப்போ.. நான் உன்னை சிரிக்க வைக்கவா..??”

“எப்படி..??”

“எனக்கு ஏதோ நிக் நேம் வச்சிருக்கேன்னு சொன்னேல..?? அது என்னன்னு கெஸ் பண்ணவா..??” அசோக் அவ்வாறு கேட்கவும்,

“ம்ம்.. ஓகே..!!” மீரா திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். அசோக் சில வினாடிகள் யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு கேட்டான்.

“ம்ம்.. தடிமாடு..??” அவன் அவ்வாறு கேட்கவும் மீரா குபுக்கென சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா…!! இல்ல..!!” அவளை சிரிக்க வைத்துவிட்ட திருப்தியில், அசோக்கின் முகத்திலும் இப்போது ஒரு பூரிப்பு.

“ம்ம்ம்.. அப்படினா.. கருங்கொரங்கு..??”

“ஹாஹாஹாஹா…!!”

“அதுவும் இல்லையா..?? ஓகே.. காட்டுப்பன்னி..??”

“ஹாஹாஹாஹா…!! ச்சோ.. ச்வீட்..!!!! பக்கத்துல வந்துட்ட.. ஹாஹா..!! ம்ம்ம்.. போதும் விடு.. நானே சொல்லிர்றேன்..!!”

“ஹாஹா..!! ஓகே.. சொல்லு.. வாட்ஸ் மை நிக் நேம்..??”

“ஹனிபனி..!!”

“ஹனிபனியா..??”

“ம்ம்..!! யு’ஆர் மை பம்கின் பம்கின்.. ஹலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங் சம்திங்.. ஹலோ ஹனிபனி..!!”

ஐடியா மொபைல் விளம்பர பாடலை.. அசோக்கை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி.. கண்களை ‘பட், பட்’ என சிமிட்டியவாறே.. குரலில் ஒரு கிறக்கத்துடன் மீரா பாட.. அசோக் அப்படியே உருகிப் போனான்..!! அவளுடைய குரல் அவனது காது வழியே புகுந்து.. இதயத்தை வருடி சில்லிட செய்தது..!! எழில் கொஞ்சி விளையாடுகிற அவளுடைய முகத்தையே.. ஏக்கமும் காதலுமாய் பார்த்தான்..!! ‘ஏதோ நேற்று அவசரத்தில் தவறான நம்பர் தந்துவிட்டாள்.. என் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள்.. இவளைப்போய் சந்தேகப் பட்டுவிட்டேனே..?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

ஆரம்பத்தில் இருந்த இறுக்க நிலை தகர்ந்து, இப்போது இருவரும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தனர். கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஃபுட்கோர்ட்டிலும் கூட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அசோக் பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக சொன்னான்.

“ஹேய்.. என் நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன் சொன்னேன்ல.. ந்யூ நம்பர் சொல்றேன்.. ஸேவ் பண்ணிக்கோ..!!”

“ம்ம்.. சொல்லு..!!”

“எதுல ஸேவ் பண்ணிப்ப..?? உன் செல்ஃபோனை எடுத்துக்கோ..!!”

“எங்கிட்ட செல்ஃபோன்லாம் இல்ல.. நீ நம்பர் சொல்லு.. நான் மைண்ட்ல ஸேவ் பண்ணிக்கிறேன்..!!” மீரா கேஷுவலாக சொல்ல, அசோக் இப்போது பக்கென அதிர்ந்தான்.

“என்னது..??? செல்ஃபோன் இல்லையா..?? அப்புறம் நம்பர் கொடுத்த..??”

“ஹப்பா..!! இல்லன்னா.. இப்போ எங்கிட்ட இல்லன்னு சொன்னேன்.. வீட்ல வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! மறந்து வச்சுட்டு வந்துட்டியா..??”

“இ..இல்லப்பா.. நான் செல்ஃபோன் அதிகமா யூஸ் பண்றது இல்ல.. எப்போவாவதுதான்..!! ஆக்சுவலா எங்கிட்ட செல்ஃபோன் இருக்குறதே ஒன்னு ரெண்டு முக்கியமான ஃப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா என் ஃபேமிலில யாருக்குமே தெரியாது.. தெரிஞ்சா அவ்வளவுதான்..!! உன்கிட்ட நான் நம்பர் குடுத்தது எனக்கு நீ கால் பண்றதுக்காக இல்ல.. நான் உனக்கு கால் பண்றப்போ.. நான்தான் கால் பண்றேன்னு நீ தெரிஞ்சுக்குறதுக்காக..!!” மீரா அவ்வாறு சொன்னது அசோக்கிற்கு குழப்பத்தையே உண்டுபண்ணியது.

“எ..என்ன சொல்ற நீ.. நீ செல்ஃபோன் வச்சிருக்குறது உங்க வீட்டுக்கே தெரியாதா..??”

“ஹ்ம்ம்..!! இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி..?? எங்க வீட்ல.. நோ டிவி.. நோ மூவி.. நோ இன்டர்நெட்.. நோ சாங்க்ஸ்.. நோ மேகஸின்ஸ்.. நோ பாய்-கேர்ல் ஃப்ரண்ட்ஷிப்..!!” மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகத்தில் எக்கச்சக்கமாய் குழப்ப ரேகைகள்.

“ஏ..ஏன்.. ஏன் அப்படி..??”

“அதெல்லாம் இருந்தா நாங்க கெட்டுப் போயிடுவோமாம்.. யார் மேலயாவது லவ் வந்துடுமாம்..!! எல்லாம் என் அப்பாவோட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்..!!”

“அவருக்கு லவ் பிடிக்காதா..??”

“ம்ஹூம்..!! லவ்ன்ற வார்த்தையே ஆகாது.. காதல் மேல வெறுப்புனா வெறுப்பு.. அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு..!!” மீரா சொல்ல, அசோக்கின் மனதுக்குள் இப்போது ஒரு மெலிதான பயம் பரவியது.

“ஓ..!! எதுக்கு அப்படி ஒரு வெறுப்பு..?? உ..உன்.. உன் அப்பா பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..??”

“ம்ம்.. சொல்றேன்..!!”

சொன்ன மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அசோக்கின் முகத்தை பாராமல் வேறெங்கோ பார்வையை செலுத்தினாள். சிறிது நேரம் அவ்வாறே வெறித்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

“என் அப்பா பேரு சந்தானம்..!!”

“ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??”

“ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!! நேத்து என் சொந்த ஊர் சொன்னேன்ல..??”

“ம்ம்.. காரைக்குடி..!!”

“எஸ்..!! அங்க இருக்குறப்போ அவர் பிஸினஸ் பண்ண பெயின்ட்டுக்கு நெறைய கலர்.. சென்னை வந்தப்புறம் பிஸினஸ் பண்ற பெயின்ட்டுக்கு ஒரே ஒரு கலர்தான்..!! ரெட்..!!!!”

“பு..புரியல..!!”

“எங்க ஏரியால என் அப்பா ஒரு பெரிய புள்ளி அசோக்.. நெறைய பாலிடிஷியன்சோட லிங்க் இருக்கு அவருக்கு..!! அடிதடி.. ஆள் கடத்தல்.. கமிஷன்.. கட்டப் பஞ்சாயத்து.. ரியல் எஸ்டேட் ஃப்ராட்.. ப்யூர் ரவுடிசம்..!!!! என் அப்பா மாதிரி ஒரு இரக்கம் இல்லாத மொரட்டு ஆளை நீ பாத்திருக்கவே மாட்ட..!!”

“ஓ..!!!!!” சொல்லும்போதே அசோக்கின் அடிவயிற்றில் ஒரு கிலி கிளம்பியது.

“அவர் சின்னப்பையனா இருக்குறப்போ.. அவரோட அக்கா.. அதாவது என் அத்தை.. அவங்க கல்யாணத்துக்கு மொத நாள்.. காதலிச்ச பையனோட ஓடிப் போய்ட்டாங்க..!! அவமானம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் தூக்குல தொங்கிட்டாங்க.. அப்பா அநாதை ஆயிட்டாரு..!! அப்போ வந்தது அவருக்கு காதல் மேல வெறுப்பு.. இன்னைக்கு வரைக்கும் அந்த வெறுப்பு அவர் மனசுல கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கு.. காதலே பிடிக்காது அவருக்கு..!! எந்த அளவுக்கு பிடிக்காதுன்னா.. ஒருதடவை.. எங்க வீட்டு சமயல்காரியும், வாட்ச் மேனும் லவ் பண்றாங்கன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்.. அப்பாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.. அவங்கள என்ன பண்ணார் தெரியுமா.. அவங்க ரெண்டு பேர் மேலயும் திருட்டுப் பட்டம் கட்டி.. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு..!!”

“ஐயையோ..!! அவ்வளவு வெறுப்பா..??”

“ஆமாம்.. சொன்னா நம்ப மாட்ட நீ..!! இதோ.. இங்க பாரேன்..!!”

மீரா சொல்லிக்கொண்டே, தனது இடது கையை அசோக்கின் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கைக்கு கீழே குறுக்கு வெட்டில் நீளமாக ஒரு தழும்பு..!! பார்த்ததுமே அசோக் பதறிப் போனான்..!!

“ஐயோ.. என்ன மீரா இது.. தழும்பு..??”

“நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!! ‘இனிமே எவன் கூடவாவது நீ பேசுறதை பாத்தேன்.. கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுவேன்’னு சொன்னாரு..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை பாவமாக பார்த்தான்.

“ச்சே.. உன் அப்பா இவ்வளவு மோசமானவரா..??”

“ம்ம்..!!”

“இப்படி ஒருத்தருக்கு மகளா பொறந்துட்டு.. நீ லவ் பண்ண ஆசைப்படுறதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு மீரா..!!”

“அதுக்கு காரணம் இருக்கு..!!”

“என்ன..??”

“சினிமா பாக்ககூடாதுன்னு அப்பா கண்டிஷன் போட்டிருந்தாலும்.. நான் அப்பப்போ என் ஃப்ரண்ட்சோட போய் திருட்டுத்தனமா ஏதாவது சினிமா பாத்துடுவேன்.. அப்படி ரீசண்டா பாத்ததுதான்.. காதல் உல்லாசம்..!!” சோகமாக சொல்லிக்கொண்டிருந்த மீரா, இப்போது திடீரென உற்சாகமாகி..

“ஹேய்.. நீ அந்த படம் பாத்திருக்கியா..??” என்று அசோக்கிடம் கேட்டாள்.

உடனே அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. ‘காதல் உல்லாசமா..?? எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..?? ஆங்.. அன்னைக்கு ஆபீஸ்ல ஃப்ரண்ட்ஸ்லாம் எமோஷனலா பாத்துட்டு இருந்தப்போ.. ‘என்ன எழவெடுத்த படம்டா இது’ன்னு கேட்டனே.. அந்தப்படம்தான..??’

“இ..இல்ல மீரா.. நான் பாத்தது இல்ல..!!”

“ஐயோ.. என்ன பையன் நீ..?? சச் எ க்ரேட் மூவி யு நோ..?? இன்னும் அந்தப்படம் பாக்காம என்ன பண்ணிட்டு இருக்குற..?? நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது இன்னைக்குள்ள அந்தப்படத்தை நீ பாத்துடனும்.. சரியா..??”

மீரா கட்டளையிடுவது மாதிரி சொல்ல, அசோக்கின் மனதுக்குள் ஒரு கற்பனைப்படம் ஓடியது. தலையை சாய்த்து, கண்களை மேலே சுழற்றி அந்த கற்பனைப்படத்தை கண்டான். ‘மச்சி.. காதல் உல்லாசம்னு ஏதோ மூவி இருக்காமே.. ரொம்ப நைஸ் மூவின்னு மீரா சொன்னா.. இன்னும் அந்தப்படம் பாக்கலையான்னு செல்லமா கோவிச்சுக்கிட்டா..?? உங்கட்ட அந்த மூவி சாஃப்ட் காப்பி இருக்காடா..??’ என்று அசோக் கேட்க, அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டு முறைத்தனர். பிறகு ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று அவன் முகத்திலேயே காறித் துப்பினர்..!! அசோக் படக்கென தலையை சிலுப்பிக் கொண்டான். முகத்தில் இல்லாத எச்சிலை இருகைகளாலும் துடைத்துக் கொண்டான்.

“ஓகே மீரா.. நான் எப்படியாவது பாத்துடறேன்..!! ஆமாம்.. அந்த படத்துக்கும் நீ சொல்ல வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??”

“ஆக்சுவலா அந்தப்படம் பாத்ததும்தான் எனக்கு லவ் பண்ற ஆசையே வந்தது.. ‘ச்ச.. காதல்ன்றது இவ்வளவு அற்புதமான விஷயமா.. இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமே’ன்னு தோணுச்சு..!! அந்தப்படத்துல ஒரு டயலாக் வரும்.. ‘நமக்கு புடிச்சவங்கள லவ் பண்றதை விட.. நம்மள புடிச்சவங்கள லவ் பண்றதுதான் ரியல் லவ்வு’னு..!! நைஸ் டயலாக்ல..??” மீரா கண்கள் பளபளக்க கேட்க,

“ஹிஹி.. எஸ்..!!” அசோக் வேண்டாவெறுப்பாக இளித்தான்.

“ம்ம்.. அதே மாதிரி நீ எனக்கு கெடைச்ச.. பட்டுன்னு லவ் பண்ணிட்டேன்.. ஐ’ம் ஸோ லக்கி யு நோ..?? ஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரித்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தவளாய்,

“ஹேய்.. என் அப்பா பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல.. டாபிக் மாறிடுச்சு..!!” என்றாள் இன்ஸ்டன்ட் சீரியஸ்னசுடன்.

“இ..இன்னும் அவரை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..??”

“இருக்கு..!! ஆக்சுவலா என் அப்பா பத்தி எதுக்கு உன்கிட்ட சொன்னேன் தெரியுமா..??”

“எதுக்கு..??”

“நீ என்னை லவ் பண்றதா இருந்தா.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்.. அதுக்குத்தான்..!!”

“எ..எல்லாத்துக்கும்னா..??” அசோக்கிடம் இப்போது நிஜமாகவே ஒரு மிரட்சி.

“உனக்கு எப்படி சொல்றது..?? ம்ம்ம்… ம்ம்ம்… ஆங்.. என் அக்கா சொன்னேன்ல..??”

“ஆமாம்..!!”

“கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா.. ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினா.. அவனுக்காக என்னவேனா செய்வான்னா பாத்துக்கோயேன்.. அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தா..!!”

“ஓ..!! இப்போ என்னாச்சு..??”

“என்னாச்சுன்னே தெரியல அசோக்..!! ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்.. எங்க தேடியும் அவன கண்டுபிடிக்க முடியல..!! அப்புறம்.. அவன் ஐடில இருந்து அக்காவுக்கு ஒரு மெயில் மட்டும் வந்தது..!!”

“என்னன்னு..??”

“நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு..!!”

“ஷிட்..!!”

“அக்கா அப்படியே உடைஞ்சு போயிட்டா.. சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணினா.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவளை காப்பாத்தினோம்..!!”

“ஓ..!! இப்போ எப்படி இருக்காங்க..??”

“இப்போ அக்கா நார்மல் ஆகிட்டா.. அந்தப் பையனை மறந்துட்டா.. ‘உன்னை ஏமாத்திட்டு போனவனுக்காக நீ ஏன் சூசயிட் பண்ணிக்கனும்’னு ஆளாளுக்கு சொல்லி சொல்லி.. எப்படியோ அவளை தேத்தினோம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் அவ சகஜமா இருக்கா.. எப்போவும் போல சிரிக்க ஆரம்பிச்சிருக்கா..!!”

“குட்..!!”

“அந்தப்பையன் காணாம போனதுல.. அக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!”

“என்ன..??”

“அந்தப் பையனை அப்பாதான் ஏதாவது பண்ணிருப்பாரோன்னு..!!” மீரா கிசுகிசுப்பாக சொன்னவிதத்திலேயே அசோக்கிற்கு கிலி கிளம்பியது.

“ஓ..!!!! ஏ..ஏன்.. அப்படி சந்தேகப்படுற..??”

“தெரியல.. என் மனசுக்கு அப்படி தோணுது..!! அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா.. அப்பா அந்தப் பையனை சும்மா விட்ருக்க மாட்டாரு..!! அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி.. அந்த மாதிரி மெயில் அனுப்ப வச்சு.. அப்புறம் அவனை எங்கயாவது கொன்னு பொதைச்சிருந்தா..??” விழிகளை விரித்து வைத்தவாறு மீரா அப்படி கேட்க,

“ஹேய்… எ..என்ன நீ.. இ..இப்படிலாம் டெரரா யோசிக்கிற..??” அசோக் நடுக்கத்துடன் சொன்னான்.

“இல்ல அசோக்.. என் அப்பா அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள்தான்.. அதனாலதான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்..!!”

“எ..எதனால..??”

“இப்போ நாளைக்கே நீ என்னை லவ் பண்றேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ.. அவர் உன்னை என்ன வேணா செய்யலாம்..!! உன்னை கடத்தி கொண்டு போய் கட்டிப்போட்டு சித்திரவதை பண்ணலாம்.. கண்ணுல ஊசி ஏத்தலாம்.. நகத்தை பிச்சி பிச்சி எடுக்கலாம்..!! இந்த ஹாக்ஸா ப்ளேட் இருக்குல.. அதை வச்சு உன் கால் நரம்பை அப்படியே கறகறன்னு..”

மீரா சொல்லிக்கொண்டே போக.. அசோக் குலைநடுங்கிப் போனான்..!! பயத்தில் மூழ்கியிருந்த அவனுடைய இதயம்.. ‘பக்.. பக்.. பக்..’ என அடித்துக் கொண்டது..!! அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பார்க்க.. தான் எழுதி வைத்திருந்த ஹாரர் ஸ்க்ரிப்டை விட படு பயங்கரமாக இருந்தது..!! அசோக் தலையை உலுக்கி, அந்த பயத்தை உதற முயன்றான்..!!

தன்னுடைய குடும்பத்துக்கும் மீராவின் குடும்பத்துக்கும் இருக்கிற, இமாலய முரண்பாடு அவன் மனதை இப்போது சுருக்கென்று தைத்தது. ‘பேசி சம்மதிக்க வைத்துவிடலாம்..’ என்று தனது குடும்பத்தினர் தந்திருந்த தைரியம், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. இவளை கைபிடிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments